Wednesday 11 December, 2013

சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா சார்

மகனின் உடல்நிலை காரணமாக ஒரு வாரம் வீட்டிலேயே தங்க வேண்டியிருந்த்து. காலையில் சாப்பாடு, நடுவே தூக்கம், மதியம் சாப்பாடு பின்பு ஒரு தூக்கம், இரவில் சாப்பாடு, பின்பு நீண்ட தூக்கம். வடிவேலு சொல்லியது போல “சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா சார்..இருக்குற எல்லா டவுட்டும் வந்து தொலைக்கும். நடுநடுவே இது போல  “ஊர் ஏன் சார் இப்படி இருக்குது..இது மாறாதா சார்..” என்று ஏதோ புதியதாக கேள்வி கேட்பது போன்ற பதிவு எழுதுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..சும்மா இருந்தாதான் இது போன்று யோசிக்க தோன்றும் என்ற வரலாற்று உண்மை இன்றுதான் புலப்பட்டது.

கிடைத்த வேளைகளில், எனக்கு உற்ற நண்பனாக இருந்த்து, தினத்தந்தியும், அவ்வப்போது கிடைக்கும், இணைய இணைப்பும் தான். கடைசியாக தினத்தந்தி செய்தித்தாள் படித்து, நான்கு வருடங்கள் இருக்கும். கண்டிப்பாக ஏதாவது புரட்சி செய்திருப்பார்கள் என்று ஆவலாக பார்த்தபோது, நான் பார்த்த ஒரே புரட்சி “கன்னித்தீவு” கதைப் பட்த்தை கலரில் அமைத்த்துதான். என்ன ஒரு புரட்சி.ஆங்க்..மறந்துவிட்டேன், இன்னொரு புரட்சி, விளம்பரங்களுக்கு நடுநடுவில் ஆங்காங்கு செய்திகளும் வந்திருந்தன.

ஆனால் தினமலர் போல “ஒரு சதக், குபீர், திடுக், கபால்” போன்ற தலைப்புகள் வராதது கொஞ்சம் ஆறுதல். டீசண்டாக “கள்ள காதலில் ஈடுபட்ட வாலிபர் குத்திக்கொலை”, “குடித்துவிட்டு மணமேடைக்கு வந்த மணமகனை மறுத்த பெண்” என்று எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஒரு பக்கம் முழுவதும், சினிமா விளம்பரங்களா அடுக்கியிருந்தனர். அதுவும் சில படங்களை “வரலாறு காணாத வெற்றி”, தியேட்டர் முழுக்க வெடிச்சிரிப்பு”,”இளைஞர்கள் கொண்டாடும்” என்று தலைப்பிட்டபோது, பிதாமகனில் சூர்யா, “சரோஜாதேவி, யூஸ் பண்ணின சோப்பு டப்பா சார்..வாங்க சார், வாங்க..” என்று கூவுவது போல இருந்த்து..

மணப்பந்தல் பக்கமும் மாறவில்லை. அதே “நன்றாக  படித்த, உயரமாக, சிகப்பாக, **** இனத்தில், வீட்டை முறையாக கவனித்து கொள்ளும், மணமகள் தேவை..”. இப்படி விளம்பரம் கொடுத்த அந்த அரவிந்த் சாமியை ஒரு நாள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது..ங்கொய்யால, அனைவரும், ஐஸ்வர்யாராய்க்கு ஆசைப்பட்டால், மற்றவர்களெல்லாம் எங்கு செல்வது. அதிலும், இன்னொரு விளம்பரம் பார்த்தபோது, பி.பி கண்டபடி எகிறியது. அது,

“ஆன்சைட்டில்(அமெரிக்கா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை) மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும், உயரமான, படித்த(ங்கொய்யால அப்பறம் எப்படிடா ஆன்சைட்), சிகப்பான, சென்னையில் சொந்த வீடு வைத்திருக்கும் மணமகன் தேவை..”

இரண்டு விஷயங்கள் மட்டும், இதில் தெரிந்து கொண்டேன்..

“மணமகன்/மணமகள்” கண்டிப்பாக சிகப்பாக இருக்கவேண்டும்.

“ஒரு ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ரேஞ்சுக்கு மணப்பெண்/மணமகன் கிடைத்தால் தேவலாம்..”

நாட்டில் எத்தனை சாதிகள் இருக்கின்றன என்று தெரியவேண்டுமானால், நேராக இந்தப் பக்கத்திற்கு வந்துவிடுங்கள்..

அடுத்து மாவட்ட செய்திகள் என்று ஒரு நாலு பக்கத்தை நிரப்புகிறார்கள்..யப்பா, படித்துவிட்டு, கையில் ரத்தம், கித்தம் இருக்கிறதா என்று ஒருதடவை பார்த்து விடுங்கள். அவன் பொண்டாட்டியை, இவன் இழுத்துட்டு ஓடிட்டான், இவன் பொண்டாட்டியை அவன் இழுத்துட்டு ஓடிட்டான். வாலிபர் பழிக்கு பழியாக கழுத்தை அறுத்து கொலை, மாமியாருடன் ஓட்டம், மூளை சிதறி விழுந்தது, வாலிபர் தற்கொலை”
கொஞ்சம் ஆறுதலான ஒரே பக்கம் விளையாட்டு மற்றும் வணிகவியல் செய்திகள். படிக்க கொஞ்சம் டீடெய்லாக இருக்கின்றன.

படித்த அனைத்துப் பக்கங்களிலும், இன்னமும் எனக்கு புரியாத, அல்லது புடிபடாத ஒரே பகுதி, “ஆண்டியார்”. அரைகுறையாக ஆடை அணிந்த ஒரு பெண், ஒரு ஆணை ஆசையாக பார்ப்பதுபோல ஒரு படம் அதற்கு பக்கத்தில் நாம்ம் போட்ட ஆண்டியார் பாடுகிறார்..”இப்படி, இப்படியே பூட்டி கொண்டால், எப்படி, எப்படி நான் திறந்திடுவேன்..”
என்ன்ங்கய்யா இது..இந்த பாட்டும், படமும் எதற்கு, அல்லது யாருக்கு. இதை யோசித்து, யோசித்து, நாலு பெரியவர்களிடம் கேட்டால் “பாட்டு சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது” என்கிறார்கள்..யாருக்காவது தெரியுமா..??

