Saturday 27 April, 2013

தமிழேண்டா.....


தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்ற சொல்வடையை கேட்கும்போது நக்கலாக "என்ன கவுத்துவிடும் குணமா" என்று கேட்பதுண்டு. பொதுவாக "தமிழனுக்கு தமிழனே உதவி செய்ய மாட்டாண்டா..அப்புறம் எங்கே முன்னேறுவது" என்று பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்..

ஆனால் உதவி செய்வதற்கு முதலில் ஒன்றிணைய வேண்டுமே..தமிழன் முதலில் எங்கே இருக்கிறான் என்றாவது தெரியவேண்டுமே..தமிழ்நாட்டில் பிரச்சனையில்லை..ஆனால் தொலைதூரத்து தேசங்களில்..

எனக்கென்னமோ, தமிழை வளர்ப்பதிலும், தமிழ்மொழியின் அருமையை எடுத்துகூறுவதிலும், தமிழ்நாடடிலுள்ள தமிழர்களை காட்டிலும், புலம்பெயர்ந்த தமிழர்களும், அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்களும், செய்யும் முயற்சிகள் எவ்வளவோ மேலாக இருக்கிறது..

அமெரிக்காவை, ஒரு மினி தமிழ்நாடு என்று கூறலாம்..வால்மார்ட்டிலோ அல்லது ஏதாவது வணிக வளாகங்களிலோ நம்ம ஆட்களைப் பார்த்துவிட்டால் ஒரு பொறி வருமே..

"நீங்க தமிழா.."

என்று கேட்கும்போது கண்களில் தெரியும் ஆர்வம், நம்மையும் தொற்றிக்கொள்ளும்..

அப்படி "நீங்க தமிழா" என்று கேட்ட ஒருவரிடம் "இல்லீங்க..நான் ராசா" என்று கடித்தபோது.."கண்டிப்பாக நீங்க தமிழ்தான்..இப்படி கடிக்கிறீங்க" என்றார்..

அமெரிக்காவில் முதல்முதலாக வந்தபோது சுற்றி முற்றி தெரியாத, அயல் நாட்டு முகங்களையே பார்த்து பயந்து போயிருந்த எனக்கு "அட..நம்ம ஊரு தாம்பா..இதுவும்..நாங்க இருக்கோம்" என்று தைரியம் தந்தது, இந்த ஊர் தமிழ்மன்றம்..அதாவது "ஜாக்சன்வில் தமிழ்மன்றம்..."

ஜாக்சன்வில் தமிழ்மன்றாம் நான்குபேரோடு ஆரம்பிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டு, இப்போது நூற்றுகணக்கானோர் உறுப்பினர்களாக இருப்பதைப் பார்த்தபோது, வியந்தேன்..

தமிழ்மன்றம் என்றால் சற்று பேருக்கு, நாலு பேர் கூடுவது..கதைகள் பேசுவது என்றில்லாமல், நிச்சயமாக, ஒரு அருமையான அமைப்பாகவே செயல்படுகிறார்கள்.."ஓ..மாம்..இட்ஸ் டூ ஹாட்" என்று நுனிநாக்கு ஆங்கிலம் பேசும், இங்கு பிறந்த தம் குழந்தைகளுக்கு, தமிழின் பெருமையை, பொறுமையாக எடுத்து சொல்லுகிறார்கள்....பயப்படவைக்கும் கலாச்சரம் நிறைந்த அமெரிக்காவில், முடிந்த வரை நம் பண்பாடு கலாச்சார பெருமைகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது, உண்மையிலேயே நம்மை பெருமைப்பட வைக்கிறது..

தமிழ்மணம் கமழவைக்கும் நிறைய விழாக்கள், மாதந்தோறும் நடத்துகிறார்கள்..அமெரிக்காவில் வந்து "வாங்க பங்காளி..." வாடா மச்சி.."
"வணக்கம் மாப்பிள்ள.." என்றெல்லாம் கேட்கும்போது, ஏதோ தமிழ்நாட்டிலேயே இருப்பது போல ஒரு உணர்வு..அப்படி நடந்த அருமையான ஒரு நிகழ்ச்சி, அருமையான "மூவேந்தர் விழா..."



