Sunday 2 October, 2011

விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் – கடுப்பேத்துறாய்ங்க மைலார்ட்

ஏண்ணே.நாமளே, ஆபிசுல ஓயாம வேலை பார்த்துட்டு ஏதோ, கிடைச்ச நேரத்துல எண்டெர்டெயிண்மெண்டுக்காக டி.வி பார்க்குறோம். அதுலயும் தீயைப் பொருத்தி வைச்சா எப்படி இருக்கும்..சத்தியமா சொல்லுறேண்ணே..விஜய் டிவி பார்க்கணுமுன்னு எனக்கு ஆசையே இல்லை..ஆனா, எல்லாரும் நம்மளை மாதிரி இருக்கணுமில்ல..வீட்டுக்காரம்மாவுக்கு ஜோடி நம்பர் ஒன்னு பார்க்கலைன்னா, கையும் ஓட மாட்டீங்குது, காலும் ஓட மாட்டீங்குது. இட்லி சட்டில மாவை ஊத்திட்டு, தண்ணி ஊத்த மறந்துடுறா..கடைசியில இட்லிய பிஸ்கட்டு மாதிரி சாப்பிட வேண்டியிருக்கு..உலகத்துலயே இட்லி பிஸ்கட்டு சாப்பிடுற முதல் ஆளு நானாதான் இருக்கும். அந்த கருமத்துக்காகவே பார்க்க வேண்டியிருக்கு..

அப்படித்தாண்ணே, இன்னைக்கு, கொள்ளிக்கட்டைய எடுத்து நானே சொறியிற மாதிரி, வாலண்டியரா, நானே அடுப்புல போய் உக்கார்ந்தேன்..

“அடியே..இந்த ஜோடி நம்பர் ஒன்னு போடலியா..”

“ஆஹா,,மறந்துட்டேங்க…” அப்படின்னு வர்றா இட்லி மாவுக்கரண்டியோட..

“தயவுசெஞ்சு..இட்லி ஊத்திட்டு, மறக்காம தண்ணி ஊத்திட்டு வா..ஜோடி நம்பர் ஒன்னு எங்கயும் போயிறாது..”

“கண்டிப்பாங்கன்னு” சொல்லிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வந்தாண்ணே…நிகழ்ச்சி ஆரம்பிச்சாய்ங்கண்ணே…

நம்ம ஊரு, சூனியக்காரக் கிழவிக்கு பேண்டு சட்டை போட்டமாதிரி தலைமுடிய வைச்சிக்கிட்டு, ஒரு பாப்பா வந்து ஏதோ பேசுச்சுங்கண்ணே..அவுங்க தான் காம்பியராம்..அப்புறம்கேப்டன் பிரபாகரனுல இடுப்பை ஆட்டி, ஆட்டி ஒரு ஆண்ட்டி ஆடுனாய்ங்கள்னே..அவியிங்க பேரு என்ன…ஆங்க்.ரம்யா கிருஷ்ணனாம்…அந்த ஆண்ட்டியும் வந்து ஏதோ பேசுனாய்ங்க

அப்புறம் வந்து ஒரு பயபுள்ள ஜோடி பரவாயில்லாம ஆடுச்சுங்கண்ணே…பேரு ரஹ்மான் பிரதர்சாம்…பயபுள்ளைங்க ஏதோ செண்டிமெண்டா இருக்கட்டுமுன்னுட்டு, அம்மா செண்டிமெண்டு பாட்டை எடுத்து ஏதோ பரவாயில்லாம ஆடுனாய்ங்க..அவியிங்களுக்கு தெரியாது, அம்மா செண்டிமெண்டுன்னாவே, “அவியிங்க ராசா” ன்னு..அந்த காலத்துல பலபேரை அழுக வைச்சிருக்கோமுல்ல…இப்பதான் தடுக்கிவிழுந்தா, பலபுள்ளைங்க, “பால்வாடி ஆயாவுக்கு ஒரு கடிதம்” ன்னு செண்டிமெண்டா எழுதுறனாலே, ஸ்டாப் பண்ணிவைச்சிருக்கோம்..