பொதுவாக சொல்லவேண்டுமென்றால், தினத்தந்தியை எவ்வளவுதான் விமர்சனம் செய்தாலும், காலை வேளைகளில், அதைப் படித்தபின்புதான், ஒரு நாள் பூர்த்தியான உணர்வு. நம் போன்ற நடுத்தரவர்க்கம் படிக்கும் வகையில், எளிமையான கட்டமைப்பு, முடிந்தவரை விளக்கமான செய்திகள் என்று தவிர்க்கமுடியாத்து போல் தான் இருக்கிறது..


அப்புறம் பொழுது போகாமல் கே.டிவியில் “ரெட்” என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப்படத்தில் அஜீத், “ஹல்லோ..ஹலோ..எங்க ஓடுறீங்க..கொஞ்சம் நில்லுங்க.ஹல்லோ..”

Monday 9 December, 2013

சுத்தம் என்பது நமக்கு



மூன்று நாட்களாக பையனுக்கு இடைவிடாத காய்ச்சல். தந்தைகளுக்கு வாழ்க்கையின் கொடுமையான தருணமே, பிள்ளைகள் வலியால் துடிக்கும்போதுதான். எதற்கு அழுகிறான், ஏன் அழுகிறான் என்று தெரியாமல், மகன் விழுந்து, விழுந்து அழும்போது பார்க்க கொடுமையாக இருக்கும்.

இரத்த பரிசோதனை எடுத்து பார்த்தபோது, டைபாய்ட் என்று சொன்னார்கள். டெங்கு வரவில்லை என்று சந்தோசப்படுவதா, அழுவதா என்று தெரியவில்லை. 

எதுவும் சாப்பிட அடம்பிடிக்கிறான். சகஜமாக விளையாட முடியவில்லை. எப்போதும் அழுகைதான். காய்ச்சல் வேறு 104 பாரன்ஹீட். படிபடியாக காய்ச்சல் குறைந்தாலும், இன்னும் அவன் சகஜமாகவில்லை. ஏதோ ஒரு கண்டத்திற்கு இழுத்து வந்தாற் போல உணர்கிறான். மனிதர்களை கண்டால் அலறுகிறான்.

டைபாய்ட் பற்றி விவரங்கள் படித்தேன். சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் உணவினால் டைபாய்ட் பரவுவதாக சொல்கிறார்கள். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், அதிகம் இந்த நோய் பரவுவதாக சொல்கிறார்கள்.

எப்போதும் பார்த்த மருத்துவமனைதான். ஆனால் இப்போது பார்க்கும்போது அசூசையாக இருக்கிறது. இத்தனைக்கும் நான் மகனை கொண்டு சென்றது, தனியார் மருத்துமவனை. எங்கு பார்த்தாலும் , எச்சில் துப்பிய கறைகள். அதில் ஈக்கள் மொய்க்கின்றன. கழிவறை பக்கம்,சாக்கடை தண்ணீர் தேங்கி, கொசுக்கள் மொய்த்து கொண்டு இருக்கின்றன.
அதற்கு பக்கத்திலேயே, கவலை தோய்ந்த முகங்களோடு, பிள்ளைகளை அணைத்து கொண்டு பெற்றோர்கள். காய்ச்சலோடும், வயிற்று வலியோடும், அம்மா மடியில் சாய்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள். “டோக்கன் போடணும் சார்” கறாராக பேசும் உதவியாளர்கள். “ரிச் கெட் ரிச்சர், புவர் கெட் புவர்.” இட்த்திற்கு சம்பந்தமே இல்லாமல் சத்தமாக ஹாலில் ஓடிகொண்டிருக்கும், டி.வியில் ரஜினி. அதையும் ஆர்வத்தோடு பார்த்து கொண்டிருக்கும், ஆண்களும், பெண்களும்.

இந்த மொத்த சூழ்நிலையும் பார்க்கும்போது, கடவுளை காண்பதற்கு அனைவரையும் க்யூவில் நிற்பதுபோன்ற உணர்வு. பவ்யமாக, பயந்து, பயந்து உள்ளே செல்லவேண்டியிருக்கிறது. “என்னா செய்யுது..” இதுதான் முதல்வார்த்தை. பேசுவதை கவனிப்பாரா, இல்லையா என்று தெரிவதற்குள், அடுத்த பதில் வந்து விழுகிறது..”டெஸ்ட் எடுத்திருங்க”

“சார் காய்ச்சல் சரியாகிடுமா” என்று பயந்து பயந்து கேட்டால், “ம்..அதெல்லாம் ஆகிடும்.” அடுத்து என்று வாசலில் உதவியாளரை பார்க்கிறார்..உதவியாளர் வந்து “வாங்க சார்..” என்று இழுத்து செல்லாத குறையாக இழுத்து செல்கிறார்கள்..

அடுத்த வார்த்தை பேசுவதற்குள், அவருடைய செல்பேசி அழைக்கிறது..”ஓகே..ஓகே..முடிச்சிடலாம், சாதாரணம்தான்..” என்று பேசிக்கொண்டே, “இன்னும் நீங்க கிளம்பலையா” என்று பார்க்கிறார். அவமானத்தில் கூனிகுறுகி வெளியே வந்தால், குழந்தையை அணைத்து கொண்டு, கண்ணில் பயத்துடனும், ஏக்கத்துடனும், கடவுளை காண்பதற்கு நிற்கிறார் அடுத்த பெற்றோர்..

