Sunday 8 May, 2011

அன்னையர்தினம் – ஏண்ணே கோவாலை அங்கிட்டு பார்த்தீங்க???

இந்த பயபுள்ள கோவாலு இருக்கானே. ஒருநாளைக்கு, ஒருவாட்டியாவது நம்ம கண்ணுல பட்டுருவான். இன்னைக்கு பயலை தேடிப்பார்க்குறேன்..கண்ணுல மாட்டமாட்டுங்குறான்.. கோவாலு பச்சமண்ணு ஆச்சே..எதுவும் முட்டாயை கொடுத்து யாரும் கடத்தி, கிடத்தி கொண்டு போயிட்டாயிங்களான்னு பயம் வேற..எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்து அசந்து போயிட்டேண்ணே..

டயர்டாகி, சரி பயபுள்ள பூங்கா பக்கம் தேடி பார்ப்போமுன்னு போனா, ஒரு மரத்து பின்னாடி ஒளிஞ்சு கிடக்காண்ணே..என்னை பார்த்தவுடனே, எடுத்தாம் பாருங்க ஓட்டம்..அப்படி ஒரு ஓட்டம். பயபுள்ளயை கஷ்டப்பட்டு விரட்டு புடிச்சேன்..

“கோவாலு..நானும், நீயும் அப்படியாடா பழகியிருக்கோம்..என்னை பார்த்து ஏண்டா தலைதெறிக்க ஓடுற..அப்படி என்னதாண்டா நான் பண்ணுவேன்..”

“ராசா..இன்னைக்கு ஒருநாளு மட்டும் விட்டுறா..நாளையிலிருந்து நான் எங்கிட்டும் போகமாட்டேன்..”

“ஏண்டா..இன்னைக்கு என்னடா வந்துச்சு..”

“இன்னைக்கு என்ன நாளு..”

“ம்ம்..ஞாயித்துக்கிழமை..ஏன்..”

“ராசா..இன்னைக்கு அன்னையர்தினம்டா..நீ ஏற்கனவே செண்டிமெண்டு திலகம்..அம்மா செண்டிமெண்டு எழுதியே மரண மொக்கை போட்டுருக்க..இன்னைக்கு அன்னையர்தினம் வேற..தாங்கமுடியாதுடா..”அம்மான்னா யாரு தெரியுமா..” ன்னு போடுவியே மரண மொக்கை..என்னால தற்கொலையும் பண்ணிக்க முடியல..அதுதான் உசிர காப்பாத்திக்க இப்படி தலைமறைவா சுத்திக்கிட்டு இருக்கேன்..என்னை விட்டுருடா..”

“அட கோவாலு..இன்னைக்கு அன்னையர்தினமா..சே..தெரிஞ்சிருந்தா, இன்னைக்கே காலையிலேயே ஒரு செண்டிமெண்டு பதிவு போட்டுருப்பேனே..மிஸ் ஆயிடுச்சே..”

“ராசா..இப்ப தெரியுதா..நான் எதுக்கு தலைமறைவு வாழ்க்கை நடத்துறேன்னு..”

“ஏண்டா, அன்னையர்தினத்திற்கு ஒரு செண்டிமெண்டு பதிவு எழுதக்கூடாது..தப்பாடா..”

“ராசா..எங்க பார்த்தாலும் செண்டிமெண்டு..பக்கத்து வீட்டு பப்பி நாய் குட்டி போட்டா, அம்மான்னு செண்டிமெண்டு பதிவு போடுற..எதிர்த்த வீட்டு குழந்தை “வீல்” ன்னு கத்தினா, “ஏ..குழந்தையே” ஒரு மொக்கை கவிதை எழுதுற..ரோட்டுல போற எவனாவது “அண்ணே” ன்னு கூப்பிட்டா போதும் “ஒரு தங்கை” ன்னு செண்டிமெண்டு பதிவு..தாங்கலைடா ராசா..போதும்டா செண்டிமெண்டு..நீ எழுதுற பதிவை படிச்சுட்டு, அவனவன் வீட்டுக்குள்ள குமுறி, குமுறி அழுது தீர்த்துக்கிட்டு இருக்காய்ங்கடா..ஆ..ஊண்ண..ஒரு மொக்கை செண்டிமெண்டு பதிவு போடுறத நிறுத்துடா..பதிவுலகம் உன்னை கையெடுத்து கும்பிடும்..”

