Friday 25 January, 2013

விஸ்வரூபம் – சுடச்சுட விமர்சனம்



அமெரிக்காவில் விஸ்வரூபம் வெளியாகி, இன்று ப்ரீமியர் ஷோ என்று சொன்னவுடனே முடிவெடுத்துவிட்டேன்கண்டிப்பாக பார்க்கவேண்டும்என்று. இதில் வேறு, பலசர்ச்சைகள், போராட்டங்கள், தடைகள் என்று சேர்த்து எதிர்பார்ப்பை கூட்டியிருந்தன. பவர்ஸ்டார் படத்தையே பத்துவாட்டி பார்க்கும் நான், நிஜஸ்டார் கமல்ஹாசன் படத்தை விட்டுவிடுவோமா என்ன..

படத்தின் கதை என்ன. எல்லாப் புத்தகங்களிலும் வந்ததுதான். அமெரிக்க நடன ஆசிரியராக வேலைபார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்கு பிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் ஓனரோடு கள்ளத் தொடர்பு வேறு. “என்னோட ஆம்படையா எப்படி தெரியுமாஎன்று ஆரம்பித்தவுடன் கமலின் முகம் தெரிய ஆரம்பிக்கிறது. முகம் முழுவதும் பெண்மை கலந்த நளினத்தோடு, நடனம் சொல்லி கொடுக்கும் பாங்கு, கமலுக்கு சொல்லவா வேண்டும். ஜமாய்க்கிறார்..

தன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஓனரை மணப்பதற்கு விவாகரத்து வேண்டுமல்லவா..அதற்காக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியை வைத்து கமலை பாலோ பண்ண வைக்க, அதிர்ச்சியாக கமல் ஒரு முஸ்லீம் என்று தெரியவருகிறது, படிபடியாக அல்கொய்தாவுக்கே ஆப்கானிஸ்தானில் டிரெய்னிங்க் கொடுத்தவர் என்று வாயில் போட்ட பாப்கானை வெளியே வரவைக்கிறார்கள். ஏன் அமெரிக்காவில் வந்து நடன ஆசிரியராக நடிக்கிறார், ஏன் ஆப்கானில் அல்கொய்தவுக்கு டிரெய்னிங்க் கொடுத்தார், என்று ரத்தம் தெறிக்க, தெறிக்க..நாம் ஏன்..ஏன் என்று கேட்க கேட்க துப்பாக்கி குண்டுகளாலேயே பதில் சொல்லியிருக்கிறார்கள். படம் முடிந்து வெளியே வரும்போது, சட்டையில் ரத்தம் எதுவும் ஒட்டி இருக்கிறதா என்று பார்க்கவேண்டியிருக்கிறது..சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இந்த அளவுக்கு வன்முறையை எப்போதும் பார்த்ததில்லை.. உடல் துண்டாக விழுவது..கழுத்தை அறுப்பது..குண்டு முகத்தில் துளைப்பது..நடுரோட்டில் தூக்குபோடுவது....மறந்துவிட்டேன்..கமல் யதார்த்தநாயகன் அல்லவா.. இந்த படத்துக்கு யூ. சான்றிதழ் என்பது கொஞ்சம் இல்லைநிறையவே ஓவருங்கோ

மற்றபடி, இந்த மாதிரியான படத்தை கமலால் மட்டுமே எடுக்கமுடியும். கமலின் ஒரே நோக்கம் ஹாலிவுட் மட்டும் என்பது தெளிவாக தெரிகிறதுஅதே போலவே படமும் முழுக்க முழுக்க ஹாலிவுட் தரம். முக்கியமாக, ஆப்கானில், தீவிரவாதிகளுக்கு போர்பயிற்சி கொடுக்கும் காட்சிகள், அமெரிக்க தாக்குதல் என அனைத்தும் ஹாலிவுட் தரம்..காதுக்குள் ஹெலிகாப்டர் பறக்கும் இன்னமும் கேட்கிறது..