மருந்துகளை வாங்கி கொண்டு வெளியே வந்தால் “******** குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை” என்ற பெயிண்ட் போன போர்டு நம்மை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறது.  அதற்கு கீழே, சாக்கடை தண்ணீரும், குப்பையும், மக்கி போய், செத்த எலி ஒன்றின் மேல் ஈக்கள் மொய்த்து கொண்டிருக்கின்றது.

“ஓட, ஓட விரட்டி படுகொலை..உயிரோடு எரிப்பு”, அடுத்த டீ கடையில் தினத்தந்தி வெளியில் தொங்கிகொண்டிருக்கிறது..

பக்கத்து தெருவில் கல்யாண வீட்டில் பாட்டுச்சத்தம் காதை பிளக்கிறது..


“சுத்தம் என்பது நமக்கு, சொர்க்கம் உள்ள வீடுதான்...”

Saturday 7 December, 2013

சொர்க்கமே என்றாலும்...



அமெரிக்க விசா முடிந்து தாய்நாட்டுக்கு துரத்தி அல்லது அனுப்பி(என்று டீசண்டாக சொல்லலாம்) விட்டார்கள். போன திங்கள்கிழமை, தாய்மண்ணை மிதித்தபோது, அடிவயிற்றிலிருந்து, “தாய் மண்ணே வணக்கம்” என்று ஏ.ஆர் ரகுமான் கத்த தோன்றியது. ஆனால் விமானத்தில் கொடுத்த காய்ந்து போன ரொட்டியால் வாயை திறக்க சிரமமாக இருந்தது.

சென்னை ஏர்போர்ட் செமையாக மாறிவிட்டது என்று சிலபேர் சொன்னார்கள். அவர்களைப் பார்க்கும்போது சட்டையைப் பிடித்து கேட்கவேண்டும். இமிக்ரேசனில் “வணக்கம் சார்” என்று சொன்னபொது, “முதல்ல பாஸ்போர்டை கொடு” என்பதுபோல் பார்த்தார்கள். சரி, அவ்வளவுதான் நமக்கு மரியாதை என்று, லக்கேஜ் எடுக்கும் கெரசல் சென்றேன். என்ன ஒரு ஆச்சரியம். அனைத்து லக்கேஜ்களும், பழுதில்லாமல் வந்து சேர்ந்தது. ஒவ்வொன்றையும் எடுத்து வைக்க சிரமப்பட்ட போது, யாரோ ஒரு நண்பர் “இருங்க வாத்யாரே” என்று எடுத்து கீழே வைத்தார்..”ரொம்ப நன்றிங்க” என்றேன்..”பார்த்து போட்டு குடு சார்” என்றார்..”அப்படிண்ணா..” என்றேன்..”என்ன சார் பெரிசா கேட்கபோறோம், ஒரு 100 டாலர்(அதாவது 6000 ரூ) தா சார்” என்றார்..

அதாவது, அங்கு வந்த லக்கேஜை கீழே எடுத்து வைக்க(என்னை கேட்காமல்) 6000 ரூபாய்..ஆஹா..பேசாம இங்கயே வேலைக்கு சேர்ந்துவிடலாமோ என்று தோன்றியது..ஒரு நாளைக்கு பத்து லக்கேஜ்(100*10 – 1000 டலார் = 60000 ரூபாய் ஒரு நாளைக்கு). மாதம் ஒரு நாள் வேளை பார்த்தால் போதும், “போங்கடா, நீங்களும் உங்க சாப்ட்வேர் வேலையும் என்று சொல்லத் தோன்றியது.

அடுத்து எல்லா லக்கேஜையும் எடுத்து காரில் வைத்து கிளம்பும்போது, இன்னொருவர் வந்தார்..”சார்..பார்த்து போட்டு கொடுங்க சார்” என்றார்..”இது எதுக்குண்ணே” என்றேன்..”பார்க்கிங்க் சார்” என்றார்..”ஆமா பார்க்கிங்க்” என்றேன், கிரேசி மோகன் போல. “பார்த்து கொடு சார்” என்றார்..எனக்கு ஒன்று புரியவில்லை. முந்தின ஆளாவது, லக்கேஜை எடுத்துவிட்டு 100 டாலர் கேட்டார், இவர் எதற்காக கேட்கிறார் என்று புரியவில்லை..

நான் ஏற்கனவே சொல்லியது போல..சென்னை ஏர்போர்ட் ரொம்ப மாறிடுச்சு சார்” என்று சொன்னவரை தேடி கொண்டிருக்கிறேன்..

அமெரிக்காவிலிருந்து வந்து ஆரம்பிச்சிடடீங்களா என்று கேட்பவர்களுக்கு, இதை எழுதுவதற்கு அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் ஆகியிருக்கவேண்டும் என்பதில்லை. நம்ம ஊரு அமிஞ்சிக்கரை ரிட்டர்ன் போதும்..

சும்மா சொல்லக்கூடாது, வெளிநாடுகள் தான் நம்மை எந்த அளவுக்கு மாற்றி விடுகிறது. 30 வருடங்கள், புழுதியிலும், வியர்வையிலும் புரண்ட மண்ணையே, 3 வருடத்தில் அன்னியப்படுத்திவிடுகிறதே. தெருவோரத்தில் கிடக்கும் சாக்கடை தண்ணீரும், குப்பையும் புதிதாக பார்ப்பதுபோல இருக்கிறதே. அநியாயமாக யாராவது நடந்து கொண்டால், கோபெமல்லாம் வருகிறதே..இந்த வியாதிக்கு பேர்தான் "என்.ஆர்.ஐ" போபியாவோ??

ஊருக்குபோய் நன்றாக குளித்துவிட்டு, மொட்டைவெயிலில் நின்றால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்..

