Wednesday 18 August, 2010

எனக்கு வந்த சில மிரட்டல் கடிதங்கள்…

என்னை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தினமும் என்னைப் பாராட்டி ஆயிரம் கடிதங்கள் வருவதால், அமெரிக்க அஞ்சலக துறை என் வீடு அருகில் புதிதாக ஒரு போஸ்ட் ஆபிஸ் ஆரம்பிப்பதாக உள்ளனர். நம்மால நாலு பேருக்கு வேலை கிடைக்குதுன்னா சந்தோசம்தானே. அப்புறம்ணே, புதிதாக போஸ்ட் ஆபிஸ் ஆரம்பிப்பதால், என்னுடைய போஸ்ட் பாக்ஸ் நம்பரும் மாறியுள்ளது. இதுவரை இருந்த போஸ்ட் பாக்ஸ் நம்பரான 420 என்பது, இப்போது 420A என்று மாறியுள்ளது. வாசகர்கள், புது நம்பருக்கு வழக்கம்போல் கடிதம் அனுப்பி குஜாலாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கண்டிப்பாக தபால் தலை ஒட்டவேண்டுமென்று கேட்டுக் கொள்ள படுகிறார்கள். தினமும் ஆயிரம் கடிதங்கள் வருவதால், அதில் சிலுக்கு..அய்யோ வாய் குழறுதே..குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதில் அனுப்பப்படுவர். அந்த அதிர்ஷ்டக்காரராக இருப்பதற்கு உடனே முந்துவீர்.

எனக்கு போனவாரம் வந்த சில கடிதங்களை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

முதல் கடிதம்

திரு அவியிங்க ராசாவுக்கு, ஆட்டையாம்பட்டி ஆனந்தகோபால் அண்டார்டிகாவிலிருந்து எழுதுவது. நான் உங்கள் பிளாக்கை கடந்த 40 வருடங்களாக படித்து வருகிறேன். சூப்பரா எழுதுறீங்க..நான் இங்கு அண்டார்டிகாவுக்கு போன வருடம்தான் வந்தேன். கை நிறைய சம்பளம். 9-6 வேலை. இங்கு அண்டார்டிகாவில் உள்ள கம்பெனிக்கு ஆப்ஸோர்ஸாக என் கம்பெனி உள்ளது. வேலை மிகவும் சுலபமதான். வேலை என்னவென்றால் இங்கு பென்குயின்கள் கக்கா போனால் கழுவிவிடுவது.முதலில் அதனுடைய பாஷையை கற்று கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.கண்ட இடத்தில் கக்கா போய்விடும். இப்போது ஒவ்வொரு பென்குயின்க்கும் ஸ்னக்கீஸ் கட்டி விட்டு விடுவதால் வேலை சுலபமாக உள்ளது.

உங்கள் பிளாக் படிக்காமல் தூக்கம் வருவதில்லை. ஒவ்வொரு நிமிடத்திற்கும் F5 பிரஸ் பண்ணி, அந்த எழுத்தே கீபோர்டில் அழிந்து விட்டது.

நான் படிப்பது கூட ஆச்சர்யம் இல்லை. இங்குள்ள பென்குயின்கள் உங்கள் எழுத்தைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. காலையில் எழுந்து உங்கள் எழுத்தைப் படித்தபின்புதான் கக்கா போகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்களேன். நீங்கள் போனவாரம் எழுதிய “ங்கொக்காமக்கா” என்ற பதிவை படித்து பென்குயின்கள் எல்லாம் ஒரே அழுவாச்சி. எப்படி இப்படியெல்லாம் உருக்கமாக எழுதிகீறீர்கள்.போன மாதம் நீங்கள் எழுதிய “அக்கா மக வயசுக்கு வந்துட்டா” என்ற சமுதாய விழிப்புணர்வுமிக்க பதிவுக்கு இங்கே ஒரே அப்ளாஸ். தொடர்ந்து இதுபோன்ற சமுதாயத்தை தட்டி எழுப்பக்கூடிய பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள், தயவுசெய்து எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். அப்படி நிறுத்திவிட்டால், நானும், பென்குயின்களும் கூட்டத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று எச்சரிக்கிறேன்…

இரண்டாம் கடிதம்

பாசமுள்ள அவியிங்க ராசா…

“கிர்,,,க்க்க்,,க்க்க்க்கிர்,,,,கிர்….கிர்…”

