மகனின் உடல்நிலை
காரணமாக ஒரு வாரம் வீட்டிலேயே தங்க வேண்டியிருந்த்து. காலையில் சாப்பாடு, நடுவே
தூக்கம், மதியம் சாப்பாடு பின்பு ஒரு தூக்கம், இரவில் சாப்பாடு, பின்பு நீண்ட தூக்கம்.
வடிவேலு சொல்லியது போல “சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா சார்..இருக்குற
எல்லா டவுட்டும் வந்து தொலைக்கும். நடுநடுவே இது போல “ஊர் ஏன் சார் இப்படி இருக்குது..இது மாறாதா
சார்..” என்று ஏதோ புதியதாக கேள்வி கேட்பது போன்ற பதிவு எழுதுவது எவ்வளவு கஷ்டம்
தெரியுமா..சும்மா இருந்தாதான் இது போன்று யோசிக்க தோன்றும் என்ற வரலாற்று உண்மை
இன்றுதான் புலப்பட்டது.
கிடைத்த வேளைகளில், எனக்கு உற்ற
நண்பனாக இருந்த்து, தினத்தந்தியும், அவ்வப்போது கிடைக்கும், இணைய இணைப்பும் தான்.
கடைசியாக தினத்தந்தி செய்தித்தாள் படித்து, நான்கு வருடங்கள் இருக்கும்.
கண்டிப்பாக ஏதாவது புரட்சி செய்திருப்பார்கள் என்று ஆவலாக பார்த்தபோது, நான்
பார்த்த ஒரே புரட்சி “கன்னித்தீவு” கதைப் பட்த்தை கலரில் அமைத்த்துதான். என்ன ஒரு
புரட்சி.ஆங்க்..மறந்துவிட்டேன், இன்னொரு புரட்சி, விளம்பரங்களுக்கு நடுநடுவில்
ஆங்காங்கு செய்திகளும் வந்திருந்தன.
ஆனால் தினமலர் போல “ஒரு சதக்,
குபீர், திடுக், கபால்” போன்ற தலைப்புகள் வராதது கொஞ்சம் ஆறுதல். டீசண்டாக “கள்ள
காதலில் ஈடுபட்ட வாலிபர் குத்திக்கொலை”, “குடித்துவிட்டு மணமேடைக்கு வந்த மணமகனை
மறுத்த பெண்” என்று எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் மிக்க மகிழ்ச்சி.
ஒரு பக்கம் முழுவதும், சினிமா
விளம்பரங்களா அடுக்கியிருந்தனர். அதுவும் சில படங்களை “வரலாறு காணாத வெற்றி”,
தியேட்டர் முழுக்க வெடிச்சிரிப்பு”,”இளைஞர்கள் கொண்டாடும்” என்று தலைப்பிட்டபோது, பிதாமகனில்
சூர்யா, “சரோஜாதேவி, யூஸ் பண்ணின சோப்பு டப்பா சார்..வாங்க சார், வாங்க..” என்று
கூவுவது போல இருந்த்து..
மணப்பந்தல் பக்கமும் மாறவில்லை. அதே
“நன்றாக படித்த, உயரமாக, சிகப்பாக, ****
இனத்தில், வீட்டை முறையாக கவனித்து கொள்ளும், மணமகள் தேவை..”. இப்படி விளம்பரம்
கொடுத்த அந்த அரவிந்த் சாமியை ஒரு நாள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று ஆசையாக
இருக்கிறது..ங்கொய்யால, அனைவரும், ஐஸ்வர்யாராய்க்கு ஆசைப்பட்டால்,
மற்றவர்களெல்லாம் எங்கு செல்வது. அதிலும், இன்னொரு விளம்பரம் பார்த்தபோது, பி.பி
கண்டபடி எகிறியது. அது,
“ஆன்சைட்டில்(அமெரிக்கா அல்லது வேறு
எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை) மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும்,
உயரமான, படித்த(ங்கொய்யால அப்பறம் எப்படிடா ஆன்சைட்), சிகப்பான, சென்னையில் சொந்த
வீடு வைத்திருக்கும் மணமகன் தேவை..”
இரண்டு விஷயங்கள் மட்டும், இதில்
தெரிந்து கொண்டேன்..
“மணமகன்/மணமகள்” கண்டிப்பாக
சிகப்பாக இருக்கவேண்டும்.
“ஒரு ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான்,
ரேஞ்சுக்கு மணப்பெண்/மணமகன் கிடைத்தால் தேவலாம்..”
நாட்டில் எத்தனை சாதிகள்
இருக்கின்றன என்று தெரியவேண்டுமானால், நேராக இந்தப் பக்கத்திற்கு வந்துவிடுங்கள்..
அடுத்து மாவட்ட செய்திகள் என்று ஒரு
நாலு பக்கத்தை நிரப்புகிறார்கள்..யப்பா, படித்துவிட்டு, கையில் ரத்தம், கித்தம்
இருக்கிறதா என்று ஒருதடவை பார்த்து விடுங்கள். அவன் பொண்டாட்டியை, இவன்
இழுத்துட்டு ஓடிட்டான், இவன் பொண்டாட்டியை அவன் இழுத்துட்டு ஓடிட்டான். வாலிபர்
பழிக்கு பழியாக கழுத்தை அறுத்து கொலை, மாமியாருடன் ஓட்டம், மூளை சிதறி விழுந்தது,
வாலிபர் தற்கொலை”
கொஞ்சம் ஆறுதலான ஒரே பக்கம்
விளையாட்டு மற்றும் வணிகவியல் செய்திகள். படிக்க கொஞ்சம் டீடெய்லாக இருக்கின்றன.
படித்த அனைத்துப் பக்கங்களிலும், இன்னமும்
எனக்கு புரியாத, அல்லது புடிபடாத ஒரே பகுதி, “ஆண்டியார்”. அரைகுறையாக ஆடை அணிந்த
ஒரு பெண், ஒரு ஆணை ஆசையாக பார்ப்பதுபோல ஒரு படம் அதற்கு பக்கத்தில் நாம்ம் போட்ட
ஆண்டியார் பாடுகிறார்..”இப்படி, இப்படியே பூட்டி கொண்டால், எப்படி, எப்படி நான்
திறந்திடுவேன்..”
என்ன்ங்கய்யா இது..இந்த பாட்டும்,
படமும் எதற்கு, அல்லது யாருக்கு. இதை யோசித்து, யோசித்து, நாலு பெரியவர்களிடம்
கேட்டால் “பாட்டு சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது”
என்கிறார்கள்..யாருக்காவது தெரியுமா..??
பொதுவாக சொல்லவேண்டுமென்றால்,
தினத்தந்தியை எவ்வளவுதான் விமர்சனம் செய்தாலும், காலை வேளைகளில், அதைப்
படித்தபின்புதான், ஒரு நாள் பூர்த்தியான உணர்வு. நம் போன்ற நடுத்தரவர்க்கம்
படிக்கும் வகையில், எளிமையான கட்டமைப்பு, முடிந்தவரை விளக்கமான செய்திகள் என்று
தவிர்க்கமுடியாத்து போல் தான் இருக்கிறது..
அப்புறம் பொழுது போகாமல் கே.டிவியில்
“ரெட்” என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப்படத்தில் அஜீத், “ஹல்லோ..ஹலோ..எங்க
ஓடுறீங்க..கொஞ்சம் நில்லுங்க.ஹல்லோ..”