Sunday 3 November, 2013

கமல்ஹாசனின் பாராட்டு மன்றம் – தங்க மீன்கள் – வணக்கம் சென்னை


ஜெயா தொலைக்காட்சியில், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்ட கமலுக்கான பாராட்டு மன்றத்தில்..மன்னிக்க, பட்டிமன்றத்தில் கமல் ஒரு இடத்தில் சொன்னார்..
“நான் இங்கு நடுவராக வரவில்லை, குற்றவாளியாக வந்திருக்கின்றேன்..அதுவும், அறிவு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு..இரண்டு பக்கங்களிலும், ஏதாவது கிடைக்கும், அதை என் பாத்திரத்தில் ஏந்தி கொள்வேன்”

உறுதியாக சொல்லுவேன், அவர் கிளம்பி செல்லும்போது, வெற்று பாத்திரமாகவே சென்றிருப்பார். என்ன கொடுமை என்றால், தமிழாசிரியர், அறிவுசார் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ஐயாவும், இதில் ஒரு பேச்சாளர்..
தன்னைப் பற்றி இரண்டரை மணிநேரம் புகழ்ந்து பேசுவதை கேட்க எத்தனை பேருக்கு வாய்க்கும்.. இன்று கமலுக்கு வாய்த்திருக்கிறது. அதுவும் தீபாவளியை ஏற்று கொள்ளாத நாத்திகர் என்று சொல்லி கொள்ளும் கமலுக்கு தீபாவளி அன்று கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.

பத்து பேரும் பேசியது அமெச்சூர்தனத்தின் உச்சம் என்றால், கமல் பேசியது, குழப்பத்தின் உச்சம். பேசிய பத்து பேரில், ஏறக்குறைய எல்லோரும், கமல் புராணம் பாடுவதில் இருந்த அக்கறையை, சிறிதளவேனும், தலைப்பைப் பற்றி தயார் செய்வதிலும் காட்டியிருக்கலாம்..
இந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாக ஆளுமை அல்லது கலைஞன் என்று கர்வப்பட்டு கொள்ளும் அதே நேரத்தில், அவரும் புகழ்போதைக்கு அடிமையாகிவிட்டாரோ என்ற பயமும் ஏற்படுகிறது. இன்னும் விட்டால் “ஆழ்வார்பேட்டை ஆண்டவா..”, “உலக நாயகனே” போன்ற பாடல்கள்தான் அவரை உலகத்தரத்திற்கு எடுத்து சென்றன என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் இவ்வளவு புகழ்ந்த ஒருவராவது “விஸ்வரூபம்” பிரச்சனை பற்றி ஒரு வார்த்தை பேசவேண்டுமே..மூச்..

இதில்வேறு ஒருவர் ஜெயாடிவிக்கு வருவதை பற்றி “அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே” என்று முன்பே சொல்லிவிட்டாராம். நான் இதுவரை மிகவும் புத்திசாலியாக ரஜினிகாந்த் மட்டும்தான் என்று எண்ணி கொண்டிருந்தேன்..ஆனால் கமல் ரஜினியையும் மிஞ்சிவிட்டார்..

பட்டிமன்றத்தின் முடிவில், கமல் படத்திலேயே இருந்த காமெடிதான் நினைவுக்கு வந்தது.

கமல் : என்னப்பா தேடுற..

கவுண்டமணி : இல்ல இங்க சந்துருனு ஒரு மானஸ்தான் நின்னுக்கிட்டு இருந்தான்..அவனை தேடிக்கிட்டு இருக்கிறேன்..

தங்க மீன்கள் – வணக்கம் சென்னை

தீபாவளிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல், வீட்டில் முடங்கியபோது, இரண்டு படங்களை பார்க்க நேர்ந்தது.. இன்று ஒரு வித்தியாசமான உலகத்திற்கு நம்மை கூட்டி செல்லப்போகிறது, என்று ஆவலுடன் பார்த்த தங்கமீன்கள். இரண்டாவது, வணக்கம் சென்னை..

பொதுவாக ஒரு படத்தை, ஒரு தடவைக்குமேல் பார்த்ததில்லை, தியேட்டருக்கு சென்று. மூன்று தடவை பார்த்த ஒரே படம் “கற்றது தமிழ்”. மனதை அவ்வளவு உலுக்கிபோட்ட திரைப்படம். அதில், ஒரு பத்து மடங்கை கூட தங்கமீன்கள் தரவில்லை.
படத்தில் அவர் சொல்ல நினைப்பது, அப்பா, மகள் பாசமா, இல்லை தனியார் பள்ளிகளுக்கு அவர்மேல் உள்ள கோபமா என்ற தெளிவு இல்லாமல் இருந்தது. கற்றது தமிழ் படத்தில், ஜீவா அஞ்சலி பாத்திரங்களில் நம்மை ஒன்ற செய்த ராம், இந்த படத்தில், என்னதான் பாடுபட்டாலும், அப்பா-மகள் பாசத்தில் ஒன்ற செய்யமுடியவில்லை. அவர் அழவேண்டுமே என்பதற்காகவே படைக்கப்பட்ட சில் சீன்களால் கூட என்னை ஒன்ற வைக்கமுடியவில்லை..இத்தனைக்கும் படம் பார்க்கும்போது, மடியில் என் பையன்.

அடுத்து பார்த்தது, அதற்கு நேரதிரான அமெச்சூரான “வணக்கம் சென்னை..” இந்திய கவர்மெண்ட் சில பேரை நாடுகடத்தலாம் என்று யோசித்தால், தயவுசெய்து, சிவாவை நாடுகடத்துங்கள் என்று மனு போடலாம் என்று இருக்கிறேன். ஒரே மாதிரியான உடல்மொழி, கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாத நடிப்பு, நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை..


எனக்கு மட்டும் ஏன் சார் தீபாவளி இப்படி விடியுது..

Thursday 31 October, 2013

ஆரம்பம் – விமர்சனம்


இப்போதெல்லாம் விமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது, கழுத்தில் யாரோ கத்தியை வைத்தாற் போலவே ஒரு பிரமை. ஒரு படம் சரியில்லை என்று எழுதினால்..”டேய்ய்ய்ய்ய்..ஊருப்பக்கம் வாடா..” ங்கிற மாதிரி அன்பான கமெண்டுகளும், அருமையான தமிழ்சொற்களை கொண்டு, “தே..சு..” போன்ற வார்த்தைகளாய் கொண்டு அழகாக எழுதப்பட்ட மெயில்களும், வரவேற்கின்றன..மாறாக ஒரு பட்த்தை பாராட்டி எழுதினால் “என்னய்யா விமர்சனம் எழுதுற..மொக்கை பட்த்த போய் நல்லா இருக்குங்குற” என்று வரும் மெயில்கள் கலங்கடிக்கவும் செய்கின்றன..

