Sunday 26 April, 2009

தமிழனா பொறந்தது குத்தமாண்ணே….

வாழ்க்கையே வெறுப்பா இருக்குண்ணே. எங்க போனாலும் அடிக்கிறாய்ங்கண்ணே..ஏண்டா தமிழனா பொறந்தோம்னு இருக்குண்ணே

இலங்கையிலே தமிழனை துடிக்க, துடிக்க கொல்றாய்ங்கண்ணே..இத தட்டிக் கேட்க முடியாம நாமெல்லாம் உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கோம்ணே..ஏண்ணே, தெரியாமத்தான் கேக்குரேன்..நாமெல்லாம் ஒரே இனம் தானே..தமிழர்களைக் காப்பாத்த ஏண்ணே ஆயிரத்தெட்டு இயக்கங்கள்..எல்லாரும் ஒரே இயக்கமா ஏண்ணே போராட முடியலை..அதிமுக, திமுக, பா.., .தி.மு.(அய்யோ..)….எல்லாம் ஓட்டுக்குண்ணே.. நேத்துக்கி வரைக்கும் எங்க தெருவுல கஞ்சா குடிச்சுக்கிட்டுருந்த ஒரு ஆளு இன்னைக்கு கையில நோட் எடுத்துக்கிட்டு கலெக்சன் வராண்ணே..கேட்டா இலங்கைத் தமிழர்களுக்காம்..அவன் அதை வாங்கி என்ன பண்ணுவான்னு தெரியும்ணே..கொடுமைண்ணேஎனக்கு தெரிஞ்சு ஒரு ஆள்தான், இன்னும் இலங்கைத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கலை, அவர்தாண்ணே ராஜபக்சே..வர்ற கலெக்சன் பார்த்தா அவரும் ஒன்னு ஆரம்பிச்சிடுவார் போல இருக்குண்ணே

நேத்தைக்கு பக்கத்து வீட்டு குஜராத்தி பையன்(10 வயசுண்ணே), வந்து முதுகுல குத்திட்டு போறான்..ஏன்டா குத்திணேன்னு கோவப்பட்டா, “அங்கிள், கர்னாடகா அடிச்சா வாங்கிகிரீங்க, கேரளாக்காரன் அடிச்சா வாங்கிகிரீங்க, ஸ்ரீலங்காகாரன் அடிச்சா வாங்கிகிரீங்க, நான் அடிச்சா மட்டும் ஏன் கேட்குறீங்க…” ன்னு சொல்லுராண்ணே..எப்படியெல்லாம் பேசுறாயிங்க பாருங்கண்ணே

சரி, தெருவுலதான் அடிக்கிறாய்ங்கன்னு, டி.வி போட்டா, பேரரசு மூஞ்சிய க்ளோசப்ல காமிச்சிட்டாயிங்க போல, என் பொண்டாட்டி மயக்கம் போட்டு விழுந்துட்டா..ஆஸ்பத்திரி அது, இதுன்னு ஏகப்பட்ட செலவுண்ணேஅவரு சிவகாசில பஞ்ச் டயலாக் பேசுரப்பவே யாராவது தட்டிக் கேட்டிருந்தா என் பொண்டாட்டிக்கு இந்த நிலைமை ஆயிருக்குமாண்ணேஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே..

பொண்டாட்டியை டிஸ்சார்ஜ் பண்ணி, அவ கேக்குறான்னு மானாட மயிலாட போட்டா, குஷ் மேடமும், கலா அக்காவும் ஒரு ஆட்டம் போட்டதுல, நிலநடுக்கம் உண்டாகி,லேப்டாப் உடஞ்சு போயி ரொம்ப செலவுண்ணே..ஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே.

