Friday 4 February, 2011

காதலிச்சே சாவுங்கடா

இப்போதுதான் காதலர்தினம் வெளிப்படையாக கொண்டாடப்படுகிறது. நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் எல்லாம் காதலர் தினம் என்றாலே பலபேருக்கு வெட்கம் வந்துவிடும். மனதுக்குள்ளே பல பட்டாம்பூச்சி பறந்தாலும், வெளிக்காட்ட முடியாத உணர்வுதானே காதல். நிறைய பேர் காதலர் தினம் கொண்டாடுவதற்கே காதலிகளை தேடி அலைந்தார்கள்.

அவர்களை எல்லாம் கிண்டல் செய்யும் கூட்டத்திலே நானும் ஒருவன். வேறு என்ன செய்ய, எங்களுக்கு காதலி கிடைக்கவில்லையே..

மச்சான்..எப்படித்தான் இந்த லவ்வு கருமத்தைப் பண்ணுராயிங்களோ..தூ..”

ஒரு பொண்ணு பின்னாடி அலையுறதுக்கு பதிலா நாயா பொறக்காலம்டா

சுடிதார் பின்னாடி போறவியிங்க எல்லாம் ஆம்பிளையே இல்லைடா..”

இப்படிப்பட்ட டயலாக்குகள்தான் நாங்கள் அதிகம் பேசுவது. மெல்ல மெல்ல இந்த உணர்வுகளே எங்கள் மனதை ஆக்கிரமிக்க, நாங்களே எங்களுக்கு ஒரு திரையைப் போட்டுக் கொண்டோம்..அல்லது திரை இருப்பதாக சொல்லிக் கொண்டோம். இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டவர்களை கொண்டு எங்கள் வகுப்பறையில் தனியாக அணி உருவாக்கப்பட்டது. “காதலை மதிக்காத ஆம்பிளைங்கடாஎன்று காலரை தூக்கி விட்டுக் கொண்டோம். வகுப்பறையில் எந்த பெண்ணிடமும் பேசவில்லையா, உடனே எங்கள் அணியில் இடம் அளிக்கப்பட்டது..”மனுசன்டா..” என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். பெண்களோடு பேசும் பையன்கள் புழுவைப் போல் பார்க்கப்பட்டனர். “நீயெல்லாம் சுடிதார் வாங்கிப் போட்டுக்கடா..இந்தப் பொழைப்புக்கு..” என்று கேலிப்பேச்சாலேயே எங்கள் அணிக்கு வந்தவர்கள் அதிகம். இன்னும் உண்மையைச் சொன்னால் அப்படி வந்தவன் தான் நானும்.ஹி..ஹி..

எங்கள் அணியின் தலைவன் என் நண்பன் ஆனந்த். இந்த அணியின் தலைவனாவதற்கு முன்பு வகுப்பறையில் அவனுக்கு ஒரு பெண் நண்பி இருந்தாள். பெயர் பிரீத்தி. இரண்டு பேரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்றார்கள். தினமும் அவளிடம் இருந்து சாக்லேட் வாங்கி இருப்பதை பெருமையாக காண்பித்தான். “ஒரு பயலும் அவ வீட்டுக்கு போகமுடியாதுடா..நான் மட்டும்தாண்டா போவேன்..அவங்க வீட்டுல அம்மா, அப்பா கூட உக்கார்ந்து சாப்பிடிருக்கேண்டாஎன்று பெருமையாக சொல்லிக் கொள்வதைக் கேட்டு பலபேருக்கு அல்சர் வந்திருக்கிறது. அழகான பெண் வீட்டுக்கு அடுத்தவன் சென்றால் வயிறு பத்திக் கொள்ளதா..அது போலதான். “நாங்கதாண்டா..உண்மையான நட்பு..அவதாண்டா..பிரண்ட்சிப்பின் அடையாளம்பெருமையாக சொல்லுவான்

டே..ஆனந்து..அவளை லவ் பண்ணுறியா..”

