Friday 23 March, 2012

தயவுசெய்து இந்த படத்தைப் பாக்காதீங்க


தக்காளி..எல்லாரும் படத்தைப் பார்த்துட்டு நிம்மதியா தூங்குவாய்ங்க..இல்லாட்டி, பப்ஸ், பாப்கார்ன்னு சாப்பிட்டுக்கிட்டு இருப்பாய்ங்க..எவனாவது ஒருத்தன், உடனே லேப்டாப்பை தூக்கி, “தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்கதீங்கன்னு ஒரு பதிவு போடுவானாயா..போடுறான்யா இந்த அவிய்ங்க ராசா..ஏன்னா..இந்தப் படத்தைப் பார்த்துட்டு தூக்கம் வரமாட்டீங்குதுயா..ஒரு திரில்லர் படத்தை எப்படி முடிப்பாய்ங்க..”அண்ணே..இன்னார்தான் கொலை செய்யப்பட்டார்..இன்னார்தான் கொலை செஞ்சாய்ங்க…” அப்படின்னு..ஆனா, இந்தப் படத்தை முடிக்கிறாய்ங்க பாருங்க..அதனால்தான் சொல்லுறேன்..தயவுசெய்து இந்தப் படத்தை பார்த்துறாதீங்கப்பு

எல்லாம் இந்தக்கிழவன்மோர்கன் ப்ரீமேன்அப்படிங்குறவருக்குத்தேன். என்னதான் சாம் ஆண்டர்சன் படத்தை பத்து தடவை பார்த்தாலும், ஆங்கில படத்துல, ரெண்டு பேரு பெயரைப் பார்த்தவுடனே கண்ணை மூடிட்டு பார்க்க ஆரம்பிச்சுருவேன். ஒருத்தரு, “சாமுவேல் ஜாக்சன்”, இன்னொருத்தர் இந்தமோர்கன் ப்ரீமேன்..” ரெண்டு பேருக்கும் தாத்தா வயசுதான்..ஆனால் நடிப்பாய்ங்க பாருங்கதக்காளி, இவிங்க தான்யாஉலகநாயகன்”. இதுதாம்லே நடிப்பு..



சரி..படத்துக்கு வருவோம். அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர்ஹென்றிஒரு திருவிழாவுக்கு வரும்போது, தன் நண்பன் போலீஸ்காரர்விக்டர்இடம் இருந்து போன் வருகிறது..”நேத்து ஜாக்கிங்க் போற வழியிலே, ஒரு சின்னப் பொண்ணு செத்து கிடந்ததுன்னு சொன்னியே, அதப் பத்தி விவரம் கேக்கணும். பத்து நிமிஷம் தான்..தயவு செஞ்சு ஆபிசுக்கு வர்றியா..” ன்னு கூப்பிடுறாருண்ணே..பணக்காரருக்கோ 60 வயது இருக்கும். 27 வயது பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ஊரில் பெரிய புள்ளி..நிறைய டிரஸ்டுக்கு டொனேஷன் கொடுத்திருக்கிறார்..நண்பன் கேட்டுகொண்டதற்காக போலீஸ் ஸ்டேஷனக்கு போயிட்டுடே விக்டர்..திருவிழாவுக்கு நேரம் ஆயிடுச்சுடாசீக்கிரம் விடுடா..” அப்படின்னு செல்லமா கோபிக்க, “ஒரு 10 நிமிடம் தான் உக்காருன்னு விவரம் கேக்க ஆரம்பிக்கிறாரு.. கூட ஒரு இளம்வயது, போலீஸ்காரரும் சேர்ந்து கொள்ள, அந்த இளம் வயது போலீஸ்காரர், ஹென்றியிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்ள, ஹென்றிக்கு கடுப்பாகிறது..”யோவ் விக்டரு..ஊரு பெரிய மனுசங்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு இந்தப் பொடிப்பயலுக்கு சொல்லிக்கொடுஎன்று  கடிந்து கொள்கிறார்..விசாரணை ஆரம்பமாகிறது..

நேத்து எங்க அந்தப் பொண்ணு செத்து கிடந்தத பார்த்த..”

வாக்கிங்க் வர்றப்ப..”

தனியா வந்தயா..”

இல்ல நான் வளர்க்குற நாயோட..”

நாய் பேரு..”

டாங்கோ..”

விக்டர், ஒரு பைலை புரட்டுகிறார்..புரட்டிவிட்டு மெதுவாக சொல்கிறார்..

நேத்து வாக்கிங்க் போறவியிங்கட்டல்லாம் விசாரிச்சோம்..உன்னை யாரும் நாய்கூட பார்த்த மாதிரி சொல்லலியே..”

ஒருநிமிசம் திகைப்படகிறார் ஹென்றி..
அது..அது வந்து..ஆங்க்..மறந்துட்டேன்..அப்ப நாய் கூட இல்லை..”

