Tuesday 5 October, 2010

மிக்சர் ஜுஸ்

இந்த வார விளக்கம்

நான் பிளாக் எழுத ஆரம்பித்தது, சமுதாயத்தை திருத்த வேண்டும் என்ற நோக்கினால் அல்ல. ஏதோ, கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி, நம் எண்ணங்களை பகிரலாமே என்ற நப்பாசைதான். இதில் யாரும் எனக்கு எதிரியில்லை. யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்றெல்லாம் எழுதுவதில்லை. அப்படி புண்படுத்தியிருந்தால் கூட, உடனடியாக மன்னிப்பு கேட்பதில் எந்த வித தயக்கமும் இல்லை. சில நண்பர்களின் இமெயிலை பார்க்கும்போது, இது தோன்றியது. அவ்வளவும் கெட்ட வார்த்தைகள், நாயே, பேயே என்ற வார்த்தைகள். ரஜினியை பற்றி விமர்சனம் பண்ணும்போது கூட நாகரிகமாகேவே விமர்சித்திருக்கிறேன். எந்திரனைப் பார்த்து வியந்து பாராட்டி விமர்சனம் எழுதியிருக்கிறேன். இரண்டு வருடங்களாக எழுதும் எனக்கு, கமெண்ட் மாடரேஷன் வைக்கும் துர்பாக்கியம் கடந்த வாரமாகத்தான் கிடைத்தது. எல்லா கமெண்டுகளையும் அனுமதிக்க ஆசைதான், ஆனால் அவை நாகரிகமாக இருக்கும் பட்சத்தில். அப்படி ஆபாச கமெண்ட் எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கண்டிப்பாக என் கருத்தோடு, உங்கள் கருத்து மாறுபட்டிருக்கும். அல்லது ஏற்று கொள்ள முடியாததாக இருக்கும் அவற்றை நாகரிகமாக வெளிப்படுத்தலாமே. என்னை திட்டி என்ன ஆகப்போகிறது. ஒருநிமிடம் சந்தோசமாக இருக்கும். அப்புறம் வேலையை பார்க்க போய்விடுவோம். ஆனால், உங்களுக்கு பிடித்த கருத்தைதான் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்காதிர்கள். என் எண்ணங்களை எழுத எனக்கும் சுதந்திரம் உண்டல்லவா. நாம் எழுதுவதைப் பார்த்துதான் நம் குழந்தைகளும் கற்று கொள்ளும். நம்மால் முடியாவிட்டாலும், நம் சந்ததியினர்க்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுப்போம், (ஆட்டோ மிரட்டலுக்காக எழுதியது என்றெல்லாம் நினைக்ககூடாது..சொல்லிப்புட்டேன்..)

இந்த வார படம்

வேறு என்ன. இந்த வார ஹாட்கேக் எந்திரன் தான். வசூலில் அடிபின்னுகிறது என்று கேள்விபட்டேன். களவானி படத்தில் ஹூரோ சொல்லுவார் “நான் சும்மாவே ஆடுவேன். காலுல சலங்கையை கட்டிவேற விட்டுட்ட..” ரஜினிபடம் என்றாலே கலெக்சன் தான்(பாபா. குசலேனை நினைச்சுக கூடாது). இதுல சன் பிக்சர்ஸ் மார்க்கெட்டிங்க் வேற. 190 கோடி, 380 கோடியாகும் என் கேள்விப்படுகிறேன். தட்டுதடுமாறி சட்டைப்பையில் இருந்து எடுத்த இரண்டு ரூபாய் சில்லறை காசில் தினகரன் வாங்கி படித்த இளைஞர்கள் “எந்தலைவன் அரசியலுக்கு வந்துருவான்..நம்பிக்கை வந்துருச்சு..” என்ற சந்தோசத்தில் இருப்பதாக, ஆட்டோ வீட்டுக்கு வராத இடத்தில் இருந்து வரும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த வார கணிப்பு

எனக்கு என்னமோ இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக எந்திரன் படுகிறது. கொத்து கொத்தாக அவார்டுகளை வெல்லும் என்று முக்குகடையில் இரண்டு ரூபாய் கடலை பர்பி வாங்கி சாப்பிடும்போது கணிக்க தோன்றியது. அவார்டு வாங்கும் என்று நான் கணிப்பவை கீழே..