சாரி..தமிழிலிலேயே சொல்லிவிடிகிறேன். எங்கள் பாஷையில் “காலை வணக்கம்” என்று அர்த்தம். நாந்தான் செவ்வாய் கிரகத்திலிருந்து ஏலியன் நம்பர் 45 பேசுகிறேன். நம்புவதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆமாம் நான் ஒரு ஏலியன். இங்கு 400 வருடங்களாக உள்ளேன். உங்கள் பதிவை அறிமுகம் செய்துவைத்தது திரு.ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள். அவர்கள் போனமுறை நிலாவுக்கு வந்துவிட்டு திரும்பும் வேளையில் ஒன்னுக்கடிப்பதற்காக செவ்வாய் கிரகத்தில் இறங்கினார். அப்படி ஒரு சந்திப்பின்போது அவர் எனக்கு அறிமுகம் செய்ததுதான் உங்கள் பிளாக்..

உங்கள் பதிவின் தீவிர ரசிகன் நான். உங்கள் எழுத்துக்கு அடிமை என்றே சொல்லலாம். காலையில் பல்கூட விளக்காமல் உங்கள் பதிவை படிப்பதில் அப்படி ஒரு ஆர்வம்.. சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துள்ளீர்கள் தெரியுமா..ஏ.ஆர் ரகுமான் வாங்கிய 2 ஆஸ்காரை விட 10 மடங்கு சாதனை அது. ஆனால் அப்படி ஒரு சாதனை செய்துவிட்டு அமைதியாக இருக்கீறீர்கள் தெரியுமா..அதுதான் உங்களிடம் எனக்கு பிடித்தது. என்ன புரியவில்லையா..நீங்கள் எழுதிய போன பதிவு 19 ஓட்டு வாங்கி தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரையில் வந்ததைதான் சொல்கிறேன். எப்பேர்பட்ட சாதனை என்பது உங்களுக்கு தெரியுமா..நீங்கள் ஒரு வருடத்தில் எழுதிய அத்தனை பதிவுக்கும் சேர்த்து வாங்கிய 18 ஓட்டை, ஒரே பதிவில் வாங்கி விட்டீர்கள். இதுவரை கடந்த 50 வருடங்களாக தமிழ்மணம் பரிந்துரையில் வரும் அந்த நாலுபேரைத் தவிர உங்கள் பதிவும் வந்தது பெரும் ஆனந்தம். ஆனால் எதற்கும் தமிழ்மணம் அட்மினிஸ்டிரேட்டரிடம் ஒரு வார்த்தை விசாரித்து கொள்ளுங்கள். ஏதாவது டெக்னிக்கல் மிஸ்டேக் என்று சொல்லக்கூடாது பாருங்கள்..

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கு வாசகராக இருப்பதற்கு எங்கள் ஏலியன் கூட்டம் பெருமைப்படுகிறது. முடிந்தால் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரவுண்ட் வாங்களேன். வரும்போது ஆலன்ஷோலி ஜட்டியும், சுடர்மணி பனியனும் வாங்கிவரவும். தயவுசெய்து எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். அப்படி நிறுத்தி விட்டால், அதை தடுப்பதற்கு பூமி மீது போர் தொடுப்போம் என்று “இண்டிபென்டென்ஸ் டே” மீது ஆணையிட்டு கூறுகிறேன்..

=======================================================================

இதுபோன்று தொடர்ந்து வரும் பாசமிகு கடிதங்களைப் பார்க்கும்போது கண்ணுல தண்ணி வருது. அதை கொண்டாடுவதற்காக பக்கத்து தெருவில் உள்ள பாருக்கு செல்ல வேண்டியுள்ளது. டாக்சி மற்றும் இதர செலவுகளுக்கு வாசகர்கள் தயவுசெய்து ஒரு பத்தாயிரம் ருபாயை, என்னுடைய ஐ.சி.ஐ.சி.ஐ அக்கௌண்டில்..ஹலோ..எங்க ஓடுறீங்க..ஹலோ..ஹலோ…எச்சூயூஸ்மி.

15 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ராசாண்ணே, ஏன் இப்படி?

முடியல... உங்க வாசகர்கள நினைச்சா...

Viji said...

ஹலோ
என்னாச்சு தீடீர்னு ?என் இப்படி எல்லாம்?
எங்க என்னோட கடிதத்த காணோம்?

ஜெய்லானி said...

