Sunday 23 October, 2011

சோறு(கவிதை இல்ல..வயித்தெரிச்சல்)




நமக்கு ஏற்கனவே உடம்பு கொஞ்சம் உப்பலா, இருக்கும். இதுல தொப்பை வேற சேந்துட்டா சொல்லவா வேணும். கொஞ்ச நாளா, காலுல அரிப்பு வந்தாக்கூட குனிஞ்சு சொரிய முடியலண்ணே..குனிஞ்சா, நெஞ்சுக்கும், காலுக்கும் நடுவுல ஏதோ பெருசா ஒன்னு(நோ..நோ..அப்படியெல்லாம் தப்பா நினைக்ககூடாது) தடுக்குதுண்ணே..பார்த்தா, வஞ்சனையில்லாம வளர்ந்து கிடக்குது நம்ம தொப்பை. ஆஹா, இதை, இப்படியே விட்டா நம்ம செருப்பை நாமளே போடமுடியாம போயிடுமேன்னு பயம் வந்திருச்சுண்ணே..

சரி, நம்ம ஊரு பசங்க, நிறைய பேரு, வத்தலும் தொத்தலுமாத்தாண்ணே இருக்காயிங்கன்னுட்டு அவிங்ககிட்ட அட்வைஸ் கேட்டேன். அதிலிருந்து ரெண்டு விசயம் தெரிஞ்சுச்சு..

1)      ஜிம்முக்கு போயி நல்லா எக்சர்ஸைஸ் பண்ணு
2)      சோத்தை நல்லா பாத்தி கட்டி அடிக்கிறத நிப்பாட்டு..

சரி, முதல்ல ஜிம்மில இருந்து ஆரம்பிப்போம்னு, பக்கத்துல இருக்குற ஜிம்முக்கு போனேன்.. அதுவும் எப்ப, சாயங்காலம் 6 மணிக்கு. நம்மதான் காலங்காத்தால என்னைக்கு எழுந்திருச்சுக்கோம், கத்திய வைச்சு குத்தினாலும், தட்டிவிட்டுட்டு தூங்கிக்கிட்டே இருப்போமுல்ல..அதனால தான் சாயங்காலம் 6 மணிக்கு..

ஜிம்முக்கு போய் பார்த்த, மறு நிமிசமே லைட்டா கண்ணை கட்டுச்சுண்ணே..யப்பே..எம்புட்டு மிசினு,,எம்புட்டு கஷ்டம்..ஒரு மிசினு பார்த்தா, ஓடிக்கிட்டே இருக்கு..அதுல ஏறி நம்ம பசங்க, நாய் துரத்துற மாதிரி ஓடிக்கிட்டே இருக்காயிங்க..அதுக்கு பேரு “டிரெட் மில்” லாம்..நமக்கெல்லாம் ஊருபக்கத்துல இருக்க “காட்டன்” மில்லுதான் தெரியும்..சரி, நம்மளும் ஏறி ஓடி பார்ப்போமேன்னு ஏறுரேன், யாத்தே, என்னமா சுத்துது..”டே..டே..யாராவது வந்து ஆப் பண்ணுங்கடா” ன்னு சொன்னாக்கூட ஒரு பய இரக்கம் காட்டமாட்டீங்குறாய்ங்க..

அதை சமாளிச்சுட்டு வெளியே வந்தா, ஒரு இரும்பு கம்பி மேல தொங்குண்ணே..அத பிடிச்சு இழுங்குறாய்ங்க..ஏண்டா அது பாட்டுகிட்டு தொங்கிக்கிட்டுதானடா இருக்கு, அதை ஏண்டா இழுக்கணும்னு கேட்டா, அது ஒரு எக்ஸைர்சைசாம்..சரி, இழுத்துதான் தொலைவேமேன்னு இழுத்தா, பாதிதுரம்தான் வருது..அப்புறம் கஷ்டப்படு இழுத்தா, காலு, கையெல்லாம் இழுக்குது..

அப்புறம்,மாடிப்படி மாதிரி ஒன்னு வைச்சுருக்காய்ங்க..அதுல உக்கார்ந்து, உக்கார்ந்து எந்திரிக்க சொல்லுறாய்ங்க..அதை பார்த்தவுடனே நம்ம ஊரு கக்கூஸுல ஆய் போற மாதிரியே, ஞாபகம்தான் வருது..கஷ்டப்பட்டு அதையும் பண்ணுனேன்..அப்பறம் இம்மாந்தண்டி இரும்பு கம்பியை வயித்துல புடிச்சு அமுக்கிகிட்டு, பின்னாடி போகச்சொல்லுராய்ங்க..முன்னாடி போகச்சொல்லுறாய்ங்க..நமக்கு கடுப்பாய்டுச்சுண்ணே..

வீட்டுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டேன் பாருங்க..நாலு பேரு சேர்ந்து முக்குத்தெருவுல வைச்சு அடிச்சு அனுப்பினா, எப்படி தூக்கம் வரும் பாருங்க, அது மாதிரிண்ணே..எந்திருச்சு பாக்குறேன், மணி, 12:30ன்னு காட்டுது..அடக்கொடுமையே,இம்புட்டு சீக்கிரமான்னு கதவை தொறந்தா, மத்தியானம் 12:30 ண்ணே..என்ன நடந்ததுன்னு தெரியலை..காலைத் தூக்கி ஒரு எட்டு நடக்க முடியலை..யாரோ, இரும்பு கம்பியால, காலுல அடிச்ச மாதிரி, வலிண்ணே…தவழ்ந்து, தவழ்ந்துதான் போய் தண்ணியைக் குடிச்சேன்..

