Thursday 19 May, 2011

தமிழ் திரையுலகம் மொத்தமாக அள்ளிய தேசிய விருதுகள்

முதல்லயே சொல்லிடுறேன்..ஆஹா, அம்மா ஆட்சிக்கு வந்தவுடனேயே பாரு யோகத்தை..மொத்தமாக அள்ளிட்டோம்னு சொல்றவியிங்க, இப்பயே எஸ்கேப் ஆகிடுங்க..ஆஹா..அய்யா, ஆட்சியில இருந்தா, இன்னும் அள்ளியிருப்பாயிங்கன்னு சொல்லுறங்களும், இப்பவே எஸ்கேப் ஆயிருங்க. ஏன்னா, பாழாப்போன அரசியல கலக்காம, திறமையினால் மட்டுமே வாங்கிய தேசியவிருதுகள் இவை.

தொடர்ச்சியான துன்பத்திற்கு அடுத்து, தமிழ்திரையுலகிற்கு கிடைத்த இனிய அதிர்ச்சி இது. இந்திய திரையுலகம் என்பது, இந்தி படங்கள் மட்டுமே என்ற பொய்த்தோற்றத்தை, இது மொத்தமாக துடைத்துப்போட்டிருக்கிறது. திறமையான நடிகர்கள், டெக்னீசியர் எனும்போது, தழிழ்திரையுலகத்தை புறக்கணிக்க முடியாது என்பதையும் இது நிரூபித்திருக்கிறது.

துள்ளுவதோ இளமையில், ஒடிசலான தேகத்தோடு அறிமுகமானபோது, “இவனெல்லாம் ஹீரோவா..கொடுமையா” என்று நினைத்தவர்கள் எல்லாம், இப்போது வாயடைத்துப்போயிருப்பர். “காதல் கொண்டேன்” படம்தான், இந்த ஒடிசலான உருவத்திலும் இவ்வளவு திறமை உண்டு என்று நிரூபித்தது. ஆனால், நான் முழுவதுமாக வியந்தது “புதுப்பேட்டை” படத்தில்தான். தாதா போன்ற உருவம் இல்லாமல் இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் முடிந்தவரை சிறப்பாகவே செய்திருப்பார். மாப்பிள்ளை, படிக்காதவன், சுள்ளான் போன்ற சொத்தை படங்களில் நடித்தாலும், ஆடுகளத்தில் சிறப்பாக நடித்து, தேசியவிருது வாங்கியிருக்கிறார்..வாழ்த்துக்கள். கொடுமை என்னவென்றால், அவரால் இந்த சந்தோசத்தை கொண்டாடமுடியாத சூழ்நிலைதான்.

சரண்யா..தமிழ்படங்களில், அம்மாவை எவ்வளவு கொடுமைபடுத்தமுடியுமோ, அவ்வளவு கொடுமைப்படுத்துவார்கள். அந்த கொடுமைகளில் எல்லாம் தப்பித்து ஒருவர் தேசிய விருது வாங்கியிருப்பது சாதாரண விஷயம் இல்லை. நடிக்கும் எல்லா படங்களிலும், இயல்பான நடிப்பை வழங்கியிருப்பதாலே, இந்த விருதுக்கு முழு தகுதிஉடையவராகிறார். வாழ்த்துக்கள்..

அடுத்து, ஆடுகளம் படத்திற்கு கிடைத்த விருதுகள். மூன்று கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தை, இவ்வளவு அழகாக யார் சொல்லமுடியும், அதுவும், தமிழ்சினிமா, இதுவரை கண்டிராத சேவல் சண்டை களத்துடன். சும்மாவா, பாலுமகேந்திரா சிஷ்யர் அல்லவா..அது என்னவோ தெரியவில்லை..பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வருபவர்கள் விருதுகளை வாங்கி குவிக்கும் மாயம்.

சிறந்த நடன இயக்குநர் தினேஷ்.. நளினமான நடன அமைப்பிற்கு சொந்தக்காரர். திறமையுள்ளவர் எவ்வளவு நாளானாலும் கண்டிப்பாக அங்கிகரிக்கப்படுவர் என்பதற்கு இவர் உதாராணம். ராம் படத்தில் வரும் “பூம், பூம்” பாடலும், ஈசன் படத்தில் வரும் அந்த துள்ளலிசை பாடலும், இவருடைய திறமைக்கு சான்றுகள். வாழ்த்துக்கள்..

சிறந்த ஸ்பெஷல் எபக்டு, கலை-தயாரிப்பு விருதுகள் எந்திரனுக்கு. இந்த விருதுகள், இப்படத்திற்கு கிடைக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ஒவ்வொரு நிமிடமும் கொட்டி உழைத்த உழைப்பு, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்ததே.

ஆடுகளத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஈழ்க்கவிஞர் ஜெயபாலனுக்கு கிடைத்த விருது, அவருக்கு கிடைத்த சிவப்பு கம்பளம். இந்த மனிதர் மேலும் விருதுகள் வாங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது

மொத்தத்தில், தமிழ்திரையுலகத்திற்கு இது சிறப்பான வருடம்.. திரும்பவும் “தங்கதாரகையே” , “பாசத்தலைவனே” என்று ஆரம்பிக்காமல், அந்த நேரத்தை, இதுபோன்ற நல்ல படைப்புகளுக்கு செலவிட்டால், தேசியவிருது என்ன. ஆஸ்கார் விருதுகள் வந்து வாசற்கதவை தட்டும்.

4 comments:

rajamelaiyur said...

Congratulation to who got a awards . . .

தமிழ்வாசி பிரகாஷ் said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



எனது வலைப்பூவில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு!

Pasumaiveli said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழன் said...

I would have prefered awards for Angadi theru! But I am happy that tamil films got many awards this year!

Post a Comment