குறிப்பாக ஒரு காட்சி..அப்பாவியான கமலை கட்டிவைத்துவிட்டு, அடிஅடியென அடித்துவிட்டு, உயிர்போகும் தருணத்தில், துவம்சம் பண்ணி எல்லோரையும் போட்டுதள்ளும் அந்த சீன். அரங்கு முழக்க கிளாப்ஸ், தீனாவில் கமர்சியல் காம்ப்ளக்சில் அஜீத் துவம்சம் செய்யும் காட்சிக்கு கைதட்டியவன், இப்போதுதான் ஒரு சீனுக்கு ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டினேன்..

ஆப்கானிஸ்தானா..அல்லது செட்டா என்று தெரியவில்லை..செட்டாக இருந்தால் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு ஷொட்டு..முழுக்க, முழுக்க  ஒரு மணிநேரம் ஆப்கானில் இருந்த ஒரு உணர்வு.. டைரக்டர் கமல் ஓங்கி ஒன்றரை டன் வெயிட்டாக அடித்திருக்கிறார்..அனைத்தும் க்ளாஸ்..

ஆனால்..
ஆனால்..
ஆனால்..

என்னடா, கமலின் அறிவுஜீவித்தனம் இன்னமும் வெளிப்படவே இல்லையே என்று பார்த்தால், “இதோ இருக்கேன்பாஎன்று ஓடிவருகிறார். இவ்வளவு மொன்னையாக அமெரிக்க உளவுத்துறையும்,, போலீசையும் காட்டியதே இல்லை..நிமிட நேரத்தில் எப்.பி. க்கு கடுக்காய் கொடுத்து தப்பிப்பது..ஒரு நியூக்ளியர் பாம் பேக்டரியவே, நீயுயார்க் நகரத்தில் நடத்துவது..அதை கமல் சொன்னவுடன்தான் தெரிவது..ஸ்வாட் டீம் துப்பாக்கியை பிடித்து நடக்கும் விதம்., எப்.பி. ஆபிசர்களின் நேர்த்தி என்றும்..ஹீம்கமல் சார்..முதல் பகுதி முழுதும் ஹாலிவுட் தரத்தில் எடுத்துவிட்டு, கடைசி 20 நிமிடங்கள், இப்படி சிரிப்பு மூட்டினால் எப்படி

நியூக்ளியர்..செரனியம்..பீஜான் ரேடியேசன்.. என்று கமலத்துவம்..அதாவது, “கமல்” “த்துவம்நிறைந்த வார்த்தைகளை கேட்கும்போது, “இன்னாப்பா..ஒன்னும் பிரிய மாட்டிங்குதுப்பாஎன்று சொல்ல நினைக்கும்போது, சஸ்பென்ஸ் நிறைந்த கடைசிகாட்சிகள். சற்று நிமிர்ந்து உக்கார்ந்தால்.. …..மை..காட்..படம் முடிந்துவிட்டதா..ஆமா..கமல் என்னப்பா சொல்லுறாரு..அப்புறம் அந்த தீவிரவாதிக்கும் கமலுக்கும் சண்டை எப்படி வந்தது..ஆமா..கடைசில எதுக்கு பாராசூட்டில இருந்து குதிக்கிறாங்க..ஆமா..கமலுன்னா யாரு..ஆமா..நான் யாரு

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி..கமலால் மட்டுமே இப்படி தொழில்நுட்பத்தோடு ஒரு இந்திய படம் எடுக்கமுடியும்..கமல் என்ற பிற்விகலைஞனை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர் கூடவே பயணிக்கவேண்டும். ஆனால் அப்படி பயணிப்பது முடியாத காரியம்..ஏனென்றால் அவர் தொட்ட/தொடவேண்டிய சிகரங்களை அண்ணாந்து பார்க்கவே ஒரு யுகம் ஆகும்…

சரி…படத்தின் ரிசல்ட்..??