ஆனாலும், நாமெல்லாம் எழுதாவிட்டால், வீட்டு முன்னால் அமர்ந்து கொண்டு உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்று நாடே கொந்தளிப்பதால், உங்களுக்கு “ஆரம்பம்” விமர்சனம். என் கழுத்து மற்றும், இதர பாகங்களின் நலம் வேண்டி, பட்த்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன்..எல்லோரும் படித்து, சந்தோசமாக இருக்கவும்..

படத்தின் கதை இதுதான். மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிக்கிறது. மூன்று குண்டு வைத்த்துவிட்டு ஸ்டைலிசாக வருவது ஹீரோ அஜீத். அதன் தொடர்ச்சியாக, சென்னையிலிருந்து மும்பை வரும் கம்யூட்டர் ஹாக்கரான ஆர்யா மும்பை வரும்போது கட்த்தப்படுகிறார். அவரை வைத்து, ஒரு சானல் நெட்வொர்க்கையே முடக்குகிறார் அஜீத். காரணம், பிளாஷ்பேக்காக விரிகிறது. ராணா, மற்றும், அஜீத் பாம் ஸ்குவார்டாக வேலை பார்க்கிறார்கள். முடியும்போது, தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை...இது..மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த படையினருக்கு, அமைச்சரவையிலிருந்து புல்லட்ப்ரூட் ஜாக்கெட் கொடுக்கிறார்கள்..ஆனால்..அதில்..ஊழல்..அதன் காரணமாக, ராணா..அது வந்து..அது வந்து..அது..முதல்ல கழுத்துல இருந்து கத்திய எடுங்க பாஸ்..கதையெல்லாம் சொல்ல மாட்டேன்..

இனி பட்த்தில் உள்ள நல்ல விஷயங்கள் மட்டும்..
·         
முடிந்தவரை ஸ்டைலிஷாக எடுக்க விஷ்ணுவர்த்தன் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்..அஜீத் ஸ்டைலிஷாக நடக்கும்போது, தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளப்பது உறுதி..
·         கதை வித்தியாசமா இருக்கிறது..நண்பனுக்காக பழிவாங்கும் கதை, இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படவில்லை எனவே நினைக்கிறேன்..இன்னும் சொல்லப்போனால், பழிவாங்கும் கதைகளையே தமிழில் பார்த்த்தாக நினைவில்லை.

·         அஜீத், மிகவும், ஸ்டைலிஷாக, அழகாக இருக்கிறார்..அடிக்கடி ஸ்டைலிஷாக கண்ணாடியை மாட்டும்போதும், கழட்டும்போதும், நடக்கும்போது செமையாக இருக்கிறார்..பில்லா, மங்காத்தா படங்களிலும் இதே போன்று நடந்து இருந்தாலும், இந்த நடை வித்தியாசமாக இருப்பது மிக்ச்சிறப்பு..இந்த முறை எடை குறைத்து மிகவும் சிலிம்மா இருப்பது நன்றாக இருக்கிறது..

·         ஆர்யா பற்றி சொல்லியே ஆகவேண்டும். முதல் பாதியில் கம்யூட்டர் தட்டி, 10 நிமிட்த்தில் ஒரு சானலையே ஹாக் செய்வது, “வாவ்..” கிளைமாக்ஸ் காட்சியில், துப்பாக்கி எடுத்து, ராணுவ வீர்ர் போல அவர் சுடும் சண்டை காட்சிகள் அப்படியே ஆக்சன் மூவி ப்ளாட்

·         நயன்தாரா மிகவும் சீரியசாக நடித்திருப்பது சிறப்பு.. கொடுத்த பாத்திரத்தை சிரத்தை எடுத்து செய்திருக்கிறார். குறிப்பாக வில்லனை கவர்ச்சி காட்டி ஏமாற்றும் இட்த்தில், கைதட்டல் பெறுகிறார்

·         பட்த்தில் நடித்த அமைச்சர் வில்லன் கிளைமாக்ஸ் காட்சியில் சந்தானம் இல்லாத குறையை போக்குகிறார்..குறிப்பாக அவருடைய முகபாவனையும், டயலாக்குகளும், “ஹா..ஹா.”

·         டாப்சி, ராணா, அப்புறம் அதுல் குல்கர்னி போன்றோர், பட்த்தில் இருப்பது, பட்த்திற்கே இன்னுமொரு சிறப்பு

·         யுவன்சங்கர் ராஜா பாடல்கள் முணுமுணுக்க வைக்கிறது..குறிப்பாக “ப்ப்ரப்ப்ப..ப்ப்பரப்ப..ப்ப்பரப்ப..பான்..ப்ப்பரப்ப..பான்..ப்பரப்பான்” என்ற தீம் ம்யூசிக் கேட்க கேட்க காதுகளுக்கு இனிமை..

·         முதலில் இருந்து கடைசிவரைக்கும், விறுவிறுப்பாக கொண்டு சென்று, ஏதோ ஹாலிவுட் பட்த்தை பார்த்த திருப்தி தருகிறார் இயக்குநர்

·         தியேட்டரில், பார்கார்ன், கூல்டிரிங்க்ஸ் நன்றாக இருந்த்து..குறிப்பாக கொக்க்கோலாவில் ஐஸ் கேட்காமலே, அவர் ஐஸை போட்டு அன்பாக கொடுத்த்து அவருக்கு என்மேல் இருக்கும் அன்பை புரியவைத்த்து. எனக்கு ஜலதோசம் இருக்கிறது, வேண்டாம் என்று திருப்பி கொடுத்தாலும், “இல்லை சாப்பிட்டே ஆகவேண்டும்” என்று அன்பு கட்டளையிட்டபோது, என் கண் கலங்கியது..