அடுத்து, இரண்டு பொண்ணுங்க, ஒரு பொண்ணு பேரு ஜாக்குலின்னாம்..நல்லாத்தாம் ஆடுச்சுங்கண்ணே..நம்மளுக்குதான் பொம்பளை புள்ளைங்க எப்படி ஆடுனாலும் புடிக்குமே..அந்த நேரம் பார்த்து, வூட்டுகாரம்மா..ஏங்க, சாம்பாரு ஏதோ தீயுற வாசம் வருதுன்னு சொல்லி அனுப்புச்சுண்ணே…கடுப்புல உள்ள போயிட்டு வர்றதுக்குள்ளே, இந்த புள்ளைங்க டான்ஸ் ஆடி முடிச்சுருச்சுங்கண்ணே…எனக்கு கஷ்டமா போச்சு..

அடுத்து ஆடுனாய்ங்க பாருங்க, அது ஆட்டம்..நம்ம பிரேம் கோபாலு, விவேக்…பின்னி பிடலெடுத்துட்டாய்ங்க..யப்பே, உடம்பா, அது ரப்பரா..அங்கிட்டு போறாயிங்க..இங்கிட்டு வர்றாயிங்க…கைய தூக்கி காலு மேல போடுறாய்ங்க..காலை தூக்கி, கை மேல போடுறாய்ங்க..தலையை தூக்கி கேப்புல வுடுறாயிங்க..பிச்சிட்டாயிங்கண்ணே..அப்பவே தெரியும்ணே..அவிங்கதான் ஜெயிக்கப் போறாயிங்கன்னுட்டு

அடுத்து ரெண்டு பொண்ணுங்க..அதுல பல்க்கா, ஜோதிகா மாதிரியே ஒரு பொண்ணு, பேரு ஜெயலட்சுமியாம்..அது கூட ஏதோ ஒரு பொண்ணு ஆடுச்சு…ஸ்டார்டிங்க் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு..அதுக்கு மேல சொதப்புனாய்ங்க பாருங்க..ஒரு பொண்ணு, அது பாட்டுக்கிட்டு ஆடுது..இன்னொரு பொண்ணு, ஏதோ டீ குடிக்க போற மாதிரி கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டு, அது பாட்டுக்கு ஆடுது….எனக்கு “கெக்கெபிக்கே, கெக்கெபிக்கே” ன்னு ஒரே சிரிப்பு…கடைசியில அந்த பொண்ணு ஒரே அழுகாச்சி..நம்ம விஜய் டிவிக்குதான் யாராவது அழுதா ரொம்ப பிடிக்குமே,,உடனே கேமிராவை தூக்கிட்டு வந்துட்டாயிங்க..அந்த பொண்ணு சரியா ஆடலையாம்..அதுக்கு ஒரே அழுகாச்சி..அடங்கொன்னியா..நாங்ககூடதான், உங்க டிராமாவையெல்லாம், உண்மைன்னு நம்பி இம்புட்டு நேரம் பார்த்துக்கிடு இருந்தோம்..நாங்க அழுதோமான்ன என்ன..

சரி…இவிங்க ஆடுறப்ப, இவிங்க அம்மா ஒருத்தங்க, ஆடுற ஆட்டம் இருக்கே..யப்பா..அதுகள விட, இவிங்க நெறைய எக்ஸ்பிரசன் கொடுக்குறாயிங்க..உடனே விஜய் டிவியும் கவர் பண்ணிடுறாய்ங்க..சரி. ஒழுங்கா ஆடலை, இவிங்களதான் எலுமினேட் பண்ணுவாயிங்கன்னு பார்த்தா…அடப்பாவிங்களா, இவிங்க பைனலுக்கு செலக்டாம்…போங்கடாங்..உங்க தீர்ப்புல தீய பொருத்தி வைக்க..என்ன அநியாயம்ணே….எல்லாருக்கும் நல்லா தெரியுது,..ஒரு இழவும் ஆடாத, ஜெயலட்சுமி ஜோடி செலக்டடாம்,..ஓரளவுக்கு ஆடுன, ஜாக்குலின் ஜோடி, எலுமினேட்டடாம்..அக்கிரமண்ணே..என் பொண்டாட்டு பொங்கி எழுந்து, டிவிய உடைக்க போய்ட்டாங்கண்ணே..நான் பண்ணுற சாம்பாருல உப்பு கம்மியா இருந்தா கூட இவ்வளவு கோபப்படமாட்டாண்ணே..அம்புட்டு கோபம்..ஆத்தாடி, பத்ரகாளியா மாறிட்டாண்ணே…எனக்கு வேற கொலை பசிண்ணே..அப்படியே நைசா கேட்டேன்…

