Saturday 12 May, 2012

“ஊருக்கு வர்றோம்டி…”




இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, இரவு(அல்லது அதிகாலை??) 12:30 மணி..உலகத்தில் தூக்கம் வரக்கூடாது கடவுளே, என்று வேண்டும் ஒரு மனிதனை நீங்கள் பார்த்ததுண்டா..இதோ நான்தான்ஆனால், ஒரு சின்ன திருத்தம். இன்று இரவு மட்டும். நான் காலை 3 மணிவரை முழித்திருக்க வேண்டும். ஏனென்றால், என் கனவுகளுக்கு, அந்த நேரத்தில்தான் இறக்கை முளைக்கப் போகிறது..

நகைப்பதற்கில்லை. உண்மையிலே தான். காலை 3 மணிக்கு கிளம்பினால் தான், ஊருக்கு வரும் பிளைட்டை பிடிக்க முடியும்..
என்னது, எந்த பிளைட்டா..அட..விஷயமே தெரியாதா..ஊருக்கு வர்றோமுல்ல..நாளைக்கு 7 மணிக்கு கிளம்பும் பிளைட், சில பல ஊர்களில் நின்றுவிட்டு. கடைசியாக மதுரை மண்ணை முத்தமிடும்போது, வருமே ஒரு வாசம்..அந்த வாசத்தை நுகர்வதற்கு, இன்னும் 40 மணிநேரம் காத்திருக்கவேண்டும்

ராசா..எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டியா..”
மச்சி..ஊருக்கா..”
பையனுக்கு மருந்து மாத்திரை எல்லாம் எடுத்து வைச்சியா..”
பேக்கிங்க் எல்லாம் முடிஞ்சிருச்சா..”
பர்சேசிங்க் எல்லாம் ஓவரா..”
டே..மறக்காம அந்த சாக்லேட்டை எடுத்துக்க..”
மறக்காம கால் பண்ணிருங்க..”
இதை அப்படியே எங்க வீட்டுல கொடுத்துற முடியுமா..”
அப்படியே நான் சொல்லுற சாமானெல்லாம் வாங்கியாந்துருங்க..”
லாக் எல்லாம் கரெக்டா வாங்கிருங்க…”
பிளைட் கிளம்பும்போது காது வலிக்கும்..காட்டன் எடுத்துக்குங்க..”

யப்பா..எத்தனை, எத்தனை ஆலோசனைகள்..அக்கறைகள்..இவையெல்லாம், அரை மணிக்கொருதரம் கேட்கும்போது, எனக்கு அலுக்கவில்லை. இன்னும் கேட்க வேண்டும்போல அவ்வளவு ஆர்வம். எல்லாம், என் மண்ணைப் பார்ப்பதற்கு..எவ்வளவு எண்ண ஓட்டங்கள்

அம்மா, அப்பா, இப்பதான் பையனைப் பார்க்கப்போறாங்க..எப்படி இருக்கும்..”
பையனுக்கு நம்ம ஊரு புதுசே..எப்படி இருப்பான்..”
பஸ்சுல போகணுமா..டிரெயினுல போகணுமா..”
ஏர்போட்டுக்கு எத்தனை பேரு வருவாய்ங்க..”
“அய்யய்யோ கரெண்டு ரொம்ப கட்டாகுதாமே..பேன் ஓடுமா..”
“பைக்குல போவோமா..டாக்சியா..”
“துபாயில சரவணபவன் சாப்பாடு கிடைக்குமா..”
“துபாய் சுத்திப்பார்க்கலாமா வேண்டாமா..”
“அப்பா..அம்மா..எப்படி ரியாக்ட் செய்வாங்க..அழுவாங்களா..என்னால தாங்க முடியாதே…

அத்தனையும், இன்னும் என் மனக்கண் முன்னாலே வந்து செல்லுகின்றன..எல்லாவற்றிற்கும், ஒரே காரணம்..என் மண்வாசம்..இதோ, இன்னும் 40 மணிநேரம்..வெயிலும், புழுதியும் அடித்தாலும், என் மண், என்னுடைய மண்தான்..என்னதான், பிட்சா, பர்கர் சாப்பிட்டாலும், அம்மா பிசைஞ்சு கொடுத்த, ரசம்சோறுக்கு வருமா..என்னதான், காரிலேயே, இங்கு சுத்தினாலும்,, வியர்வை வழிய டவுன் பஸ்ஸுல தொங்கிக்கொண்டு செல்லும் சுகம் கிடைக்குமா..என்னதான். டாலர் வாங்கினாலும், அம்மா சுருக்குப்பையில் இருந்து எடுத்து தந்த , அழுக்கான 5 ரூபாய்க்கு வருமா…என்னதான் சத்தம் வருமோ என்று பயந்துகொண்டு ஏ.சி தியேட்டரில் உக்கார்ந்தாலும், கீத்துக்கொட்டாயில், மண்ணைக்குவித்து, உக்கார்ந்து பார்க்கும் சுகம் வருமா.. என்னதான் புரோஷன் சப்பாத்தி சாப்பிட்டாலும், முனியாண்டி விலாஸ் கோழிக்குழம்பு வருமா…

ஆங்க்..மறந்துட்டேன்…ஊருக்குள்ள இருக்குற பெரிய, பெரிய ரவுடிகளுக்கெல்லாம் ஒன்னு சொல்லுறேன்..கேட்டுக்கங்க…

“ஊருக்கு வர்றோம்டி…”

4 comments:

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

கோவை நேரம் said...

வாங்க...வாங்க..வரவேற்கிறோம்...

Anonymous said...

Have a nice time and enjoy your stay in India - Ssss

அமுதா கிருஷ்ணா said...

WELCOME ...

Post a Comment