தொழில்நுட்பத்தில் உலகத்தரம்.. ஆனால்ல்ல்…..பிரியாணி சமைக்கமுடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் சந்தேகம்..

Sunday 20 January, 2013

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்


குட்டிப்பையனுக்கு பிறந்த நாள் வருது, ஏதாவது பார்ட்டி அரேஞ்ச் பண்ணலாம்னு இங்கிட்டு உள்ள இண்டியன் ரெஸ்டாரண்டுக்கு போலாமுன்னு போனேண்ணே..நான் இங்கிட்டு சொல்லுறது, மதுரை பக்கமில்லைண்ணே..கொஞ்சதூரம்..அதாவது, ரெண்டு மூணு கடல் நீந்தி வந்தீங்கன்னா, “அமெரிக்கா..அமெரிக்கான்னு சொல்லுவாய்ங்கள்ள..அட அதுதாண்ணே..காலங்காத்தால, சூட்டும் கோட்டும் போட்டுக்கிட்டு, ஜெமினி ப்ளைஓவர் பக்கத்துல பல்லு விளக்காம, ஒரு பைலை கையில புடுச்சுக்கிட்டு நிப்பாய்ங்கல்ல..இங்கிட்டு வர்றதுக்குதாண்ணே..அப்படி நின்னபையதாண்ணே நானும்.அதனால நன்றி மறக்ககூடாதுல்ல..

சரி விசயத்துக்கு வருவோம்..அப்படி அமெரிக்காவுல, ஒரு மாகணத்துல(யாருண்ணே..அங்க..ம் கொட்டுறது..), ஒரு சிட்டில வாழுற ஜீவன் தான், நான்..அதுவும், விசா முடியுற வரைக்கும்தான்..அதுக்கப்புறம் பொடணிய புடிச்சு சாத்திப்புடுவாய்ங்கல்ல சாத்தி..நம்மளும் சிரிச்சிக்கிட்டே..” மைகாட்..வாட் கண்ட்ரி..ஒரே பொல்யூசன்..பாலிடிக்ஸ்…” அப்படின்னு சொல்லிக்கிட்டு ரெண்டு நாளைக்கு திரிவோம்..அப்புறம் ரெண்டு நாளைக்கு யாரும் கண்டுக்கலைன்னு சொன்னவுடனே..”மச்சி..ஒரு குவார்ட்டர் சொல்லேன்னு ஆரம்பிபோமுல்ல..சரி..திரும்பவும் விஷயத்துக்கு வருவோம்..

சரி..நம்ம குட்டிப்பையனுக்கு பொறந்த நாளுன்னு, இங்க உள்ளஇண்டியன்ரெஸ்டாரண்டுகளுக்கெல்லாம் போய் எவ்வளவுன்னு கேப்போமுன்னு போனேண்ணே.. நம்ம ஊருக்காரய்ங்க நடத்துற ஒரு ரெஸ்டாரண்ட், சோத்துக்கு ஊருகாய சாம்பாரு மாதிரி கலந்து அடிக்குற ஆந்திராகாரய்ங்க நடத்துற ஒரு ரெஸ்டாரண்டு அப்படின்னு சுத்திட்டு கடைசியா, பான்பராக் போட்டிக்கிட்டுபுளிச்சு”, “புளிச்சுன்னு எச்சிய துப்புற வடநாட்டுகாரய்ங்க ரெஸ்டாரண்டுக்கு போனெண்ணே..

உள்ள போனேவுடனே கோர்ட்டு சூட்டு போட்டுக்கிட்டுஆயியேஆயியே..”ங்கிற மாதிரி ஒருத்தர் வந்தாருண்ணே..என்னை மேலேயும் கீழேயும் பார்த்துக்கிட்டுஅங்கிட்டு ஓரமா நில்லுங்குறமாதிரி ஒரு பார்வை..எனக்குன்னா ஜிப்பு ஒழுங்காத்தான் போட்டுருக்கமான்னு ஒரு டவுட்..எதுக்கும் சரிபார்த்துக்கிட்டேன்அவர்கிட்ட போய்..