முடிவாக, இந்த தீபாவளி சிறப்பாக தொடங்கப்போகிறது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு..சிந்திக்க தூண்டும் படங்கள், இப்போதெல்லாம் வர துவங்கியிருப்பது, தமிழ்சினிமாவை எங்கயோ கொண்டு போகப்போகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்..


முடிவாக படம் சிறப்பு..சிறப்பு..சிறப்பு..இந்த வருட்த்தின் ப்ளாக்பஸ்டர் என்பதை சொல்லத் தேவையில்லை..

Tuesday 29 October, 2013

ஒரே மாதத்தில் தனுஷ் போல உடம்பு வேண்டுமா..



வாரத்திற்கு ஒருமுறையாவது ஜிம்முக்கு சென்றுவிடுவதுண்டு.  அபார்ட்மெண்டிலேயே ஜிம் இருப்பது, மிகவும் வசதியாக இருப்பதும், “நேத்து வரைக்கும் நல்லா இருந்தான்யா,,இன்னைக்கு லைட்டா, நெஞ்சு வலிக்குதுண்ணான், அதுக்குள்ள போய் சேர்ந்துட்டான்யா..அதிகம் வயசெல்லாம் இல்ல, உங்க வயசுதான் இருக்கும்” என்று பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி நண்பர்கள் சொல்லும்போது, “அய்ய்யோ..அடுத்த நம்மளோ” என்ற பயமும் ஒரு காரணம்.

இந்த உலகத்தில் உயிர்பயத்தை விட ஏதும் இருக்கிறதா என்ன..டிரட்மில்லில் ஓடும்போது, வயிறு, கை, கால் எல்லாம் தனிதனியா வலி பிரித்து எடுக்கும். நெஞ்சு வலி வேண்டாமென்றால், இந்த வலியெல்லாம் பொறுத்துக்கடா ராசா என்று எங்கேயோ ஒலிப்பதால், பல்லைக் கடித்துகொண்டு, ஒரு 20 நிமிடமாவது ஓடிவிடுவேன்..
நேற்று அப்படி டிரட்மில்லில் ஓடி கொண்டிருந்தபோது, எதிர்த்த மாதிரி, டி.வியில் ஒரு விளம்பரம் ஓடி கொண்டிருந்த்து. நான் பொதுவாக ஓடும்போது, டி.வி பார்ப்பதில்லை. அல்லது டி.வி பார்க்கும்போது ஓடுவதில்லை. ஏனென்றால், “நேத்து வரைக்கும் நல்லா இருந்தான்யா” டைப் விளம்பரங்கள் கண்ணில் பட்டு, கலவரம் பண்ணி, பதட்ட்த்தை கூட்டுவதால்..

அப்படி கண்ணில் பட்ட ஒரு விளம்பரம் “இனிமேல் எதுக்குய்யா, இந்த டிரட்மில்லில் வீணாஓடிக்கிட்டு” என்று ஒருநிமிட்த்தில் என்னை முடிவெடுக்க வைத்தது. ஒரு மாத்த்தில் 30 எல்.பி(அதாவது கிலோ அளவிலான, அமெரிக்க கணக்கீடு) சுலபமாக குறைக்க முடியும். எந்த ஜிம்முக்கும் போகவேண்டாம், மணிக்கணக்கில் எக்சர்சைஸ் பண்ண வேண்டாம். எங்கள் ப்ராடெக்டை, நீங்கள் சாப்பிடும் எந்த உணவிலும், லைட்டா தூவி விட்டால் போதும், அது எந்த உணவாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு மாதத்தில் பாருங்கள், அதிசயத்தை என்றார்கள்..

அதுவும் சும்மா இல்லை. உசிலை மணி மாதிரி ஒருவர் படம், அதுவே எங்கள் ப்ராடெக்டை உபயோகிக்க ஆரம்பித்த பின்பு என்று “அவரோ, அல்லது அவரு தம்பியோ”, அர்னால்ட் பாடி காட்டி கொண்டிருந்தார்..அட, அப்படியா என்று வாயை மூடிவதற்குள்..”நீங்கள், இதை ஒரு மாத்த்திற்கு, சும்மா யூஸ் பண்ணலாம். நாங்கள் உங்களுக்கு ஒரு மாத்த்திற்கு இலவசமாக சாம்பிள் கொடுப்போம் என்றார்கள்..

ஆஹா, சோனமுத்தான்..இப்படி ஒரு அல்வாவை வைச்சுக்கிட்டு, இம்புட்டு நாளைக்கு கஷ்டப்பட்டிருக்கோமே, என்று டிரட்மில்லை உடனே நிறுத்தினேன்..துண்டை எடுத்து முகத்தை துடைத்துகொண்டு வீட்டுக்கு சென்று, உடனே லேப்டாப்பை தூக்கியவுடன் மனைவி பயந்தே விட்டாள்..

“அய்ய்ய்யோ..என்ன்ங்க ஆச்சு..உடற்பயிற்சி செய்வது எப்படின்னு பதிவு போடப்போறீங்களா..”

“அடிப்போடி..ஒரு மாசத்துக்குள்ளே உன் புருஷன் தனுஷ் மாதிரி ஆகலை..ஆகலை என்ன..ஆகி காட்டுறேன்...”

என்று அவசரமாக அந்த விளம்ப்ர சைட்டுக்கு சென்றேன்..அருமையாக வரவேற்றார்கள்..”வாருங்கள்..வாருங்கள்..எங்கள் பக்கத்துக்கு வந்தற்கு நன்றி.நீங்கள் ஒல்லியாவதற்கு நாங்க கேரண்டி” என்று பிரீத்தி மிக்சி கேரண்டி மாதிரி வீடியோ விளம்பரம் கொடுத்தார்கள்..”நான்தான் முகேஷ்” மாதிரி, ஒருவர் வந்து, “நான்தான் மார்க்..உங்களை மாதிரிதான் நானும், இந்த உடல் பருமனால் மிகவும் அவதிப்பட்டேன்..இதோ, இந்த ப்ராடெக்டை, டெய்லி உணவில் தூவிவிட்டேன்..அம்புட்டுத்தான்(மர்கயா???), என்னுடைய வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிபோனது” என்றார்.

