Friday 3 April, 2009

என் மனைவியும் சைடு நவீனத்துவம் மற்றும் பூரிக்கட்டையும்…


தொடரும் வருகைகளுக்கு நன்றி…என்னுடைய முதல் பதிவு கிடைத்த வரவேற்பு பற்றி என் மனைவிக்கு மிகவும் சந்தோசம்…

என்னங்க உங்க பதிவை இவ்வளவு பேர் படிக்கிறாங்களா…

என்னடி..கொழுப்பா…இன்னும் ஒரு வருசத்துல பாரு…ஐயா பின்னவினத்துவ எழுத்தாளரா ஆகிடுவேன்….

(சந்தேக பார்வையுடன்) பின்னாடி என்ன நவீனம் வேண்டி கிடக்கு…..

(பயத்துடன்..) அய்யோ..தப்பா எடுத்துகாதம்மா…அது சொன்னா உனக்கு புரியாது..ஏன்னா எனக்கே அது தெரியாது…
நானும் தமிழ் இலக்கியம் படிக்கட்டா….எனக்கும் ரெண்டு புத்தகம் வாங்கி தாங்களேன்….

ஐயோ..ஏன் இந்த் திடீர் முடிவு..எதுனாலும் பேசி தீர்க்கலாம்டி…

நீங்க வாங்கி தரீங்க…அவ்வளவுதான்…

(ரெண்டு புத்தகம் வாங்கித் தந்தேன்………முதல் வாரம் முடிந்தது).

என்னம்மா …….புக் படிச்சியா……

என்னங்க இப்படி பண்ணீட்டீங்க… அசிங்க அசிங்கமா இருக்கு புத்தகத்தில ……

அடிபாவி….அதை எல்லாம் ரசிக்கனும்டி…அது எல்லாம் வாழ்க்கையோட தத்துவம்.. பின்னவினத்துவம்…அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா…சரி…அவரோட வெப்சைட்டாவது படி…

(இரண்டு வாரங்கள் கழித்து)
என்னம்மா….தமிழ் இலக்கியம் எப்படி போகுது…

போடாங்க…(கொலை வெறி அதிகமானா செல்லமா இப்படித்தான் பேசுவா)…என்ன சைட் அது…. ஒன்னு அசிங்க அசிங்கமா எழுதுராறு..இல்ல யாரையாவது திட்டுராரு…இல்லாட்டி ஆட்டோ பிடிக்ககூட காசு இல்லன்னு புலம்புராரு….அரபி,மலையாள இலக்கியமன்னு மொக்கை போடுராரு…..அப்புறம் நானெல்லாம் தைரியமான ஆளுனு சொல்லுராரு…. இலங்கை தமிழர்கள் பற்றி பேச சொன்னா….நானெல்லாம் சாதாரண ஆளு வீட்டுக்கு ஆட்டோ வருமுனு பயப்பிடுராரு…வேற சைட் கிடைக்கலையா உனக்கு…

அடிபாவி உனக்கு எப்படி அவர் அருமை பத்தி தெரியபோகுது….சரி இன்னும் ரெண்டு புத்தகம் வாங்கி தர்ரேன் படி….

போதும் உன்னோட சகவாசம்…லேட்டு ஆகுது…மானாட மயிலாடா பார்க்கனும்…குஷ் மேடம் என்ன்ம்மா டான்ஸ் ஆடுராங்க தெரியுமா…..

அது என்னடி குஷ் …..பேரை முழுசா சொல்லமாட்டியா…..ஒரு மாதிரி இருக்கு என்றேன் மூக்கை பொத்தியபடி…..

சைடுவாக்கில் பூரிக்கட்டை பறந்து வந்தது…..

6 comments:

நிகழ்காலத்தில்... said...

நல்லா வாரு வாரீட்டீங்க...

வாழ்த்துக்கள்..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//…என்ன சைட் அது…. ஒன்னு அசிங்க அசிங்கமா எழுதுராறு..இல்ல யாரையாவது திட்டுராரு…இல்லாட்டி ஆட்டோ பிடிக்ககூட காசு இல்லன்னு புலம்புராரு….அரபி,மலையாள இலக்கியமன்னு மொக்கை போடுராரு…..அப்புறம் நானெல்லாம் தைரியமான ஆளுனு சொல்லுராரு…. இலங்கை தமிழர்கள் பற்றி பேச சொன்னா….நானெல்லாம் சாதாரண ஆளு வீட்டுக்கு ஆட்டோ வருமுனு பயப்பிடுராரு…வேற சைட் கிடைக்கலையா உனக்கு…//



??????11!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Unknown said...

//அறிவே தெய்வம் சொன்னது…
நல்லா வாரு வாரீட்டீங்க...

வாழ்த்துக்கள்...//

நன்றி அண்ணா...

Unknown said...

//SUREஷ் சொன்னது…
//…என்ன சைட் அது…. ஒன்னு அசிங்க அசிங்கமா எழுதுராறு..இல்ல யாரையாவது திட்டுராரு…இல்லாட்டி ஆட்டோ பிடிக்ககூட காசு இல்லன்னு புலம்புராரு….அரபி,மலையாள இலக்கியமன்னு மொக்கை போடுராரு…..அப்புறம் நானெல்லாம் தைரியமான ஆளுனு சொல்லுராரு…. இலங்கை தமிழர்கள் பற்றி பேச சொன்னா….நானெல்லாம் சாதாரண ஆளு வீட்டுக்கு ஆட்டோ வருமுனு பயப்பிடுராரு…வேற சைட் கிடைக்கலையா உனக்கு…//
//

வேற யாரு...நம்ம பாரு நிவேதிதா அண்ணாச்சி தான்...


??????11!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பிரதீப் said...

pinnaadi enna naveenam vendi irukku...hahaha! madurai kusumbu! kalakku

Thamiz Priyan said...

கலக்கல்! நல்லா எழுதி இருக்கீங்க

Post a Comment