ஆக்சுவலி.. ஆம் கமிங்க் டு அரேஞ்ச் ஹால் பார் மை சன் பர்த்டே பார்ட்டி..”

சொன்னத முழுசா கூட கேட்டாருன்னு கூட தெரியல..

கேன் யூ வெயிட் பார் மினிட்..”ன்னுகிட்டு அங்கிட்டு திரும்பி பார்த்தார்..பார்த்தா, ரெண்டு வடநாட்டுக்கார பார்ட்டிங்க..இது..பாட்டிங்க..நைட் 8 மணிக்கு கூட புல்மேக்கப்ப போட்டுக்கிட்டு

ஹே..சர்மாங்க

நம்ம ஆளு..

கொஞ்சம் தள்ளுய்யா..” அப்படிங்குற மாதிரி என்னைதாண்டி, வழக்கம்போலஆயியே..ஆயியேசொல்ல எனக்குசரி..வருவாரு..கஸ்டமருதான முக்கியம்னு யோசிக்க ஆரம்பிச்சேன்..அப்புறம் 3 பேரு இந்த ஊருக்காரய்ங்க வந்தாய்ங்க.. அவிங்கள விழுந்து, விழுந்து கவனிக்க ஆரம்பிச்சாரு..அவிங்க உக்கார்ந்தவுடனே, பக்கத்திலயே நின்னு, “என்ன சார் வேணும்..” அப்படிங்குற மாதிரி கவனிக்க, “அடடா..என்ன ஒரு அக்கறை..என்ன ஒரு அக்கறைன்னு எனக்குன்னா பெருமை..ஒரு இந்தியாக்காரன் எப்படி கவனிக்குறான் பாருய்யான்னுஇந்தியன்னா சும்மாவா..” அப்படின்னு கண்னு கலங்கிடுச்சுண்ணே..

அப்புறம் என்ன கடுப்புன்னு கேக்குறீங்களா..வேற ஒன்னுமில்ல..அடுத்த ரெண்டு நிமிஷத்துல, நம்ம ஊருக்கார பயபுள்ளைக குடும்பம் சகிதமா வந்தாய்ங்க்..நம்ம பானிபூரிகார சர்மா நேர்மையா இருந்தா என்ன பண்ணியிருக்கணும்..அவிங்களையும், இந்த ஊருக்கார்ய்ங்க மாதிரியே வரவேற்றுக்கணுமில்ல..அதுதான் இல்ல..கண்டுக்ககூட இல்லைண்ணே..அங்கிட்டு போயி உக்காருங்குற மாதிரி நின்னுக்கிட்டு இருக்காரு..

எனக்குன்னா ஷாக்..சர்மா, இப்ப அவசரம், அவசர்மா உள்ள ஓட..ஆஹா..”ரொம்ப நேரமா நிக்குறீகளே..செத்த உக்காருங்கஅப்படின்னு சேர் எடுத்துவர போயிருக்காருன்னு நினைச்ச..அதில்ல..அங்கிட்டு கார்பெட்டுல துசி இருக்காம்துடைக்கிராராம்..அட பட்டரு(அதாவது வெண்ணை..), மனச புல்லா தூசிய வைச்சிக்கிட்டு கார்பெட்ட ஏண்யா துடைக்கிற….குத்துகல்லு மாதிரி..உங்க நாட்டு ஆளுங்க, சோத்துக்கு லைனுல நிக்கிறோம்..அதவிட்டுட்டு அவிங்கள விழுந்து, விழுந்து கவனிக்கிறாருண்ணே..