சிறந்த நடிகர் – ரஜினி(தமிழக அரசு விருது மட்டும்). அரசியலுக்கு வருவேன் என்று இடையில் சொல்லிவிட்டால் அதுவும் பறிபோக வாய்ப்பு உண்டு, கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது

சிறந்த டைரக்டர் – சங்கர்

சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர் ரகுமான்

சிறந்த கிராபிக்ஸ் – எந்திரன்

சிறந்த ஜனரஞ்சகபடம் – எந்திரன்

சிறந்த தயாரிப்பு – எந்திரன்

சிறந்த சண்டை பயிற்சியாளர் – பீட்டர் ஹெயின்

சிறந்த் கலை – சாபுசிரில் – எந்திரன்

இந்த வார நிகழ்ச்சி

கலைஞர் டி.வியில் வரும் நாளைய இயக்குநர் இந்த வாரத்திலிருந்துதான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. எனக்கு என்னமோ நடுவராக வரும் மதனை விட பிரதாப் போத்தன் தான் பிடித்திருக்கிறது. பிடிக்கவில்லையென்றால், நோ வழவழா கொழகொழா..பட்டென்று சொல்லிவிடிகிறார். ஆனால் சிலநேரம் அது கொஞ்சம் ஓவராக போய்விடுகிறது. இந்த வார நிகழ்ச்சியில் “காதலுக்கு பொய் அழகு” என்ற குறும்படத்திற்கு அவர் அளித்த கமெண்ட் “ஒரு பிட்டு கூட பிடிக்கலை..”. சட்டென்று மாறிய அந்த நாளைய இயக்குநரின் முகத்தை பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் இதுபோன்ற அவமானங்கள்தான் “நீரூபிக்கிறேன் பாருடா..” என்ற தூண்டுகோலைதரும். “கருவா நாயே., இயற்பியலில் நீ பாஸாக மாட்ட” என்ற திட்டிய இயற்பியல் ஆசிரியரிடம் 183 மார்க் எடுத்து நீட்டிய என் அனுபவத்தை போல….

இந்த வார பதிவுகள்

சில பதிவுகளை படிக்கும்போது சட்டென்று ஈர்த்து கொள்ளும். சிலநேரம், கவலைகளை மறந்து சிரிக்க சொல்லும். அப்படி படித்த பதிவுகள்.

  1. சுரேஷ் கண்ணின் இந்த பதிவு http://pitchaipathiram.blogspot.com/2010/10/blog-post.html

வித்தியாசமான எழுத்து நடை. புரிய கொஞ்சம் கஷ்டமாக

இருக்கலாம். ஆனால் கருத்து ஒவ்வொன்றும் நெஞ்சில்

பதிகிறது. .


2. லக்கிலுக்கின் இந்த பதிவு – என்ன ஒரு கிண்டல்

மனுசனுக்கு. கூடவே பொறந்ததுன்னு நினைக்கிறேன்.

http://www.luckylookonline.com/2010/10/blog-post.html

3. பன்னிக்குட்டி ராமசாமியின் இந்த பதிவு – கொஞ்சம் ஓவர் நக்கலாக தோன்றினாலும்,

படித்தவுடன் சிரித்து விட்டேன்.

http://shilppakumar.blogspot.com/2010/10/blog-post.html

8 comments:

Unknown said...

Nice post. Especially the first one.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பகிர்வு.நானும் கலைஞர் டிவி பாக்கறப்ப அதே தான் நினைச்சேன்/>>> சட்டென்று மாறிய அந்த நாளைய இயக்குநரின் முகத்தை பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது>>>

உங்கள் உணர்வுகள் அருமை

அவிய்ங்க ராசா said...

நன்றி பாலா,செந்தில்

CrazyBugger said...

Rasa i think you lost your regular commentators becoz of rajini.. take care

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Maduraimalli said...
Rasa i think you lost your regular commentators becoz of rajini.. take care
6 October 2010 8:55 AM
/////////////////////////////
பரவாயில்லை நண்பா...

மதுரைவீரன் said...

பிரதாப் எப்பவுமே இப்படி தான் ..
பண்ணிகுட்டி ராமசாமி லிங்க் அருமை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா தல! ரொம்ப நன்றிங்ணா..!

அவிய்ங்க ராசா said...

////////////////////////
சதீஷ் said...
பிரதாப் எப்பவுமே இப்படி தான் ..
பண்ணிகுட்டி ராமசாமி லிங்க் அருமை.
6 October 2010 8:01 PM
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா தல! ரொம்ப நன்றிங்ணா..!
7 October 2010 12:13 PM
////////////////////////
நன்றி சதீஷ், பன்னிக்குட்டி இராமசாமி..))

Post a Comment