இந்த மூவேந்தர் விழாவுக்கு, அனைவரும், தாம் பிறந்த ஊரின் அடிப்படையில் "சேரர்..சோழர்..பாண்டியர்" என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு வாரமாகவே தயார்படுத்துதல் நடந்தது..முதல்படியாக, மூவேந்தர்களைப் பற்றி 3 கேள்விகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு, பதிலளிக்கும் உறுப்பினர்களுக்கு, புள்ளிகள் தரப்பட்டனர்.."நமீதா நாய்குட்டி பேர் என்ன" போன்ற கேள்விகள் இல்லாமல் உண்மையிலேயே மூவேந்தர்களின் வரலாற்றைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விகள் சிறப்பு...

அடுத்து கோலகலாமாக விழா இன்று நடந்தது..முகப்பிலேயே "மூவேந்தர் விழாவுக்கு வருக..வருக.." என்று அன்பான அறிவுப்பலகை வரவேற்க..முதலில் நுழைந்தவுடன் என் கண்ணில் பட்டது என்ன தெரியுமா..
தமிழனின் குளிர்பானமான "மண்பானை மோர்"..நான் ஐந்து குவளை குடித்துவிட்டு, கழிப்பறையை நோக்கி ஓடியது இன்னொரு கதை..ஆனால் போய்விட்டு வந்து ஆறாவது குவளை அடிக்கும் அளவுக்கு, மோரின் சுவை..ஊருப்பக்கம் தர்ற மோரெல்லாம், மோரே இல்லீங்க..அவ்வளவு அருமையான மோர் அமெரிக்காவில்..



அப்படியே நடந்து வந்தால், மூவந்தர் பற்றிய வரலாற்றினை, அருமையான படங்களாகவும், கார்ட்டுன்களாகவும் அள்ளித் தருகிறார்கள்..அதைப் படித்து கொண்டே இருக்கும்போது, "உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால்" என்று தலைவர் பாட்டு, ஒலிபெருக்கிகளில்..ஆஹா..அப்படியே கேட்டுகொண்டு நடந்தால்.."வாங்க...வாங்க" என்று இனிமையாக ஒருவர் வரவேற்றால், எப்படி இருக்கும்..அப்படியே நம்ம ஊர் தெருவுக்குள் நடப்பது போன்று ஒரு பிரமை..அருகில் அம்மா, அப்பா இல்லாதது ஒன்றுதான் குறை..அதுவும் "வாங்க மாம்ஸ்" என்று நண்பன் வந்து தோளில் கைபோடும்போது, அம்மா, அப்பா அருகில் இல்லாத குறையை போக்குகிறது..

மதிய உணவிற்கு கூட்டாஞ்சோறு..சும்மா, பர்கர், பிட்சாவெல்லாம் இல்லீங்கோ..சரவணபவன் மீல்ஸ் மாதிரி, அனைத்து வகை பச்சடிகளும், அரிசி உணவுகளும்..சாப்பிட்டுவிட்டு தூக்கம் போடலாம் என்று நினைத்தால்.."மன்னிக்கவும்..விளையாட்டெல்லாம் இருக்கு."



அந்தப்பக்கம் , இரண்டு குழந்தைகள், கிட்டி விளையாண்டு கொண்டிருப்பதை பார்க்கும்போது.."சே..கிட்டியெல்லாம் விளையாண்டு, எம்புட்டு நாளாச்சு" என்று மன கொசுவர்த்தியை ஓடவிட்டேன்..அப்படியே ஒரு பொங்கல் விழாவுக்கு மதுரைப் பக்கம் என்ன நடக்குமோ, அதே மாதிரியான விளையாட்டுக்கள்..கபடி..ஓட்டப்பந்தயம், பானை உடைக்கும்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி..என்று அனைத்து விளையாட்டுகளையும் குதுகலமாக விளையாண்டபோது, எம் தெருக்களில் பொங்கல் திருவிழாவுக்கு அமர்க்களப்படுத்தியதுதான் நினைவுக்கு வந்தது..