“போடா வெண்ணை..அன்னையர் தினத்துக்கு பதிவு போடாம எப்படிடா..”

“ராசா..அம்மா மேல நீ நிறைய பாசம் வைச்சிருக்க தெரியுது..அப்படிதான் எல்லாரும் அம்மா மேல பாசம் வைச்சிருக்காயிங்க..ஆனா, அதுக்காக, “அம்மா என்பவள்” ன்னு ஆரம்பிச்சு போடுறேயேடா, ஒரு மரண மொக்கை..உங்க அம்மா கூட அந்தபதிவை படிச்சாங்கன்னா..”ஓ மை சன்..தி இஸ் டூ மச்” சுன்னு சொல்லி உன்னை கோபிப்பாங்கடா..இப்படி, அன்னையர் தினத்துக்கு ஒரு செண்டிமெண்டு பதிவு, தந்தையர் தினத்துக்கு ஒரு செண்டிமெண்டு பதிவு..காதலர் தினத்துக்கு, “நீ ஒன்னாப்பு படிக்கிறப்ப லவ் பண்ணுனது” ன்னு எழுதுற அராஜக மொக்கையெல்லாம் போதும்டா..ஏற்கனவே ஊருக்குள்ள இருக்குற செண்டிமெண்டு போதும்டா..தயவுசெய்து, இந்த உலகத்தை காப்பாத்துடா..”

“டே..கோவாலு..நீ என்னதான் சொன்னாலும் நான் செண்டிமெண்டு பதிவு போடுறத உன்னால நிறுத்த முடியாதுடா..இப்ப கேட்டுக்க..

“அம்மா..நான் நாலாப்பு படிக்கிறப்ப…”

திரும்பி பார்க்குறேன்..பயபுள்ள தலைதெறிக்க ஓடிக்கிட்டு இருக்கான்..ஏண்ணே..அங்கிட்டு பார்த்தீங்க..

சரி..அவனை விடுங்க..”இப்படித்தான் நான் நாலாப்பு படிக்கிறப்ப எங்கம்மா..”

ஹல்லோ..நீங்க எங்க ஓடுறீங்க..ஹல்லோ..ஹல்லோ..ஓடாதீங்க..

5 comments:

balaji said...

சிரித்தேன். நல்ல பதிவு. நன்றி

Anonymous said...

jackie-kku appaa? avvvvvvvvvv..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
balaji said...
சிரித்தேன். நல்ல பதிவு. நன்றி
9 May 2011 2:09 PM
////////////////////////////
நன்றி பாலாஜி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Anonymous said...
jackie-kku appaa? avvvvvvvvvv..
9 May 2011 3:24 PM
///////////////////////////
ஆஹா..இது என்னையப்பத்தி நானே எழுதுக்கிட்ட பதிவுண்ணே...

Anonymous said...

பக்கத்து வீட்டு பப்பி நாய் குட்டி போட்டா, அம்மான்னு செண்டிமெண்டு பதிவு போடுற..
ஆனா, அதுக்காக, “அம்மா என்பவள்” ன்னு ஆரம்பிச்சு போடுறேயேடா, ஒரு மரண மொக்கை..உங்க அம்மா கூட அந்தபதிவை படிச்சாங்கன்னா..”ஓ மை சன்..தி இஸ் டூ மச்” சுன்னு சொல்லி உன்னை கோபிப்பாங்கடா.. he he he he...
yenya unnala chummave iruka mudiyadha... edhuku andha aala pudichi vambu iluthukite irukra... :) :)... andha aalu-nu jackie-ya than ya solren..

Post a Comment