ஏன்யா..நீ என்ன பிரைம் மினிஸ்டரா..உன்ன கவனிக்கலைனா, உடனே அம்புட்டு பேரும் கெட்டவய்ங்களா..”ன்னு கேட்டா..அதில்லன்னே பிரச்சனை..இதுல இருக்குற அரசியல புரிஞ்சுக்கிட்டா போதும்..அந்த அரசியலுதான் மேட்டரே..இங்க மட்டுமில்ல..எங்கயுமே, நம்மளக்கு தரவேண்டிய மரியாதையயும், கவுரவத்தையும் தர்றதில்லேண்ணே,..அதாவது, நம்ம காசுக்காக ரெஸ்டாரண்ட் வைச்சிருக்குற ஆளு..நம்ம காசுவேணும்..ஆனால், “இவிங்களுக்கெல்லாம் மரியாதை தரணுமாங்கிற அலட்சியம்..ஏன்னா நம்ம தோலும், நம்ம அமைப்பும் அவிங்க கண்ணை உறுத்துது..

அமெரிக்காவுல, இந்த ஊருக்காரய்ங்க நடத்துற ரெஸ்டாரண்டுல சொல்லுறேண்ணே..எல்லாத்துக்கும் சமஉரிமை..ஒரு அமெரிக்கன எப்படி நடத்துறானோ, அதுமாதிரியே, ஒரு மெக்சினையும் நடத்துறான்..ஒரு இந்தியனையும் நடத்துறான்..ஒரு சைனாக்காரனையும் நடத்துறான்..ஆனா நம்ம நாட்டுக்காரய்ங்க நடத்துற ரெஸ்டாரண்டுல, மனுசனா மனுசனா கூட மதிக்கமாட்டுறாய்ங்க..அதுவும், கொஞ்சம் திராவிட கலருலயோ, தென்னிந்தியர் வகையில் வந்தா..அவ்வளவுதான்..அப்படி ஒரு பார்வை

அப்படி ஒரு ஹோட்டலில் என் பையனுக்கு பங்க்சனே வேணாங்குற முடிவுல வெளியே வந்துட்டேன்..அப்படி என்னண்ணே நம்மெல்லாம் கீழே போயிட்டோம்..தக்காளி..எங்க வீட்டுக்கெல்லாம் அவிங்கல்லாம் வந்தா எப்படி கவனிப்போம்..ஆனா..ஏண்ணே..அவிங்களுக்கெல்லாம் அப்படி தோண மாட்டிங்குது..அவிங்க, கண்ணை உறுத்துறது எது..கோர்ட்டும் சூட்டும் போடலைன்னா..அல்லது, இந்த திராவிட கலரா….அட பட்டருங்களா..நீங்க, மூச்சுக்கு மூணு தடவைதி ஐகான் ஆப் நேசன்அப்படின்னு சொல்லுற அப்துல் கலாம், எங்க ராமேஸ்வரம்யா….நீங்க ஐபாடுல கேட்குற, இந்திப்பாட்டுல பாதி எங்க ஊருக்காரரு, .ஆர் ரகுமான் போட்டதுய்யா..கதற கதற ஒரு பெண்ணை கற்பழிச்சு கொன்ன கொடூரம் நடந்தது, டில்லி லய்யா..சென்னையில இல்ல..மசூதியையும், கோயிலையும், சர்ச்சையும் இடிக்குறது, உங்க ஏரியா பக்கம்தான்யா….உங்களவிட நாங்கதான்யா எல்லாத்துலயும் டீசண்டு

தக்காளி..இதுமாதிரி நம்மளை நடத்துறதலாண்ணே, “நான் இந்தியன்னு சொல்லவே தோணமாட்டிங்குது….தக்காளி..அடுத்த முறை அந்த ஆளை பார்த்து ஒன்னு சொல்லலாம்ன்னு இருக்கேன்

இப் யூ டை டுடே, டுமாரோ யூ வில் கெட் மில்க்..”

அதாவது..

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்..”