என்னோட கடிதத்தை கானோமே.. அப்படியும் ஸ்டாம்ப் ஒட்டிதானே அனுப்பினேன்.

இவன் சிவன் said...

கொலைவெறித்தாக்குதல்... சிரிச்சி மாளல சாமி...
நீங்க கடேசி பத்தில 'அந்த' ஆள தான வாருனீங்க ...

அண்ணே நா சோழவந்தான் 'சாமியார்' காலேஜ் ல படிச்ச பயபுள்ள தான்...

Prathap Kumar S. said...

ஹஹஹஹ... தலைவா கலக்கல்ஸ்...


//ந்த 50 வருடங்களாக தமிழ்மணம் ரிந்துரையில் வரும் அந்த நாலுபேரைத் தவிர உங்கள் பதிவும் வந்தது பெரும் ஆனந்தம்//

அப்பிடிபோடு அருவாளை....போட்டுத்தாக்கு...:))

Athiyuva said...

Raasa, why you are always writing something which is not happened? Please write something in real.

Also don’t bluff as you like to say chaaru, he is born GENIUS

taaru said...

ஏன்ண்ணே? [வின்னர் வடிவேலு மாதிரி படிக்கவும்]
born Genius? - நல்ல வேளை இங்கிலீஷ்ல எழுதுனீங்க? தமிழ்லேனா தப்பா இருந்து இருக்கும்...

அவிய்ங்க ராசா said...

////////////////
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ராசாண்ணே, ஏன் இப்படி?

முடியல... உங்க வாசகர்கள நினைச்சா...
17 August 2010 11:02 PM
////////////////////////
aahaa..udaney katchi aarambichiralam polirugge..))

அவிய்ங்க ராசா said...

////////////////////
Viji said...
ஹலோ
என்னாச்சு தீடீர்னு ?என் இப்படி எல்லாம்?
எங்க என்னோட கடிதத்த காணோம்?
17 August 2010 11:36 PM
ஜெய்லானி said...
என்னோட கடிதத்தை கானோமே.. அப்படியும் ஸ்டாம்ப் ஒட்டிதானே அனுப்பினேன்.
18 August 2010 12:23 AM
//////////////////////////
viji, jey..only antartica & mars is allowed..hehe..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
இவன் சிவன் said...
கொலைவெறித்தாக்குதல்... சிரிச்சி மாளல சாமி...
நீங்க கடேசி பத்தில 'அந்த' ஆள தான வாருனீங்க ...

அண்ணே நா சோழவந்தான் 'சாமியார்' காலேஜ் ல படிச்ச பயபுள்ள தான்...
18 August 2010 1:31 AM
//////////////////////
thanks sivan..Vivegananda college ah??kaikutthal arisi pottu aalai kaali pannuvaaiyangalae..))

அவிய்ங்க ராசா said...

//////////////////
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹஹ... தலைவா கலக்கல்ஸ்...


//ந்த 50 வருடங்களாக தமிழ்மணம் ரிந்துரையில் வரும் அந்த நாலுபேரைத் தவிர உங்கள் பதிவும் வந்தது பெரும் ஆனந்தம்//

அப்பிடிபோடு அருவாளை....போட்டுத்தாக்கு...:))
18 August 2010 1:54 AM
/////////////////////
thanks pradap..

அவிய்ங்க ராசா said...

///////////////////
Athiyuva said...
Raasa, why you are always writing something which is not happened? Please write something in real.

Also don’t bluff as you like to say chaaru, he is born GENIUS
//////////////////
Hahaha..oru jokku thaan ponga..

அவிய்ங்க ராசா said...

////////////////
taaru said...
ஏன்ண்ணே? [வின்னர் வடிவேலு மாதிரி படிக்கவும்]
born Genius? - நல்ல வேளை இங்கிலீஷ்ல எழுதுனீங்க? தமிழ்லேனா தப்பா இருந்து இருக்கும்...
18 August 2010 2:29 AM
///////////////////////
hahaha..i laugh like anything...)))))
enna ayyanarey..romba naala aalai kaanom..here alaghi software down. So writing in english..((

Athiyuva said...

Athiyuva said...
Raasa, why you are always writing something which is not happened? Please write something in real.

Also don’t bluff as you like to say chaaru, he is born GENIUS
//////////////////
Hahaha..oru jokku thaan ponga..

/////////////////

loose ah Raasa nee

Unknown said...

அடின்க்

Post a Comment