கலந்து கொண்டது, நான்கு, ஐந்து மணிநேரம்தான்..ஆனால் அனைத்தும் நம் தமிழ்மண்ணை, என் முன் கொண்டு நிறுத்தின..அந்த ஐந்து நிமிடமும், அனைவரும் குழந்தையாகினார்கள்..

"ஏ..இவன் கல்லாட்டாம் ஆடுறாண்டா..",
"என்னடா மச்சி..பார்த்து எம்புட்டு நாளாவுது.."
"மருதப்பக்கம் நல்ல மழையாமே.."
"வீட்டுல எல்லாரும் சவுக்கியமா..."
"அய்யா..கபடி..கபடின்னு மூச்சுவிடாம பாடணும்.."

அந்த ஏரியா முழுக்க தமிழ்மணம்தான்...அந்த இடத்தை விட்டு கிளம்ப மனமே இல்லை...ஒருவழியாக கிளம்பி..காரை கிளப்பும்முன்பு..என் காலரை தூக்கி விட்டு கொண்டு பெருமையாக சொன்னேன்...

"தமிழேண்டா..."

Thursday 25 April, 2013

கமல்ஹாசன் முத்தமும், கோவாலு கோபமும்



இரண்டு மாசமா கோவாலு கண்ணில மாட்டாம தப்பிச்சிக்கிட்டு இருந்தேன்..இன்னைக்கு முடியல..என் கிரகம் அன்னைக்கு குத்தவைச்சு கோலி ஆடிடுச்சு போல..

அமைதியா ஒன்னுக்கடிச்சுகிட்டு இருக்குறப்பத்தான் அவனைப் பார்க்கணுமா..

"டேய்...ராசா...."

"அய்யோ..கோவாலு.."

"என்னது "அய்யோ" வா.."

"இல்லடா கோவாலு..இது அந்த "அய்யோ..." இல்லை..அந்த "அய்யோ..."

"ஓ..அந்த "அய்யோவா.." நான் கூட அந்த "அய்யோ" ன்னு  நினைச்சுட்டேன்.."

"அய்யோ..அய்யோ.."

"சரி..கோவாலு..அது ஏண்டா வில்லங்கமான நேரத்துல வர்ற..."

"அதவிடுடா.."

"இப்பத்தாண்டா ஆரம்பிச்சுருக்கேன்..விட்டா பேண்ட் நாசமாகிரும்டா.."

"டே ராசா..நான் கொலைவெறியில இருக்கேன்..கடுப்பை கிளப்பதா.."

நான் ஏனுன்னு கேட்பேன் நினைக்கிறீங்க..மாட்டேனே..மாட்டவே மாட்டேன்..இது மாதிரி ஏனுன்னு கேட்டு, கொலைவழக்கு தவிர மத்த பிரச்சனை எல்லாத்துலயும் மாட்டிருக்கேன்..ஆனாலும் அவன் விடமாட்டான்..

"ராசா..என்ன இருந்தாலும் கமலு அப்படி பண்ணியிருக்க கூடாதுடா.."

"அப்படி என்ன பண்ணுனாரு.."

"முத்தம் கொடுத்துட்டாரு.."

"டே..கோவாலு..அவரு முத்தம் கொடுக்காம இருந்தாத்தானடா நீ ஆச்சர்யப்படணும்..அவருதான் முத்த ..இது..உலகநாயகனச்சே.."

"ராசா...படத்துல கூட பரவாயில்லை..ஆனா..பொதுஇடத்துல வைச்சு..

"டே  கோவாலு..விளக்கமா சொல்லு.."

"அதாவது ராசா..நம்மளையெல்லாம் கோடிஸ்வரனா ஆக்கித்தீரணும்னே ஒரு நிகழ்ச்சி வைச்சிருக்காய்ங்கள்ள.."

