Monday 28 May, 2012

என் ஓட்டு இன்வெர்டருக்கே...



நண்பர் ஒருவரை நீண்டகாலம் கழித்து, நேற்று சந்தித்தேன். நிறைய பேசிவிட்டு அரசியல் பக்கம் வந்தபோது, என்னிடம் கேட்டார்.
.
"என்ன..போன தேர்தலுல, திமுகவுக்கு ஓட்டு போட்டிங்களா..அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டீங்களா.."


நான் சொன்னேன்..
"இதுவரைக்கு யாருக்கு வேணுனாலும் ஓட்டுப்போட்டேன். இனிமேல் என்னுடைய ஓட்டு இன்வெர்டருக்கே.."

ஆமாம். உண்மையாகத்தான். ஒரு பேப்பரில் "இன்வெர்ட்டர்" என்று எழுதிவைத்து, ஓட்டுச்சாவடியில் வைத்துவிட்டு வந்துவிடப்
போகிறேன். மதியான நேரத்துல வெயிலுல அலைஞ்சுட்டு, வெறுத்துப்போய், வீட்டுக்குள்ள வந்து பேன் சுவிட்சைப் போடுறப்ப,
"சாரிப்பா..கரண்டு இல்லை" அப்படின்னு யாராவது சொன்னா, ஒரு கொலைவெறி வருமே..அந்தக் கொலைவெறி உங்களுக்கு
வரவில்லையென்றால், நீங்கள் தமிழ்நாட்டில் இல்லையென்று அர்த்தம்.


ஆனால் வந்தது பாருங்கண்ணே, தெய்வம் மாதிரி, இன்வெர்ட்டர்..கை எடுத்து கும்புடணும்னே...3 மின்விசிறிய ஓட்டி,
என் நெஞ்சில வியர்வை..சாரி..இது..பாலை வார்க்குதுண்ணே..ஆனா, அதுக்கும் வைச்சாய்ங்க பாருங்க ஆப்பு...
2 மணி நேரம் கழிச்சு "பீப்..பீப்.."ன்னு ஒரு சவுண்டு..கேட்டா, ஆப் ஆக போகுதாம்..


உசிரே போச்சுண்ணே...ஆஹா..இன்னும் 2 மணிநேரம் இருக்கே(4 மணி நேரம் மதுரையில தொடர்ச்சியா கரண்டு கட்டு)
அப்புறம் நைட்டு ஒருவாட்டி, காலையில ஒருவாட்டி(மாத்திரை சாப்பிடுற பீலிங்க் வருதுல்ல). அந்த நாலு மணிநேரத்துல
2 மணி நேரம் இன்வெர்ட்டரு..அப்புறம் "பீப்..ப்ப்பீப்" ஒரு சத்தம்.. எங்கம்மா..பதறிப் போய் ஓடிவந்து


"அடே..ஒரு பேனை ஆப் பண்ணுடா" ங்கறாங்க..சரி..ஒரு பேனுதானேன்னு ஆப் பண்ணிட்டேன்...இரண்டு பேனை வைச்சிக்கிட்டு
காலை நீட்டி, விட்டத்தைப் பார்த்து தூங்குனா, என்னா சுகம்..என்னா காத்தோட்டம்..பத்து நிமிசத்துல காதுக்குள்ள திரும்பவும்
"பீப்..பீப்" ன்னு சத்தம்..திரும்பவும் அம்மா ஓடி வந்து "அடே..இன்னொரு பேனை ஆப் பண்ணுடாங்குறாங்க.."


சரி..ஒரு பேனுதான் இருக்கேன்னு அதையும் ஆப் பண்ணிட்டு, ஒரு பேனுல விட்டத்தைப் பார்த்தா, 15 நிமிசத்துல வருதுன்னே
இன்னொரு பீப்பு..ஹன்சிகா, மோட்வானி அப்பதான் என் கனவுல வந்தாய்ங்க..சரி.பயபுள்ளைக கூட ரெண்டு வார்த்தை
பேசலாம்னு நினைக்கிறப்ப, என்னா டிஸ்டர்ப்பு..


திரும்பவும் அம்மா ஓடிவர "யம்மா..இருக்குறது ஒரே பேனு..அதையும் ஆப் பண்ணுறதுக்கும், கரண்டு போறதுக்கும்,
ஒரு வித்தியாசம் இல்லைங்கம்மா..." எங்கம்மா சும்மா இருக்காம, "அப்ப, இன்வெர்ர்டர ஆப் பண்ணிடவா" ங்குறாங்க....
"யம்மா...அதுக்கு என்னைய அப்படியே கட்டிலோடு தூக்கிட்டு போய் புதைச்சிருங்கம்மா" ன்னு கதறுரேன்...


என்னா இருந்தாலும், ஒரு 3 மணிநேரத்துக்கு கண்முன்னாடி கடவுளா தெரிஞ்சாண்ணே, இந்த "இன்வெர்ர்ட்டர்"...காத்து
குடுத்த தெய்வம்ணே..மின்சார வாரியத்துக்கு என்னோட வேண்டுகோள் என்னன்னா


"அண்ணே..மக்கள் கஷ்டப்படும்ணுதானே, இந்த கரண்ட ஆப் பண்ணுறீங்க..பாருங்கண்ணே..இந்த பயபுள்ளைங்க. இன்வெர்ர்டர
வைச்சு தப்பிக்க பார்க்குறாய்ங்க....கரண்டு கட்டு ஆன 10 மணிநேரம் போக, மீதி 14 மணிநேரம் கரண்டு இருக்குறதுனால
தான, இந்த பயபுள்ளைங்க, இன்வெர்ர்ட்டரை சார்ஜ் ஏத்துறாய்ங்க..அந்த 14 மணிநேரமும் கரண்டை புடுங்கி விட்டுறுங்கண்ணே..
பயபுள்ளைங்க, புழுக்கத்துலயே சாவட்டும்..."

2 comments:

rajamelaiyur said...

உலகமகா ஆச்சர்யமாக சில நாட்களாக எங்கள் ஊரில் மின்தடை இல்லை

CS. Mohan Kumar said...

:)) Kalakkal. Laughed at many places

Post a Comment