சரி, இனிமேலு, ஜிம்முக்கு போனா, நாளைக்கழிச்சே, நம்மளுக்கு பால் ஊத்திருவாயிங்கன்னு கன்பார்மா தெரிஞ்சதால, ரெண்டாவது வழியை தேர்ந்தெடுப்போமுன்னு நெனைச்சேன்..சோறு சாப்பிடாம, வெறும் சப்பாத்திய சாப்பிடுறது. நமக்கெல்லாம் சப்பாத்திங்குறது, மாத்திரை மாதிரிதேன்..ச்சீ..ச்சீ..இதையெல்லாம் எப்படிதான் சாப்பிடுறாயிங்களோ நெனைப்பு..ஆனா, வேற வழியில்லை பாருங்க..

நம்மெல்லாம் தண்ணிகுடிக்காம கூட இருந்திருவேன், ஆனா, மதியானம் ஆனா,இந்த சோறை சாப்பிடாம இருந்ததே இல்லைண்ணே..நல்லா, தட்டுமுழுக்க சோத்தை பாத்திமாதிரி வைச்சுக்கிட்டு நடுவுல ஒரு குழியைத் தோண்டி, சாம்பாரை ரொப்பி, அடிச்சோமுன்னா, ரெண்டுநாளைக்கு தாங்குமுல்ல..அப்புறம், ஜீரணத்துக்கு, ரசம், குளிர்ச்சிக்கு மோர், தயிரெல்லாம், சைடுலதான்..சாப்பிட்டு, முரட்டுதூக்கம் போட்டா, நயந்தாரா வந்து கூட டூயட் பாடுவாங்கல்ல..

ஆனா, கருமம், இந்த வயித்துக்கு(தொப்பைக்காக), இதையெல்லாம், அடக்கிக்கிடு, வெறும் சப்பாத்தியை மட்டும் சாப்பிட்டுட்டு , ரெண்டு நாளு இருந்துட்டேன். கொடுமை என்னன்னா, வூட்டுக்காரம்மா கடுப்பேத்துற மாதிரியே, நல்ல சோத்தை தட்டுல வைச்சிக்கிட்டு, சிக்கன் மசாலா, மீன் பொரியலுன்னு சாப்பிட்டா எப்படி இருக்குமுன்னு..ஆனாலும் நான் கலங்கலையே..வயித்துல ஈரத்துணியை கட்டிக்கிட்டு, இன்னும் ரெண்டுநாளு இருந்துட்டேன்ணே..
நேத்து, வூட்டுக்காரம்மா சும்மா இல்லாம, கமகமன்னு சாம்பார், ரசம்னு வைச்சிக்கிட்டு சாப்பிடுறத பார்க்கமுடியாம கிளம்புனா, கேக்குறா..

“ஏங்க..ஒரு வாய் சாப்பிட்டா, டயட்டு ஒன்னு கெட்டு போகாது..நெறைய சாப்பிட்டாத்தான் வெயிட்டு போடும்…”

மனசே இல்லாம, சரி, ரொம்ப கம்பெல் பண்ணுறாளென்னு, ஒரு, வாய்ண்ணே..ஒரே, ஒரு வாய்தான் வைச்சிருப்பேன்..கபாலத்துல இருந்து, உள்ளங்கால் வரைக்கும், சாம்பாரா, ஓடுது..போங்கடா நீங்களும் உங்க டயட்டும், அடிச்சேன் பாருங்க ஒரு அடி..வூட்டுக்காரம்மாவுக்கு சாப்பாடு இல்லை…

சாப்பிட்டுட்டு குற்ற உணர்ச்சில வயித்தை தொட்டு பார்க்குறேன்..வயிறெல்லாம் சோறாத்தான் இருக்கு..அப்படியே குமுறி, குமுறி அழுகை வருது..ரெண்டாவது ஆப்சன் சரிப்பட்டு வராது போல..ஏண்ணே, யாராவது துணைக்கு ஜிம்முக்கு வர்றீங்க..?????

9 comments:

Unknown said...

நல்ல காமடி சூப்பர்
ராசாண்ணே profile ல உள்ள போட்டாவில் ஒல்லியா இருக்கீங்க எப்படிண்ணே?

rajamelaiyur said...

நல்ல நகைசுவை பதிவு

rajamelaiyur said...

தீபாவளி வாழ்த்துகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

bandhu said...

ஒரு சூப்பர் டயட் சொல்லட்டுமா? பாதி அரிசி பாதி கீன்வா (ஹோல் புட்சில் கிடைக்கும்) கலந்து சமைத்தால், சாதம் மாதிரியே இருக்கும். கொஞ்சம் கம்மி கெடுதல்!

ஆனந்தி.. said...

Sema...
Sema...Sirichchu maalalai...sema sir..:-))))

அவிய்ங்க ராசா said...

நன்றி வீடு..அது, வில் ஸ்மித் பயபுள்ள...ஹி..ஹி.
நன்றி ராஜா,
நன்றி பந்து..அதையும் டிரை பண்ணுவோம்..
நன்றி ஆனந்தி..

Angel said...

அரிசி சாப்பிடலாம் ஆனா ரெட் ரைஸ் கேரளா மாட்டா அரிசி சாப்பிடுங்க .நல்லது .
சப்பாத்தி ஆட்டா கூட தினை மாவு என்பார்களே கிநோவ அது சேர்த்து சாப்பிட்டாநல்லதுங்க

Babu said...

Nalla irukku sir intha pathivu..our deepavali pathivu pls!

Post a Comment