"ஆமா..எட்டுக்காலு பூச்சிக்கு எத்தனை கால்..அப்படின்னு அறிவூபூர்மா கேட்டு அன்னைக்கு புல்லா சிந்திக்க விட்டாய்ங்களே..அவிங்கதான..ஆமா..எட்டுக்காலு பூச்சிக்கு எட்டுகாலுதான.."

"டே..மேட்டரு அதில்லை..அந்த நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன் சும்மா இருக்காம நம்ம ஆங்கர் திவ்யதர்சினிக்கு பச்சக்..பச்சக்குன்னு முத்தம் கொடுத்துட்டாருடா.."

"அடங்கொன்னியா..திவ்யதர்சினி என்னடா பண்ணுச்சு..போலீசுல கீலீசுல கம்ப்ளெயின் பண்ணிடுச்சா..அய்யோ..கமலுக்கு என்ன ஆச்சு..ஊரை விட்டு போயிருவேன்னு திரும்ப பேட்டி கொடுப்பாரே..உடனே வீட்டை வித்து பத்திரத்தை அனுப்பணும்..என்னைவிடு உடனே போய் வீட்டை விக்கணும்.."

"டே ராசா..முத்தம் கேட்டதே திவ்யதர்சினிதாண்டா..."

"அய்யோ..அப்படியா...ஆஹா..சரி..அதுக்கு ஏண்டா நீ கோவமாகுற..கமலுக்கு 55 வயசு இருக்கும்..ஒரு அப்பா ஸ்தானத்துல முத்தம் கேட்டதுல என்ன தப்பு.."

"டே ராசா..என்னடா இப்படி சொல்லிட்ட..நம்ம தமிழ் கலாச்சாரத்துக்கு என்ன ஆவுறது..ஓ மை காட்..அவர் டமிழ் கலாச்சாரம் இஸ் ஸ்பாயில்டு.."

"தக்காளி..அத கூட ஓட்டை இங்கிலீசுல சொல்லிட்டு தமிழ் கலாச்சாரமா..சரி..தமிழ் கலாச்சாரம்னா என்ன சொல்லு.."

"அது..அது வந்து..தமிழுக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்குல.."

"சரி..இருக்கு,,அதுதான் என்னன்னு சொல்லு முதல்ல..."

"அது வந்து..இந்த மாதிரி முத்தம் கொடுத்தா..அதைப் பார்க்குறவ்யிங்க மனசு கெட்டுபோகாதா.."

"ங்கொய்யால..மனசுதான..நல்லா நைட்டு பன்னிரெண்டு மணிக்கு அலாரம்வைச்சு, சூர்யா டிவில மலையாளப்படம் பார்த்தவந்தானே..அப்பெல்லாம் மனசு தங்கம் மாதி இருந்துச்சோ..."

"அதெல்லாம் தெரியாது..அவரு எப்படிடா முத்தம் கொடுக்கலாம்..கட்டிப்பிடிக்கலாம்.."

"சரி..டூயட் பாட்டுங்குற பேருல தமிழ்சினிமாவில என்னென்ன பண்ணுறாய்ங்க..அப்பெல்லாம் தமிழ்கலாச்சாரம் கெடாதோ.."

"அதெல்லாம் தெரியாது..தமிழ் கலாச்சாரம்.."

"கோவாலு..திரும்ப, திரும்ப தமிழ் கலாச்சாரமுன்னு சொல்லிறியே..தயவுசெஞ்சு அது என்னதான் சொல்லுடா முதல்ல..."

அப்படின்னேன்..பயபுள்ள கொலைவெறியா பார்க்குறான்..ஆனா பதிலு சொல்ல மாட்டீங்குறான்..

கோவாலை விடுங்கண்ணே..நீங்க சொல்லுங்க..தமிழ் கலாச்சாரமுன்னா என்னண்ணே..ஹல்லோ..எங்க ஓடுறீங்க..பதில் சொல்லிட்டு போங்க..ஹலோ..ஹலோ..


Wednesday 24 April, 2013

ஐ ஆம் பேக்...