“அடியே..நானும் தலைகீழா மாறுரேண்டி” என்றேன்..

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நல்லாத்தானே ஜிம்முக்கு போய்க்கிட்டிருந்தீங்க..என்ன ஆச்சுங்க” என்றாள்..

“அதெல்லாம் சொல்ல முடியாது..இப்பவே என்னை ஒரு போட்டோ எடுத்து வைச்சிக்க,..” என்றேன்..

மனைவி பதறிப்போனாள்..

“அய்ய்யோ..ஏங்க..உடம்புக்கு ஏதாவது” என்றாள் பதட்ட்த்துடன்..

“அடியே..முடிவே பண்ணிட்டயா..எப்படி ஆகுறேன் பாரு” என்றேன் கர்வத்துடன்..

கிரெடிட்கார்டு எல்லாம் கேட்டார்கள்..ஒரு மாச சாம்பிளுக்கு எதுக்குய்யா கிரெடிட்கார்டு என்று யோசிக்கும்முன்பே, “பணமெல்லாம் எடுக்க மாட்டோம்..ஒரு மாசம் கடந்த பின்பு, கண்டிப்பாக நீங்கள் இந்த ப்ராடெக்டை வாங்கவேண்டும் என்று அடம்பிடிப்பீர்கள்..அப்புறம், நீங்க எதுக்கு வேஸ்டா, க்ரெடிட்கார்டு நம்பெரெலாம் கொடுத்துக்கிட்டு..இப்பவே கொடுத்தீங்கன்னா, உங்க அனுமதியின் பேருல பணம் எடுத்துட்டு(ஓடிடுவோம்..??) சொல்லிடிவோம் என்றார்கள்..

அப்பயே எனக்கு மைல்டா ஒரு டவுட்டு வர, எதுக்கும் நம்ம கோவாலுவ ஒரு வார்த்தை கேட்டுருவோம் என யோசித்தான்..தாமதிக்காமல் போன் செய்யவே..

“கோவாலு..உங்கிட்ட ஒரு ஹெல்ப்டா” என்றேன்..

“ராசா...நானே உங்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்..சம்பளம் வந்தவுடேனே, அப்படியே ஊருல இருக்குற அக்கவுண்டுக்கு துடைச்சு அனுப்பிச்சுட்டேன்..ஒரு பத்து டாலர் கிடைக்கும்..??”

“அட நாதாரி நாயே..பணமெல்லாம் கேட்கவரலை..ஜிம்முல எக்சர்சைஸ் பண்ணுறப்ப, டி.வியில ஒரு விளம்பரம்” ங்கறேன்...

“ராசாஆஆஆ... அத மட்டும் வாங்கிறதடா”ங்கறான்..

“டே..கோவாலு, என்னடா சொல்லுற..முழுசா கூட சொல்ல்லியேடா..”

“இல்லடா ராசா, அதமட்டும் வாங்கிறாத..”

“ஏண்டா கோவாலு..நான் தனுசு மாதிரி ஆகுறது உனக்கு பிடிக்கலையா”

“நீ எங்க கூடவே ரொம்ப நாளைக்கு இருக்கணும்டா” ங்கறான்..அப்படியே ஆடிப்போயிட்டேன்...அப்புறம் சொல்லுறான்..

“ராசா, நாலு மாசம் முன்னாடி, ஒரு பத்து நாள் லீவு போட்டிருந்தேன் ஞாபகம் இருக்கா..”
“ஆமா..ஏதோ லைட்டா காய்ச்சல் ரெஸ்ட் எடுக்குறேன்னு சொன்ன..வரக்கூட வேணாம்..பரவிடும்னு வேற சொன்னயேடா..”

“ஆமாண்டா ராசா..அது காய்ச்சல் இல்லடா..எல்லாம் அந்த கருமம் பிடிச்ச அந்த ப்ராடெக்டை ரெண்டு நாளைக்கு சாப்பிட்துனாலதாண்டா..விடாம முன்னாடியும், பின்னாடியும் போகுது..யாருனாலயும் ஸ்டாப் பண்ண முடியல..அப்புறம் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் நாலு டிரிப் ஏத்துனாய்ங்கடா..நாலு நாளைக்கு பெட் ரெஸ்ட் எடுக்க சொன்னாய்ங்க..அந்த டாக்டரு, என்ன அசிங்கம், அசிங்கமா திட்டுனான் தெரியுமாடா..இன்னும் லைட்டா உடம்பெல்லாம் அரிக்கிற மாதிரி இருக்குடா” ங்குறான்..

என்னுடைய தனுஷ் கனவெல்லாம், ஒரு நிமிட்த்தில் சுக்கு நூறாகியது..

ஏண்ணே..யாருக்காவது தனுஷ் மாதிரி ஆகணும்னு ஆசையிருக்கு???”

Sunday 27 October, 2013

சென்னை எக்ஸ்பிரஸ் – மூடர் கூடம்


“என்னது காந்தி செத்துட்டாரா” என்பது போல, இப்போதுதான் இரண்டு படங்களை தாமதமாக பார்க்க நேர்ந்தது. ஒன்று கோடியில் சம்பாதிக்கும் ஷாருக்கானின் “சென்னை எக்ஸ்பிரஸ்” , இரண்டாவது, தெருக்கோடியில் வாழும் மக்களுக்காக எடுக்கப்பட்ட மூடர் கூடம்.

இரண்டும், இருவேறு அரசியல்களை முன்னிறுத்துகிறது, உதாரணமாக, சென்னை எக்ஸ்பிரஸில் வரும் ஒரு டயலாக்..

