Wednesday 4 May, 2011

ஒசாமா – ஒரு அமெரிக்கனின் மனநிலை..

ஒசாமா..இந்த பெயரை ஒரு அமெரிக்க ராணுவ வீரனிடம் சொல்லிப் பாருங்கள். எந்த சூழ்நிலையில் அவன் இருந்தாலும், முகம் மாறிவிடும், அமெரிக்கர்களுக்கு பிடிக்காத செப்டம்பர் 11 நினைவுக்கு வருவதை எந்த அமெரிக்கரானாலும் தவிர்க்கமுடியாது. ஆனால் அதெல்லாம், கடந்த மே 2 ந்தேதி வரைதான்.

ஒசாமாவை கொல்ல ஏறத்தாழ பத்து வருடங்கள் ஒரு வல்லரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது என்ற உண்மையை ஒருநிமிடம் மறந்து, கொண்டாட்டத்தில் ஈடுபடமுடிகிறது என்றால், ஒசாமா என்ற அந்த மனிதன் மீது எவ்வளவு கோபம் இருந்திருக்க வேண்டும்.

ஒரு மனிதன் இறப்பில் அப்படி என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது என்று கேட்க நமக்கு தகுதியில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது, வருடா, வருடம் நாம் தீபாவளி கொண்டாடும் வரை..

எல்லா நாளும் போலத்தான் அந்தநாளும் விடிந்தது. செப்டம்பர் 11. அதுவும் நியூயார்க்..சொல்லவா வேண்டும். உலக வர்த்தகத்தையே ஆட்டிப்படைக்கும் நகரமல்லவா..அதற்குள்ளே விரலை விட்டு ஆட்டியவன்(ர்) ஒசாமா..இதுவரை பெருமிதமாக பார்த்த, தங்கள் நாட்டு, இரட்டைக் கோபுரங்கள், மண்ணோடு மண்ணாக , ஒரு நிமிடத்தில் சீட்டுக்கட்டு போல உதிர்ந்ததை, அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தப்பிக்க முடியாமல், மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கும் காட்சியைப் பார்த்து ஆடிப்போய்விட்டான். நடந்தது அமெரிக்காவிலா..நம் நாட்டிலா..உலகிலேயே நாம்தான் பாதுகாப்பான நாடு என்று நினைத்தோமே..என்ற நினைப்பில், இரட்டைக் கோபுரத்தின் மண் வந்து விழுந்தது. பதறிப் போய்விட்டான். தங்களையே ஒருவன் அடிப்பதற்கு இருக்கிறான் என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் “ச்சே..நாம் என்ன பாவம் செய்தோம்., காலையில் அலுவலத்திற்கு போவதைத் தவிர..” என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது..

அப்போது எழுந்த கோபம், ஒசாமா என்ற மனிதன் மேல். 10 வருடம் கழித்து அவனை சுட்டபோதுதான் தணிந்திருக்கிறது. அவ்வளவுதான், தீவிரவாதம் ஒழிந்துவிட்டது என்று சமாதானமும் அடையமுடியாது. ஏனெனில் தீவிரவாதம் என்பது, முளையிலே கிள்ளி எறிய, ரோஜாச் செடி அல்ல, வெட்ட வெட்ட முளைக்கும் ஆலமரம். இந்நேரம் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் எடுக்கப்பட்டுள்ள புதிய சபதங்கள், எந்நேரமும் விழிப்பாக இருக்கவேண்டும் என்ற செய்தியை கூறுகின்றன. அதை ஒவ்வொரு அமெரிக்கனும் உணர்ந்துதான் இருக்கிறான், நாளைய பொழுது எப்போதும் விடிவது போல்…

ஆனால், இப்போது ஒவ்வொரு அமெரிக்கனின் பயமும் தீவிரவாதம் அல்ல. அதைவிட ஆளை, மெல்ல, மெல்ல கொல்லும் , “நாளைக்கு வேலை தேடவேண்டுமே” என்ற நினைப்பே..

3 comments:

balaji said...

Hi Raja,
I am a regular reader of this blog and fan of ur writing too. I am also from Madurai [native is kuruvithurai].
This post is not up to the mark when compared to ur previous posts and now a days number of posts also getting reduced.
Please be watchful and we expect ur bounce back.

Thanks

அவிய்ங்க ராசா said...

///////////////////////
balajee said...
Hi Raja,
I am a regular reader of this blog and fan of ur writing too. I am also from Madurai [native is kuruvithurai].
This post is not up to the mark when compared to ur previous posts and now a days number of posts also getting reduced.
Please be watchful and we expect ur bounce back.

Thanks
6 May 2011 2:56 PM
////////////////////////////
நன்றி பாலாஜி..கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..

Anonymous said...

//ஒரு மனிதன் இறப்பில் அப்படி என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது என்று கேட்க நமக்கு தகுதியில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது//
யாருக்கும் அருகதை கிடையாது. செப்டம்பர் 11 நியூயார்க்கில் சாதாரண மக்கள் ஆயிரகணக்காக கொல்லபட்ட போது கொண்டாடிய அரபுகளுக்கு கிடையாது.

Post a Comment