சீ..போடாங்க..தூய்மையான நட்புடா..லவ்வுன்னு சொல்லி கொச்சைப்படுத்தாதடா..”

அவனுடைய நட்பைப் பார்க்கும்போதெல்லாம் எல்லாருக்கும் பொறாமையாக இருந்தது. அவனுக்கென்று அவளிடம் இருந்து ஸ்பெசல் கிரீட்டிங் கார்டுகள். வாழ்த்துக்கள். சாக்லெட்டுக்கள். எல்லாமேமூழ்காத ஷிப்பே பிரண்ட்சிப்தான் என்று பாட்டு பாடியது. அனைவரும் கண் போட்டதாலோ என்னவோ அவனுடைய நட்பு ஒருநாள் அறுந்து போனது அவனை கண்டாலே அவள் எறிந்து விழ ஆரம்பித்தாள். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. “பொம்பளைக்கே இவ்வளவு திமிர் இருக்கும்போது ஆம்பிளைக்கு திமிர் இருக்கும்என்று அவளை வேண்டுமென்றே கடுப்படித்தான்.

அவனுக்கு எங்கள் அணி முழு ஆதரவு தந்தது. “அப்பவே சொன்னோம் கேட்டியா..இந்த சுடிதார் போட்டவியிங்களை நம்பாதேன்னு..முதுகிலேயே குத்துவாள்கடா மச்சான்..” என்று ஏத்திவிடப்பட்டு அவன் எங்கள் அணியின் தலைவனாக்கப்பட்டான். பலபேருக்கு இதில் உள்ளூர சந்தோசம். அவளைப்பற்றி கோபமாக சொல்லி, சொல்லியே வெறி ஏற்றப்பட்டான்..”இனிமேல் பசங்கதாண்டா மச்சான் எனக்கு பிரண்ட்ஸ்..ஒரு பொண்ணு கூடயும் பேச மாட்டேன். அப்படி யாராவது ஒருத்தன் பேசுனாலும் அவனுக்கு ரெட்கார்டு போட்டுருவோம்..” வெறியாக பேசினான். ரெட்கார்டுக்கு பயந்தே எங்கள் அணியில் பலர் சேர்ந்தனர். பின்னே, வகுப்பறையில் மட்டும்தான் கேர்ஸ். ஆனால் வெளியில் பசங்ககூடதானே சுற்ற வேண்டும். இந்த நிர்ப்பந்தத்தாலேயே பலபேர் அணியில் சேர்க்கப்பட்டனர். பெண்கள் மேல் வெறுப்பு என்ற உணர்வு அனைவருக்குள்ளும் திணிக்கப்பட்டதால் வகுப்பறையே இரு தீவுகளாய் ஆனது

பெண்கள், பெண்களோடும், ஆண்கள் ஆண்களோடு மட்டும்தான் நட்பு வைத்தனர்..பேசிக் கொண்டனர். இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிப்போய் கல்லூரி இறுதி நாள் வந்தது. அப்பவும் இருபுறமும் இருமாப்பாகவே திரிந்தனர். ஆட்டோகிராப் கூட வாங்காத அளவிற்கு வெறுப்பு. எல்லாம் அன்று ஒரு நாளைக்குத்தான். கல்லூரி வாழ்க்கை முடிந்து போனது.. கல்லுரிக்கு செல்லாத அடுத்த நாள் ஏதோ அடுப்பில் நிற்பது போல் இருந்தது. என்னதான் பெண்கள் பிடிக்கவில்லை என்று நினைத்தாலும் அவர்கள் அந்த இடத்தில் இருந்தாலே தென்றல் இருந்தது. சண்டையோடு பார்க்கும் அந்த ஓரக்கண் பார்வை கூட சுகமாக இருந்தது,. ஆனால் இன்றோ ஏதோ பாலைவனத்தில் இருப்பது போல் இருந்தது. சண்டை போடுவதற்கு கூட பெண்கள் இல்லை. ஆற்றாமையுடன் நண்பன் ஆனந்த் வீட்டிற்கு சென்றேன்.