ஆமா..பெரிய அஜீத்துன்னு நினைப்பு அப்படின்னு யாருண்ணே அங்கிட்டு முணுமுணுக்கிறது..பிச்சுப்புடுவேன்... எல்லாரும் கொஞ்சம் காதை மூடிக்கிங்க..


ஐ ஆம் பேக்....


நோ..நோ..நோ...அதாவது நான் பேக்கு இல்லை..அதாவது..ஐ ஆம் பேக்..


அதாவதுண்ணே..நான் திரும்ப வந்துட்டேன்..பதிவுலகத்துக்கு....


ஆமா..இவரு பெரிய கப்பல் வியாபாரி..இரண்டு மாசம் பிசினஸ் டிரிப்பு போய், நாலு கப்பலை வித்துட்டு, திரும்ப பதிவுலகத்துக்கு வந்துருக்காரு அப்படின்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லலாம்..அதெல்லாம் துடைச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்ல...


கடைசியா பதிவு எழுதி இரண்டு மாசம் ஆகுது..அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருந்த அப்படின்னு கேக்கலாம்..நல்லா கேட்டுக்குங்க..


1) தூங்கினேன்..

2) சாப்பிட்டேன்..
3) ஆபிஸ் போனேன்..
4) தூங்கினேன்..
5) சாப்பிட்டேன்..

ங்கொய்யால, இரணடு மாசததுல இதைத் தவிர எதையும் பண்ணல..உண்மைய சொல்லப்போனா , எழுதி என்னத்த பண்ணப்போறோமுன்னு ஒரு அலுப்புதான்..அவிய்ங்க பிளாக்க தொறந்து கூட  நொம்ப நாளாகுதுன்னா பாருங்களேன்..நேத்தைக்கு இண்டர்நெட்ட ஓபன் பண்ணுறேன்..சடாருன்னு நம்ம பிளாக்கு வந்து நிக்குது....அப்பத்தான் "ஆஹா..நம்மளும் பெரிய எழுத்தாளாரா இருந்துருக்கோமுன்னு நினைப்பே வந்தது..ஆஹா..நம்ம இல்லாம பதிவுலகம் தவிச்சு தண்னி குடிச்சுருக்குமேன்னு அவசரம் அவசரமா தமிழ்மணம் ஓபன் பண்ணி பார்க்குறேன்.."விஜய்காந்து வீட்டு முன்னாடி சரிதா உண்ணாவிரத போராட்டம்" அப்படின்னு இருக்கு...


ஆஹா..என்னய்யா இது..விஜய்காந்து வீட்டு முன்னாடி எதுக்குய்யா சரிதா உண்ணாவிரதம் இருக்கணும்னு..ஒருவேளை விசயகாந்து பையன் நடிக்குற மாதிரி இருந்தாப்புல..அவருக்கு ஜோடியா நடிக்கணும்னு சரிதா உண்ணாவிரதம் இருக்குறாங்களான்னு ஒரு டவுட்டு..ங்கொய்யால ஓபன் பண்ணி பார்க்குறேன்..விஜய்காந்து ன்னு பெயர்கொண்ட 20 வயது இளைஞர் வீட்டுமுன்னாடி, சரிதா அப்படிங்குற ஒரு பொண்ணு உண்ணாவிரத போராட்டம் நடத்துறாங்களாம்..


அப்ப முடிவு பண்ணினேன்..திரும்பவும் நம்ம பிளாக்கு எழுதுறோம்டா..இல்லைண்ணா, இந்த பதிவுலகத்தை யாரும் காப்பாத்த முடியாது.. 


நோ..நோ..நீங்களெல்லாம் என்னதான் "திரும்ப வந்திராதீங்க"ன்னு மெயில் போட்டாலும், நான் வர்றத யாராலும் தடுக்கமுடியாது..


ஏன்னா..நான் ஒருதடவ முடிவு பண்ணிட்டா...என் பேச்சை நானே கேட்க மாட்டேன்..ஏன்னா பேசிக்கலா நான் ஒரு சோம்பேறி...