Thursday 12 May, 2011

நட்பின் வலி

“நீ தாண்டா எல்லாத்துக்கும் காரணம்…”

புதிது புதிதாய் காரணம் தேடினார்கள்

“நீ ரொம்ப ஒழுங்கோ..”

ஒழுங்குக்கு புதிய விளக்கம் தந்தார்கள்.

“நீ அப்ப இருந்தே இப்படித்தானாமே..கேள்விப்பட்டேன்..”

மறந்து இருந்த பழைய நினைவுகள் தவறாக்கப்பட்டன..”

“உன்னை பிரண்டுன்னு சொல்லுறதுக்கே கேவலமா இருக்கு..”

தோளில் கைபோட்ட கைகள், அடிக்க வந்தன..

“நீ அன்னைக்கு எப்படி இருந்தேன்னு பார்த்தோமே..”

நம்பிக்கைகள் சுலபத்தில் தகர்க்கப்பட்டன..

“எல்லாரும் உன்னை கேவலமா பார்க்குறாயிங்க..”

யாரென்றே தெரியாத எல்லோரும் முக்கியமாக்கப்பட்டனர்.

“என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு..”

மூன்று விரல்கள் தன்னை நோக்கி காட்டுவதை மறந்தார்கள்.

“என் முகத்துல இனிமேல் முழிக்காதேடா”

அடிக்கடி வீட்டுக்கு வாடா என்ற வாய்கள் பழிப்பு பேசின.

“நண்பா” என்று சொன்னவர்கள் “துரோகி” என்றார்கள்..

நொந்து போய் வீடு வந்தேன்

“என்னங்க எதுவும் உடம்பு வலியா” கவலையுடன் மனைவி

“இல்லை..மனசு வலிக்குது”..

“நம்ம குழந்தையைப் பாருங்க..சரியாயிரும்”.

மெல்லச் சென்று குழந்தையைத் தூக்கினேன்..

கள்ளம் கபடமில்லாமல் சிரித்தான்..

அந்த சிரிப்பில் பொறாமை இல்லை..

அந்த சிரிப்பில் குற்றச்சாட்டு இல்லை..

அந்த சிரிப்பில் துரோகம் இல்லை..

அந்த சிரிப்பில் பழிப்பு இல்லை..

அந்த சிரிப்பில் வன்மம் இல்லை..

கைகளை நீட்டி விளையாட அழைத்தான்..

களிப்பு தீர விளையாடினேன்..

என்னையே இரண்டு மணிநேரம் மறந்தேன்..

நானும் குழந்தையானேன்..

மெதுவாக அவன் தலையைக் கோதினேன்..

அப்படியே தூங்கிப்போனான்..

சிறுமுத்தம் கொடுத்து காதருகில் சென்று கேட்டேன்..

“நீயும் என்னை “துரோகி” என்பாயா,,”

தூக்கத்திலும் சிரித்தான்..

“போடா பைத்தியக்காரா”

வீட்டுக்குள்ளேயே இருந்த நட்பை விட்டுவிட்டு

வெளியே எதைத் தேடினாய்..

அந்த சிரிப்பு பல அர்த்தங்கள் சொன்னது..

சுவற்றில் தொங்கிய வாசகம் காற்றில் ஆடியது

“நான் உன்னை விட்டு விலகுவதில்லை”

“நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை..”

கடவுளிடம் வேண்டிகொண்டேன்

“அடுத்த பிறவியிலாவது நண்பர்களைக் கொடு..”

4 comments:

balaji said...

எனக்கு எண்ணமோ இது உங்கள் சொந்த அனுபவம்னு தோனுது.

Anonymous said...

rasa anna neenga christian-a???

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
balaji said...
எனக்கு எண்ணமோ இது உங்கள் சொந்த அனுபவம்னு தோனுது.
14 May 2011 1:21 AM
/////////////////////////
இருக்கலாம் பாலாஜி..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Anonymous said...
rasa anna neenga christian-a???
////////////////////////
வருகைக்கு நன்றி..))

Post a Comment