நண்பன் அவனுடைய அறையில் அடங்கிக் கிடந்தான் என்று சொல்லுவதை விட புழுங்கி கிடந்தான் என்றே சொல்ல வேண்டும். என்னைப் பார்த்ததுமே அப்படியே கலங்கி விட்டான். கண்கள் முழுவது தண்ணீர்..

ராசா..தப்பு பண்ணிட்டமோ..அவளுக கூட சண்டை போட்டிருக்க கூடாதுடா..”

ஏண்டா..”

இல்லைடா..என்ன இருந்தாலும் அவளுக நம்ம கிளாஸ் பொண்ணுங்க தானே..நாம கொஞ்சம் விட்டு கொடுத்திருக்கலாமோ..”

ம்ம்..”

ஒரு மாதிரி இருக்குடா..ஏதோ பாலைவனத்தில் இருக்குற மாதிரி..காலேஜ் லைப்பை வேஸ்ட் பண்ணிட்டோம்டா..”

சரி விடுடா..”

ஏண்டா..ராசா..திரும்பவும் காலேஸ் போயிருவோமாடா..பர்ஸ்ட் இயர் திரும்பவும் படிப்போமாடா..”

விடை தெரிந்து கொண்டே கேட்டான். வாழ்க்கையில் கொடுமையான நாள் எது தெரியுமா..கல்லூரி முடிந்த அடுத்த நாள் தான். கல்லூரி வாழ்க்கையை அனுபவித்தால்தான் அதை உணர முடியும். அதுவும் நீங்கள் காதலித்து அதை சொல்லாமல் இருந்துவிட்டால்….

மச்சான்..ஆனந்து கேட்க மறந்துட்டேன்..காலேஜ்ஜூல யாரையாவது லவ் பண்ணியாடா..”

“…”

டே..வெண்ணை..அடப்பாவி..சொல்லவே இல்லை..யாருடா..”

ப்ச்..விடுடா..”

அடி வாங்குவ..சொல்லுடா..”

ம்ம்ம்தப்பா நினைக்காதடா..நம்ம பசங்ககிட்டயும் சொல்லாதடா..பிரீத்தி..அவளைதாண்டா லவ் பண்ணினேன்..”

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. “பிரண்ட்ஸ்டாஎன்று பெருமையாக சொன்னதெல்லாம் பொய்யா….”எங்களுக்குள்ள இருப்பது தூய்மையான நட்புடா..” என்று சொன்னதெல்லாம் நடிப்பா..

டே..அவ உன்னை லவ் பண்ணிளாடா..”

தெரியலைடா..”

போடாங்க..சரி..உன் லவ்வையாவது சொன்னியா..”

ராசா..என்னடா..ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுற..நம்ம அணி பத்திதான் உனக்கு தெரியுமே..அதுவுமில்லாம நான் அவகூட எப்படி சண்டை போட்டிருக்கேன்..எத்தனை தடவ கெட்ட வார்த்தையில திட்டியிருக்கேன். எந்த மூஞ்சிய வைச்சிக்கிட்டு அவகிட்ட போய்..”

இதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை.உடைந்து அழுதே போனேன். இதற்கு மேல் அவனுக்கு ஆறுதல் சொல்ல கூட என்னால் முடியவில்லை. எந்த துக்கத்திற்கும் ஆறுதல் சொல்லலாம், காதலை இழந்தால் அழுகைதான் ஆறுதல். வாய்விட்டு அழுதாலே பாதி துக்கம் போய் விடும்.

சரிடா..ஆனந்து இப்ப என்ன காலம் கெட்டுப்போச்சு..இப்பவாவது சொல்லாம்ல..”

என்னை ஏறெடுத்துப் பார்த்தவன் பக்கத்தில் உள்ள அலமாரியைத் திறந்து அந்த இன்விடேசனை எடுத்துக் கொடுத்தான்..

