அண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன்..இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு..யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல…
பிரபல பதிவர்கள் எல்லாரும் ஒரு படகுப் பயணம் போறாங்கண்ணே. எல்லாரும் துடுப்பு போடுற படகுண்ணே..அது யார் யாருண்ணா…லக்கி லுக், கேபிள் சங்கர், சக்கரை சுரேஷ், உண்மைத்தமிழன், டோண்டு சார், இட்லிவடையார், செந்தழல் ரவி. நான் பிரபல பதிவர் இல்லாததால், பயணத்தின் கோ-ஆர்டினேட்டர்…
அவீங்க ராசா : எல்லாரும் நல்லா கவனிங்கப்பா..எல்லா பதிவர்களும் ஒன்னா கூடியிருக்கீங்க..இங்கேயிருந்து அக்கரைக்கு போகணும்னா 8 மைல் துடுப்பு போடணும்..எல்லாரும் ஒற்றுமையா துடுப்பு போட்டாத்தான் அக்கரைக்கு போக முடியும்..சண்டை போடக்கூடாது…சரியா???
லக்கிலுக் : யோவ்..நாங்க எல்லாம் பிரபல பதிவர்கள்..நீ யாருய்யா..
அவீங்க ராசா : அண்ணண்..நான் மதுரைக்காரண்ணே..இப்பதான் புதுசா எழுத ஆரம்பிச்சிருக்கேன்..உங்களை தாக்கி கூட ரெண்டு பதிவு போட்டுருக்கேண்ணே..
லக்கிலுக் : ஆ..அப்பிடியா..நான் ரொம்ப பிசிப்பா..எல்லாரும் என்னையே தாக்கி போடுறதுனாலே, எல்லாத்தையும் படிக்க முடியலே..என்ன தாக்கி ஏதாவது பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புங்கப்பா..தர்மசங்கடமா இருக்குல்ல..சேய்..ஒரே குஷ்டமப்பா..
செந்தழல் ரவி : அய்யோ..உங்களை தாக்கி பதிவு போட்டுட்டானா..யோவ் என்ன தைரியம்யா..இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப் போறீங்க..நாங்க சுவத்துல ஏறிட்டோம்..யாரு எங்களோட வர்றா…
லக்கிலுக் : யே..விடுப்பா..அனானில பார்த்துக்குவோம்..நீ மட்டும் எப்படிப்பா கோ-ஆர்டினேட் பண்ணுவ....கூட யாராவது இருக்காங்களா..
அவிங்க ராசா : ஆமாண்ணே..என் பிரண்டு சரத்பாபு இருக்காண்ணே..
சக்கரை சுரேஷ் : சரத்பாபுவா..மச்சான்ஸ் எல்லாரும் ஓட்டு போடுங்கப்பா..
லக்கிலுக் : யோவ்..சரத்பாபு என்னத்தையா பண்ண போறாரு..உடன்பிறப்புகளே..யாரும் ஓட்டு போடாதிங்க..எங்க கழகம் தோத்துரும்ல…
செந்தழல் ரவி : சக்கரை சுரேஷ்..எப்படி நீ பேசலாம்..ரத்தம் கொதிக்குண்ணே..லக்கிலுக் ஏன் சொல்லுரானுன்னா, சரத்பாபு எங்க கழக ஓட்டைப் பிரிக்குறாருய்யா..அய்யோ, இன்டெர்நெட் அழியப் போகுது..எல்லாரும் உள்ள..
அவிங்க ராசா : ஆகா ஆரம்பிச்சுட்டாருய்யா..அய்யோ அண்ணே அவரு அந்த சரத்பாபு இல்லண்ணே..இவரு வேற..சரி அதை விடுங்க..எல்லாரும் சேர்ந்த மாதிரி துடுப்பு போடுங்க..துடுப்பு போடுறப்ப, “ஏலேலோ ஐலசா” ன்னு சொல்லணும்..எங்க சொல்லுங்க..
எல்லோரும் : ஏலேலோ ஐலசா…
உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகப் பெருமானே…ஐலசா..
அவீங்க ராசா : அண்ணாச்சி அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது..ஆமா, செந்தழல் ரவி நீங்க ஏன் ஐலசா சொல்லாம இருக்கீங்க..சொல்லுங்க..
செந்தழல் ரவி : லக்கிலுக் சொன்னாத்தான் நானும் சொல்லுவேன்..
அவீங்க ராசா : ஓ..மறந்துட்டேன்..லக்கிலுக் அண்ணே..நீங்களும் சொல்லுங்கண்ணே..அப்பத்தான் ரவி சொல்லுவாரு..