தக்காளி, இங்க இருந்து ஆரம்பிக்குது படம்.



இதே போல, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் கொல்லப்படிருக்கா..அவளும் சின்ன வயசுதான்..விசாரிச்சதுல உன்னை அந்த ஏரியாவுல பார்த்ததா சொல்லுறாய்ங்களா..நீ எங்க என்ன பண்ணின

நம்ம ஆளு, “விக்டர்ஹென்றி பத்திய இன்வெஸ்டிகேசனைப் புட்டு புட்டு வைக்கிறார். ஹென்றியின் இளவயது மனைவியுடன் தாம்பத்ய வாழ்க்கை திருப்தியாக இல்லை. அதுவுமில்லாம ஹென்றிக்கு சின்னவயது பெண்கள் மேல் ஒரு கண்ணு., என்று சொல்ல, ஹென்றியோவ் என்ன விளையாடுறீங்களா..10 நிமிசம்னு கூட்டிட்டு வந்துட்டு இப்ப என்ன இப்படி ட்ரீட் பண்ணறீங்க..” அப்படின்னு டென்சனாக, விகடர் கூலாக

உக்காரு வாத்தியாரே..கொலைய செஞ்சுப்புட்டு சவுண்டு வேற விடுறியா..உன்னை வரச்சொன்னதே, அரஸ்ட் பண்றதுக்குத்தாண்டி..”

அப்படின்னு சொல்ல, காட்சிகள் விறு,விறு. கூட இருக்கும், இளவயது போலீசுக்கு ஏற்கனவே, ஹென்றி மேல் காண்டு..போதாக்குறைக்கு பட்சி தானா வந்து சிக்கிச்சு..சொலலவா வேணும்..கேள்வி மேல் கேள்வியா கேட்குறாய்ங்க..

2 மணிநேரம் முழுக்க இன்வெஸ்டிகேசன்தாண்ணே..ஏன்னே..இப்படி ஒரு படம் எடுக்கமுடியுமா..அதுவும் இரண்டரை மணிநேரம் விறுவிறுப்பா..

“ஹென்றி தான் கொலை பண்ணிருப்பானோ..”

“இல்லாட்டி..ஹென்றி மனைவிதான், வேற யாரை வைச்சு கொலைய பண்ணிருப்பாளோ..”

“ஒருவேளை இந்த இளவயசு போலீசுக்காரனுக்கும், அந்தப் பொண்ணுக்கும் ஏதாவது…இந்த இளவயசு போலீசு பார்வையே சரி இல்லையே”

“சொல்லமுடியாது..இந்த விக்டர் கூட, ஏற்கனவே 2 தடவை டைவர்ஸ் ஆனவருதான்..ஏன் இவர்கூட கொலை பண்னியிருக்ககூடாது…”

தக்காளி, நான் 12 ம் வகுப்பு பரிட்சை எழுதுனப்ப கூட இப்படி யோசிச்சது இல்லேண்ணே…கடைசியில யார் கொலை பண்ணுனதுன்னு சொல்லுறாய்ங்க பாருங்க…

அதுக்குத்தாண்ணே..சொல்லுறேன்..தயவுசெஞ்சு, இந்தப்படத்தைப் பார்த்துறாதீங்க..பார்த்துட்டீங்கன்னா, கிளைமாக்சை பார்த்துட்டு மண்டை குழம்பி, நீங்களும் இந்த மாதிரி பதிவு போட ஆரம்பிச்சிருவீங்க..நாடு தாங்காது..சொல்லிப்புட்டேன்..

(பின் குறிப்பு..இந்தப் படம் பார்த்தவர்கள், தயவுசெய்து கிளைமாக்சைப் பற்றி எனக்கு மெயில் பண்ணுறீங்களா..தக்காளி, தலையே வெடிச்சுடும் போல இருக்கு…)

5 comments:

ஆர்வா said...

ஆஹா.. பார்க்காதீங்க சொல்லி... இப்படி படத்தை தேட வெச்சிட்டீங்களே.. பார்த்துடணுமே


நட்புடன்
கவிதை காதலன்

Unknown said...

hey nice man....

UNMAIKAL said...

இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவலிங்கத்தையா? என்று அறியாமையினாலோ, விஷமத்தனமாகவோ, காழ்புணர்வாகவோ பதிவுகளை காணுகிறோம்.

இஸ்லாத்தின் மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குகின்றனர் என இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர்.

இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல!

சொடுக்கி >>>>>>
முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?
<<<< படிக்கவும்.
.
.

யவனொ ஒருவன் said...

Barathiraja's Bommalattam copied from this movie only.

Anonymous said...

*****UNMAIKAL***** - Why this dog post his religious thoughts here. I don't know whats wrong with these Muslim people all over the world they are fighting for nothing Useless morons

Post a Comment