“சரி..விடு..எல்லாம் டிராமா…நீ போய் இட்லிய எடுத்துக்கிட்டு வா”..

அதுக்கு கோபத்துல அவ சொல்லுறாண்ணே…

“போடாங்க…நானே விஜய் டிவி மேல கொலை வெறியுல இருக்கேன்…இட்டுலியும் கிடையாது..ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது…”

அப்படியே ஆடிப்போயிட்டேண்ணே….ஆஹா..விஜய் டி.விக்காரய்ங்க இதுவரைக்கு, வீட்டுக்கு வெளியேதான் உசுரை எடுத்துக்கிட்டு இருந்தாய்ங்க..இப்ப சோத்துக்கே வைச்சாய்ங்களா ஆப்பு..என் வீட்டுக்காரம்மா கண்ணுல அம்புட்டு கொலைவெறியை அன்னிக்குதான் பார்ர்குறேன்..ஆஹா..இதுக்கு மேல பேசுனா உயிர்சேதாரம் ஆகிப்போயிடுமுன்னு, நைசா, அடுப்பாங்கரைக்கு போயி, வெந்துக்கிட்டு இருக்குற ரெண்டு இட்லிய எடுத்து சாப்பிடலாமுன்னு போறேன்…பாவி மக..இட்லி மாவு ஊத்திருக்கா, சட்டியில தண்ணிகூட வைச்சிருக்கா…ஆனா, அவசரத்துல ஸ்டவ்வ பத்த வைக்காம போயிருக்காண்ணே…கடுப்புல ஒரு டம்ளரு தண்ணிய குடுச்சிட்டு ரூமுக்கு வர்றேன்..வூட்டுக்காரம்ம கேக்குறா…

“ஏங்க..மானா, மயிலாட..எத்தனை மணிக்கு..”

கடுப்பேத்துறாயிங்க மைலார்ட்..

6 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

Samy said...

rommpa kodumai.samy

நாய் நக்ஸ் said...

Indraiya nijam !!!

mm said...

விஜய் டிவி மேல என் தங்கச்சியை விட நான் கொலை வெறியோட இருக்கேன். கையிலே கெடச்சா கொன்ன்ன்னே புடுவேன். அவ்வளவு கொல்றாயிங்க...

(அது சரி... என் தங்கசிங்குறது யாரு தெரியுமா? உங்க வூட்டுக்காரம்மாதான் மச்சான்!!! அட! தங்கச்சியோட புருஷன் மச்சான்தானே மச்சான்!!??)

Anonymous said...

ராசா அவர்களே... நான் உங்க ஆளு. நான் உங்களின் ரசிகன். உங்களின் போடா கிறுக்கு பயலே, வர்றியா, டேய் தகப்பா போன்ற பதிவுகளின் தீவிர ரசிகன். நானும் மதுரை காரன் தாங்கோ...

இந்த தடவை உங்களுக்கு முன்னாடியே விஜய் டிவி நீயா நானா பத்தி எழுதிட்டேன்.. மன்னிப்பீர்களாக.
http://sathish-chandran.blogspot.com/2011/10/vs.html

பங்காளி
சதீஷ்

Harold Fisher said...

Grateful for sharingg this

Post a Comment