டி.வி பார்த்துக்கிட்டு இருந்த பாட்டி, திடிர்ண்ணு மயக்கம் போட்டுட்டாங்கண்ணேதண்ணி தெளிச்சு எழுப்பி உக்கார வச்சா, “செல்வம் லாக்கப்புல அடிபட்டு செத்துருவானான்னு கேக்குறாங்கண்ணே..தாத்தா யாருடி செல்வம்ன்னு சந்தேகமா கேட்கதிருமதி செல்வம்சீரியல்ல வர்ற ஹீரோவாம்ணே..இப்ப தாத்தா மயக்கம் போட்டு விழுந்துட்டாருண்ணே,,,ஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே.

என்னிக்கும் இல்லாம பொண்டாட்டி பூஜை அறையில ரொம்ப நேரம் சாமி கும்பிட்டாண்ணே..எனக்கு கண் கலங்கிடுச்சுண்ணே..புருசன் நல்லா இருக்கணும்தானே வேண்டிக்கிட்டேன்னு கேட்டா,,”இல்லிங்க, ஏர்டெல் சூப்பர் சிங்கர் காட்டு அட்டை(wild card – மன்னிச்சுருங்க ராமதாஸ் அய்யா) ரவுண்டுல ராகினிஸ்ரீ செலெக்ட் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேண்ராங்க..ஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே

தாத்தா சன் செய்திகள் பார்ப்பாரேண்ணு சன் செய்திகள் போட்டேண்ணே…”40 தொகுதிகளும் ஜெயிப்பேன்னுடி.ராஜேந்தர் சொல்ல, தாத்தா விழுந்து, விழுந்து சிரிக்க இருந்த ஒரு பல்லும் காலிண்ணேஅதே நேரத்துல டி.வி பார்த்த என் அஞ்சு வயசு அக்கா பொண்ணு டி.ராஜேந்தரை பூச்சாண்டின்னு நெனச்சு பயத்துல சிலை ஆகிட்டாண்ணேபேச்சு மூச்சு வரலை..மசூதில கூட்டிட்டு போயி மந்திரிச்சு, நிறைய செலவுண்ணேபச்ச மண்ணுன்னே.

சரி கொஞ்ச நேரம் பிளாக் படிப்போம்னு இன்டெர்நெட் பக்கம் வந்தா, அதிர்ஷ்டப்பார்வை(லக்கி லுக்- மறுபடியும் மன்னிச்ச்ருங்க ராமதாஸ் அய்யா) அண்ணனும், சக்கரை அண்ணனும் கன்னா பின்னான்னு அடிச்சுக்கிராயிங்கண்ணே..

ஒரு தமிழனுக்கு வர்ற சோதனைய பாருங்கண்ணேஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே  

11 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

வேதனையை கூட சிரிக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க..நல்லா இருக்கு நண்பா

வெற்றி-[க்]-கதிரவன் said...

//தமிழனா பொறந்தது குத்தமாண்ணே…. //

கண்டிப்பா குத்தம்தான்

Anonymous said...

Nicely narrated.

- Kiri

Anonymous said...

Tamil eelam supporters in Tamilnadu
http://www.facebook.com/group.php?gid=74525049402#/group.php?gid=74525049402

எட்வின் said...

நல்லா இருக்குண்ணே... எதோ முன் ஜென்ம பாவமாம்ல :(

தீப்பெட்டி said...

:-)))

பிராட்வே பையன் said...

உன் குத்தமா என் குத்தமா யாரை நாம
குத்தம் சொல்ல?


ஹஸன் ராஜா

சரவணன் said...

நல்லா இருக்குண்ணே உங்களோட கருத்து.
தமிழனா பிறந்தது குற்றம் இல்லணே வாழுகின்ற வாழ்க்கை தான் குற்றமாக இருக்குனு நினைக்கிறேன்.

SUBBU said...

ஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே…

Suresh said...

நல்லா இருக்கு நண்பா

//தமிழனா பொறந்தது குத்தமாண்ணே…. //

கண்டிப்பா குத்தம்தான்

Suresh said...

http://sureshstories.blogspot.com/2009/04/50-sakkarais-50th-post-exclusive_27.html

Post a Comment