பிரீத்தி வெட்ஸ் வெங்கட்..”

அதற்கு மேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை..கிளம்பி விட்டேன். இது நடந்து பல வருடங்கள் ஓடி, நண்பனை எப்பவாவது சந்திப்பேன். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் கேட்டால்ப்ச்..பிடிக்கலைடா…” என்பான்., காரணம் எனக்கு மட்டும்தான் தெரிந்தது. அவனால் அவளை மறக்க முடியவில்லை. இன்னும் அவன் மனதில் அவள்தான் இருந்தாள்..

போனவாரம் ஸ்பென்சர் பிளாசாவில் எதேச்சையாக பிரீத்தியை சந்தித்தேன்..பிரீத்தியா அது..என்னால் நம்பமுடியவில்லைவகுப்பறை அழகியான அவள் ஒடுங்கி போயிருந்தாள்..காலம் அவள் தலைமுடியில் இரண்டை வெள்ளையாக்கி இருந்தது..

ஹே..ராசா..எப்படி இருக்க..”

நல்லா இருக்கேன்..”

பார்த்து 10 வருசம் ஆகிடுச்சுல்ல..இப்பதான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு..”

ஆமா..மேரேஜ் லைப் எப்படி இருக்கு பிரீத்தி..”

போய்கிட்டு இருக்கு..அப்புறம் ராசா..,காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் பார்ப்பியா..”

சில நேரம்..”

யாரெல்லாம்..”

ம்ம்..விஜய்..ஷேக்..ராம்..ம்ம்,,யுவா..”

அப்புறம்..வேற யார்..”

ம்..சிவா..செந்தில்..”

ம்ம்..வேற யாரைப் பார்ப்ப..”

எனக்கு புரிந்துபோனது. அவள் எதிர்பார்க்கும் பெயர்ஆனந்த்..”

சரி ராசா..நம்ம வகுப்புல யார் யாரெல்லாம் லவ் பண்ணினாங்க..”

ஹே பிரீத்தி..என்ன கேக்குற..நம்ம கிளாஸ்ஸுல எல்லாம் எலியும் பூனையுமில்லாம இருந்தோம்..அப்புறம் எங்கிட்டு லவ்வு எல்லாம்..”

ஹா..ஆமா..அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருதுல்ல..எவ்வளவு சின்னப்புள்ளத்தனமா இருந்துருக்கோமில்ல..”

ஆமா..இப்ப நினைச்சா..ஏண்டா அப்படி இருந்தோமின்னு தோணுது. ஒரு பேக்வேர்ட் பட்டன் இருக்குமா..திரும்பவும் கல்லுரி வாழ்க்கை வாழ்ந்து அதெயெல்லாம் சரி செய்துவிடுவோம்..”

விழுந்து விழுந்து சிரித்தாள்..எனக்கு எங்கிருந்துதான் வேகம் வந்தது என்று தெரியவில்லை..அதைக் கேட்டே விட்டேன்..

ஹே..பிரீத்தி..நீ யாரையாவது லவ் செய்தியா..”

அவளிடமிருந்து பதிலே காணவில்லை. சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு சொன்னாள்..

ஆமாம்..ஆனா அவன் கிட்ட சொல்லலை..”

ஹே..யாரது..”

ஆனந்த்…..

6 comments:

லெமூரியன்... said...

இது உண்மையா நடந்ததா ராசா??????

sweet said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

sarakku theendhu pocha?
meelpadhivaa pottu thalreenga!

டக்கால்டி said...

இது உண்மையா நடந்ததா ராசா??????

அரபுத்தமிழன் said...

கடந்த வாரம் மிக மிக வேகமாகக் கடந்த மாதிரி இருக்கே. ராஜ நட்சத்திரமல்லவா. :))
Thanks Rasa

Anonymous said...

மீள் பதிவு? இது தான் நான் உங்கள் ப்ளாக்-ல் படித்த முதல் பதிவு!

-
வெங்கடேஷ்

Post a Comment