Saturday 25 December, 2010

ஏ எப்பே ஹேப்பி கிறிஸ்மஸ்லே...

“ஹேப்பி கிறிமஸ் ராசா”..இன்று தொலைபேசி வழியாக என் அம்மா குரலைக் கேட்டவுடன் ஒரு மாதிரியாக இருந்தது. எப்போதும் கணீர் என்று கேட்கும் அம்மாவின் குரலில் ஒரு நடுக்கம்.

“என்னாச்சும்மா..உடம்பு சரியில்லையா..”

“ஐயோ..இல்லப்பா..குளிருதுல்ல.. அதான்…”

என்னதான் சமாதானம் சொல்லினாலும், அம்மாவின் குரலில் உள்ள ஏக்கத்தை உணரமுடிந்தது. இன்னும் அந்தக்கால கிறிஸ்மஸ் ஞாபகங்கள் என் நெஞ்சில் ஓடியது. கிறிஸ்துமஸ் என்றாலே, ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் வீடு களைகட்டிவிடும். ரஜினி படம் ரீலீஸை எதிர்பார்த்திற்கும் ரசிகன் போல, அரையாண்டு லீவை எதிர்பார்த்திருக்கும் எனக்கு, கிறிஸ்துமஸ் என்று கேட்டவுடன் உடம்பே சிலிர்க்கும். அப்பதானே நிறைய ஸ்வீட் சாப்பிடமுடியும்.

ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிடுவோம். “எனக்கு ரெண்டு டிரஸ் எடுத்திருக்கோம்டி..” என்று நண்பர்களிடம் சொல்லும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். புதுடிரஸ் எடுக்கப்போகும் நிகழ்வையே தனிப்புத்தகமாக போடலாம். ஏதோ வெளிநாடு போகப்போகும் பயணி போல முந்தாநாளே நண்பர்களிடம் சொல்லிவிடுவேன் “நாங்க மருதைக்கு பஸ்ல்ல போறோமே…”

காலையில் எழுந்து அம்மா வலுக்கட்டாயமாக என்னை செய்ய சொல்லும் பல்விளக்கலை தொடர்ந்து முக்கு கடையில் பணியாரத்தை உள்ளே தள்ளினால்தான், எனக்கு சரவணபவன் சாப்பாடுபோல் இருக்கும். எனக்கு பிடிக்காத மூன்றாம் வகுப்பு புத்தகங்களுக்கும் அன்றுதான் லீவு. அந்த பரபரப்பிலும் வெற்றிவியர்வை நிலத்தில் சிந்த உழைத்த ரூபாய்தாள்களை பீரோவில் இருந்து அப்பா எடுத்து கவலையுடன் எண்ணும்போது அவர் கண்களில் உள்ள பயத்தை, இன்றுதான் மனைவியோடு நகைக்கடைக்கு செல்லும்போது உணரமுடிகிறது. என் வீட்டில் நாலுபேர், வீட்டிலோ மாதச்சம்பளம். அனைவருக்கும் புதுடிரஸ் எடுத்து திருப்திப்படுத்தவேண்டும், பைனான்ஸ் மினிஸ்டர் என்ன சார் பைனான்ஸ் மினிஸ்டர்…எங்கம்மா போடுவாங்க பாருங்க ஒரு புத்தாண்டு திட்டம். அப்படி ஒரு நேர்த்தியான திட்டம். இருக்கிற பணத்தில் மூத்தவனுக்கு ஒரு பேண்ட், நடுவுளவனுக்கு ஒரு சட்டை, கடைக்குட்டிக்கு(வேறு யாரு நாமதான்..) ஒரு டவுசர், சட்டை..கொண்டுபோன பணம் கரெக்டாக இருக்கும். மீதி உள்ள பணத்தில் கோனார் கடையில் செட்தோசை. அனைவர் முகத்திலும் அவ்வளவு சந்தோசம். அவ்வளவு சந்தோசத்திலும், எங்கப்பா கட்டப்போகும் அந்த பழைய வேட்டியையும், அம்மா கட்டப்போகும் போன கிறிஸ்மஸுக்கு எடுத்த பழைய சேலையும் பற்றி மறந்துவிடுவோம்.