“கிட்ட வராதே தங்கபாலி..ஜோரா உதைச்சுடுவேன்..”

வசனம் எழுதிய அந்த புண்ணியவானைத் தான் ஜோரா உதைக்கணும்போல இருக்கிறது. அது என்னய்யா ஜோரா உதைக்கணும்.. என்னதான் வடஇந்தியாவிற்கு படிக்க சென்றாலும், ஒரு கிராமத்துப்பெண் இப்படியா பேசுவாள். மணிரத்னமும், வடஇந்தியாக்காரர்களும், கிராமத்து படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும், ராவணன், கடல் படம் போல.

அய்யா கனவான்களா..படம் எடுப்பதற்கு முன்பு, ஸ்டடி, ஸ்டடி என்று ஒன்று சொல்லுவார்களே..அதை பண்ணினீர்களா..அல்லது, உங்களுக்கு தமிழக கிராமம் அல்லது தமிழ்பேசும் கிராமம் இப்படித்தான் இருக்கும், என்று பைவ்ஸ்டார் ஹோட்டலில், பீர் அடித்துகொண்டு நீங்கள் நடத்தும், டிஸ்கசனில் யாராவது சொன்னார்களா. இதே பிரச்சனைதான் மணிரத்னத்திற்கும். ராவணன் படத்தில் காண்பிக்கும், ஒரு கிராமத்தை எங்காவது தமிழகத்தில் பார்க்கமுடியுமா..பாரதி கவிதை பேசி கொண்டு, “மே” என்று கேனத்தனமாக கத்தும்படியா எங்கள் கிராமத்து இளைஞர்கள் இருக்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு, கருப்பு பெயிண்ட் அடித்துகொண்டு, “எலே..ஜோசப்பு..அங்க எங்கவுலே நிக்கீரு” என்றால் தூத்துக்குடி, கன்னியாகுமாரி கடல்பக்கமா..அய்யா மணிரத்னம் மற்றும் வடஇந்தியா இயக்குநர்களே, உங்களுக்கு கோடி புண்ணியம்..உங்களுக்கு ஏத்த மாதிரி “சக்தி.நான் உன்னை விரும்புறேன்னு நினைக்கல” என்று பல்லை கடித்து கொண்டு டயலாக் பேசும் மாதவன் மாதிரி, சிட்டி இளைஞர்களை வைத்தே படத்தை எடுங்கள்..எங்கள் கிராமத்தை விட்டுவிடுங்கள்..புண்ணியமா போகும்..

எனக்கென்ன கோபமென்றால், சத்யராஜ், சத்யராஜ் என்று ஒரு நடிகர் படத்தில் நடித்தாக சொன்னார்கள்..அவரை கடைசி வரைக்கும் கண்ணில் காட்டவில்லை...பல்லை கடித்துக்கொண்டு, எப்போது, அருவாளும் கையுமாய், எண்ணை வடிந்த முகத்தோடு, ரவுடி மாதிரி, வேட்டியை தூக்கிகொண்டுதான், எங்கள் கிராமத்து இளைஞர்கள் தெரிகிறார்கள் என்றால், எப்போதும், பான்பராக் போட்டுகொண்டு , புளிச், புளிச்சென்று கண்டபடி சுவற்றில் துப்பும், வடஇந்திய இளைஞர்கள்தான் எங்களுக்கு தெரிவார்கள்..



அடுத்து பார்த்த படம் “நாய், பொம்மைக்கெல்லாம்” ப்ளாஷ்பேக் வைத்து புரட்சி செய்த “மூடர் கூடம்”. “படத்தில ஒரு ஜோக்கு கூட இல்ல மச்சி..மொக்கை” என்று புலம்பி கொண்டு பலபேர் தியேட்டரை விட்டு வெளியே வந்திருக்ககூடும், இந்த படத்தை நகைச்சுவை படமாக எண்ணி கொண்டு சென்றவர்கள். ஆனால், இந்த படம்போல ஒரு சீரியஸ் படம் சமீபத்தில் பார்த்ததில்லை. ஒவ்வொரு சீனிலும், செவிட்டில் அறைந்தார்போல ஒரு கருத்து சொல்கிறார், இயக்குநர் நவீன், ஆனால் கருத்து சொன்னது தெரியாமலே..அதுதான் அதகளம்..

முக்கியமாக, சென்ட்ராயன் பேசும் ஒரு உரையாடல்..

“ஒரு வெள்ளைக்காரண்ட தமிழ்ல பேசுவாயடா??”

“இல்லை சார்..”

“ஏன்..”

“ஏன்னா, அவனுக்கு தமிழ் தெரியாது..”

“என்னை பார்த்தா, இங்க்லீசுல 10 மார்க்குக்கு மேல எடுக்குற மாதிரி தெரியிதா..இல்லை, சீன் படம், சண்டை படத்தை தவிர, வேற ஏதாவது, இங்க்லீசு படம் பார்க்குறமாதிரி தெரியுதா..அப்புறம் ஏண்டா, எங்கிட்ட இங்க்லீசு பேசுற”

சும்மா பந்தாவுக்கு இங்க்லீசு பேசும், பயபுள்ளைகளை நிறுத்தி வைத்து, அறைந்தார்போல இருக்கிறது. நீயா நானாவில் பலமுறை கவனித்திருக்கிறேன்...நிகழ்ச்சிக்கு யாராவது ஒருத்தர், தமிழ் தெரிந்தாலும், வலுக்கட்டாயமாக இங்க்லீசில் பேசியே ஆகவேண்டும் என்று பேசுவார் பாருங்கள்..கொடுமையாக இருக்கும்..ஏண்ணா இப்படி..

சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால்


“ஏண்டா பார்த்தேன் என்று சிந்திக்கவைத்தது சென்னை எக்ஸ்பிரஸ்”

“ஏண்டா சிந்திக்கணும் என்று பார்க்கவைத்தது மூடர்கூடம்”