லக்கிலுக் : நான் சொல்ல மாட்டேன்..சாருநிவேதிதா வந்தாதான் நான் சொல்லுவேன்..
அவீங்க ராசா : அய்யோ..அவர்ல்லாம் இங்க வர மாட்டாருங்க..கூப்பிடனும்னா இன்விடேசன்னெல்லாம் அடிக்கனும்..ஒரு தடவை இப்படித்தான், ஒரு பதிவர் சந்திப்புக்கு பிரபல பதிவர் ஒருத்தர் சாருவை கூப்பிட போயிருக்காரு..சூப்பர் ஸ்டாரை இப்பிடித்தான் கூப்பிடுவீங்களான்னு செம டோஸ்..
செந்தழல் ரவி : (முனுமுனுப்புடன்)..ஆகா..விவரம் தெரியாத பயலா இருக்கானே..
லக்கிலுக் : யோவ்..அவரை ஏன்யா எல்லாரும் திட்டுறீங்க..அவர் ஒரு பிழைக்கத் தெரியாத ஏமாளி எழுத்தாளர்யா..நல்ல மனுசன்யா..இப்பக்கூட வன்முறையின் தோல்வின்னு ஒரு பதிவு போட்டு இருக்காரு..அந்த கருத்துல ஒன்னுகூட எனக்கு உடன்பாடு இல்ல..ஆனாலும் பிடிக்கிது..அந்த கர்வம்..அவர் தான்யா எழுத்தாளர்..சாரு கொடி பறக்குதையா..
கேபிள் சங்கர் : கண்ணுக்கு எட்டுன வரைக்கும் ஒரு கொடியும் காணோமே..அது எப்படிங்க..யாரோட கருத்துலேயும் உங்களுக்கு உடன்பாடு இல்ல..ஆனா உங்களுக்கு பிடிக்குது..இளையராஜாவை திட்டுறீங்க..ஆனாலும் பிடிக்கிதுன்னு சொல்லுறீங்க..ஒன்னுமே புரியலேயே..நீங்க என் தோரணம் விமர்சனம் படிச்சீங்களா..அதுல ஷ்ரெயா கிளிவேஜ்..
டோண்டு சார் : சிவ, சிவா..என்ன இப்பிடியெல்லாம் பேசுறீங்க..
அவீங்க ராசா: ஆகா..எல்லாரும் கொஞ்சம் பேசாம துடுப்பு போடுறீங்களா..படகு நகரவே மாட்டிங்குது…டோண்டு சார் ஏதோ சொல்ல வரீங்க போல தெரியுது..
டோண்டு சார் : எங்கே பிராமணன்…
லக்கிலுக் : ம்…”ஆத்துக்குள்ளே” இருக்காரு..
சக்கரை சுரேஷ் : மச்சான்..நான் வேணா ஆத்துக்குள்ள குதிச்சு எடுத்து தரவா..நட்புன்னா உயிரையும் கொடுப்பான் இந்த சுரேஷ்..
செந்தழல் ரவி : கடவுளே..யாருய்யா இந்த சுரேஷ்ஷு..ஒரு எத்திக்ஸ் இல்ல..உனக்கு எப்படியா இவ்வளவு பாலோயரு…ஒன்னுமே புரியலையா..ஐயோ..இன்டெர்நெட் அழியப்போகுது..எல்லாரும் உள்ள போகப்போறீங்க..
இட்லிவடையார் : ரொம்ப சந்தோசம்..எல்லொரும் உள்ள இட்லி வடை தேர்தல் குழு அமைச்சுருவோம்..யாரு, யாரு எந்த ஏரியா..வழக்கம் போல, துக்ளக் பத்திரிக்கையில இருந்து கட் அண்டு பேஸ்ட் நான் பார்த்துக்குறேன்..
உண்மைத்தமிழன் : சார்..இது வேற ஏரியா..இப்பிடித்தான் திரையுலகப் பேரணில அண்ணன் பாரதிராஜா..(நீண்ட உரையை ஆரம்பிக்க..)
எல்லோரும் : ஆகா, இதுக்கு இந்த கடலே மேலுடா சாமி…
கடலில் எல்லோரும் குதிக்க..படகு மூழ்குகிறது….
(அண்ணே..யாரு மனசு நோகாம எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்..யாரோட மனச நோகடிச்சிருந்தா மன்னிச்சுங்கண்ணே..இந்த பதிவை படிக்கும்போது எத்தனை தடவை சிரிச்சீங்களோ அத்தனை ஓட்டு போட்டுங்க..))))