கிறிஸ்மஸுக்கு பொதுவாக கிராமங்களில் கத்தோலிக்க ஆலயங்களில் இரவு 12 மணிக்குதான் ஆராதனை இருக்கும். அதனால் இரவு 8 மணிக்கெல்லாம் தூங்க சொல்லிவிடுவார்கள். அப்போதுதான் 11 மணிக்கு எழமுடியும் என்பதால். சரியாக 11 மணிக்கு அம்மா குரல் தூக்கத்திலும் கணீரென்று கேட்கும்.

“தம்பி ராசா..டையமாயிருச்சு..எழுந்திருப்பா..”

கடுப்பாக இருக்கும். கிறிஸ்மஸை ஒருநாள் தள்ளிவைத்தால் என்ன என்று இருக்கும். வேண்டா வெறுப்பாக எழுந்தாலும், புதுடிரஸை பார்த்தவுடன் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ள சத்தமாக சொல்லுவேன்..

“ஐய்..புதுடிரஸ்..”

அடிக்கடி புதுடிரஸை தொட்டுப்பார்த்துக்கொள்வேன். காலரில் குத்தியிருக்கும் குண்டூசியை கழட்டகூட மனம் வராது. அதைப்போட்டுக் கொண்டு ஆலயம் நோக்கி நடக்கும்போது ஏதோ நகரவீதிகளில் மன்னர் நடப்பது போல இருக்கும். மூன்றாம் வீட்டில் உள்ள பிரண்டு மூர்த்தி பார்க்கிறானா என்று மனம் அலைபாயும். நாங்களும் புதுடிரஸ் எடுத்திருக்கோம்ல.

பொதுவாக கிறிஸ்மஸ் திருப்பலி 1.5 மணிநேரம் இருக்கும்.ஏ.சி அம்பாசிடர் காரில் வந்த பாதிரியார் “ஏசு கிறிஸ்து போல எளிமையாக இருக்கவேண்டும்” என்று சொல்லும்போதே பாதிதூக்கம் வந்துவிடும். மீதிதூக்கம் அவர் பாடும்போது வந்துவிடும். அப்படியே அம்மா மடியில் படுத்து தூங்கிவிடுவேன். சொர்க்கம் அது. எந்த கவலையும் இல்லாத தூக்கம். அம்மா இருக்கிறார்கள், பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையினால் வரும் தூக்கம். அப்படியே தூங்கிவிடுவேன்..என்ன நடந்தது என்று தெரியாது, காலையில் எழுந்து கண்விழித்து பார்த்தால் என் வீட்டில், படுக்கையில்.

“எழுந்து இட்லி சாப்பிடு கண்ணா..முதல்ல அப்பாகிட்ட சிலுவை வாங்கு..”

துக்கத்தோடு எழுந்து அப்பாவிடம் செல்வேன். அப்படியே கட்டிக்கொள்வார். “ஹேப்பி கிறிஸ்மஸ்டா செல்லம்” என்று அப்பா கொடுக்கும் அந்த முத்தத்திற்கு என்ன வேண்டுமாலும் கொடுக்கலாம். பரிசாக அவர் கொடுக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை கவனமாக பாக்கெட்டிற்குள் போட்டுக்கொள்வேன். நாளைக்கி சவ்வுமிட்டாய் வாங்கவேண்டுமே..அப்படியே நடந்து சென்று அன்றைக்கு தயாராகும் கேசரியையும், இட்லியையும் பார்க்கும்போது, தினமும் கிறிஸ்மஸ் வராதா என்ற ஏக்கம் வரும்.

இன்னமும் அந்தகால கிறிஸ்மஸ் ஞாபகங்கள் அப்படியே என் நெஞ்சில். ஒரு பேக்வேர்ட் பட்டன் இருந்தால் எப்படி இருக்கும்..அப்படியே அம்மா மடியில்..அந்த தூக்கத்துடன்..அதே கிறிஸ்மஸ் நினைவுகளோடு..அப்படியே தூங்கிப்போனேன்..

காலையில் எழுந்துபார்த்தபோது நான்கு சுவர்தான் தெரிந்தது. மனைவி தூங்கி கொண்டிருந்தாள்.கிறிஸ்மஸ் பலகாரம் செய்த களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது. குளித்துவிட்டு வாழ்த்துக்கள் சொல்லலாம் என்று அவளை எழுப்பினேன்..அயர்ச்சியில் கண்திறந்து பார்த்தவள் சொன்னாள்..

“ஏ எப்பே ஹேப்பி கிறிஸ்மஸ்லே..”

ஏதோ எங்கம்மா சொல்லுவதுபோல் இருந்தது..

15 comments:

Anonymous said...

ரொம்ப நாள் கழிச்சு விக்ரமன் டச்ல ஒரு பதிவு! ஹாப்பி கிறிஸ்மஸ்
-
வெங்கடேஷ்

vishnu said...

மற்றவர்களின் கண்ணில் கண்ணீரை வரவைப்பதே உங்களுக்கு ஒரு வேலையாய் போய் விட்டது...... நெஞ்சை தொட்ட ஒரு பதிவு ...

ஜோ/Joe said...

அருமையான பதிவு .கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

Anonymous said...

Arambichitanya.... yennaikku Alagi padam vanthatho... athulirunthu yintha madri nencha nakkira stories jasthiyarichu...
Pa
Alagi
Pallikoodam
Pasanga
Mina

Anonymous said...

Yele.. nalla US lla vasadhiya vukanthuttu vakkanaiya elutha teriyuthilla..ethe ammava US kooteettu varavendiyatjuthanee... Ethe manaivi.. nallla rivit adippa..

Avangalukku vara pudikathu.. Medical issues.. Indialla dependency.. nnu kadhaividakoodathu...

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Anonymous said...
ரொம்ப நாள் கழிச்சு விக்ரமன் டச்ல ஒரு பதிவு! ஹாப்பி கிறிஸ்மஸ்
-
வெங்கடேஷ்
25 December 2010 7:58 AM
/////////////////////////////
நன்றி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
vishnu said...
மற்றவர்களின் கண்ணில் கண்ணீரை வரவைப்பதே உங்களுக்கு ஒரு வேலையாய் போய் விட்டது...... நெஞ்சை தொட்ட ஒரு பதிவு ...
25 December 2010 8:08 AM
/////////////////////////////////
நன்றி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

Anonymous said...

Nalla pathivu rasa anne.. Merry Christmas.. Inigo

Viji said...

Anne
Merry Christmas!!Next christmas junioroda extra spl!!
Manaiviya visarichatha sollunga.

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////////
Anonymous said...
Arambichitanya.... yennaikku Alagi padam vanthatho... athulirunthu yintha madri nencha nakkira stories jasthiyarichu...
Pa
Alagi
Pallikoodam
Pasanga
Mina
25 December 2010 9:08 AM
Anonymous said...
Yele.. nalla US lla vasadhiya vukanthuttu vakkanaiya elutha teriyuthilla..ethe ammava US kooteettu varavendiyatjuthanee... Ethe manaivi.. nallla rivit adippa..

Avangalukku vara pudikathu.. Medical issues.. Indialla dependency.. nnu kadhaividakoodathu...
25 December 2010 11:38 AM
//////////////////////////////////
நன்றி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Anonymous said...
Nalla pathivu rasa anne.. Merry Christmas.. Inigo
25 December 2010 4:14 PM
//////////////////////
நன்றி..கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
Viji said...
Anne
Merry Christmas!!Next christmas junioroda extra spl!!
Manaiviya visarichatha sollunga.
25 December 2010 5:16 PM
/////////////////////////////////
கண்டிப்பா விஜி..வீட்டில் எல்லோருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்..

rse said...

JOYEUX NOÊL

JULIE

Jaaffer Sadiq said...

Rasa sir is back to form...
wish you a happy christmas & new year..

taaru said...

“ஏ எப்பே ஹேப்பி கிறிஸ்மஸ்லே..”......

Post a Comment