Thursday 4 March, 2010

நித்தியானந்த சுவாமிகளுடன் பதிவர்கள் சந்திப்பு

(சிரிக்க மட்டும்தான்..மனசுல வைச்சிக்கிட்டு அடுத்த பதிவர் சந்திப்புக்கு வர்றப்ப வன்முறையை கையில் எடுக்க கூடாது…சொல்லிப்புட்டேன்..)

ஊடகங்களில் நித்தியானந்த சுவாமிகள் கிழிபடுவதால், தன் நிலையை விளக்க பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கிறார். பதிவர்கள் அனைவரும் ஆஜராக நித்தியானந்த சுவாமிக்கு மிக்க சந்தோசம்..

நித்தி : பெரியோர்களே..உங்களை நான் ஏன் அழைத்தேன் என்றால்..

கேபிள் சங்கர் : யோவ்..யாருய்யா பெரியோர்கள்..நாங்க எல்லாம் யூத்து தெரிஞ்சுக்கோ..

நித்தி : ஓ..கேபிள் சங்கரா..வீட்டில் பேரன் பேத்திகள் நலமாக உள்ளனரா..

(கேபிள் சங்கர் கடுப்பாக எல்லோரும் கூல்டவுன் செய்கிறார்கள்)

கேபிள் சங்கர் : அவரைக் கண்டியுங்கப்பா..இப்பதான் 27 வயது பிறந்த நாள் கொண்டாடி இருக்கேன்..என்னைப் போய் இப்படி சொல்லுறாரு...நீங்க லெமன் ட்ரீ, டக்கிலா புக் படிச்சீங்களா..

நித்தியானந்த சுவாமிகள் காதில் சக்கீலா என்று விழ முகம் மலருகிறது

நித்தி : சக்கிலாவா..எங்க..கதவைத் திற....

ஜாக்கி சேகர் : ஆமா..கதவைத்திற..சக்கீலா வரட்டும்..இப்ப்படித்தான் கதவை ரொம்ப ஓவரா தொறந்து வைச்சிட்டீங்களோ..கேமிரா வந்திருச்சு..

நித்தி : இல்லை மானிடா..தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது..மங்களம் உண்டாகட்டும்..

வெளியூர்க்காரன் : அது யாருங்க மங்களம்….அந்த சி.டியாவது முழுசா எடுத்திருக்காயிங்களா..

நித்தி : அடப்பாவிகளா..நான் என்ன ஆபாசப் படம் எடுப்பவனா..

நர்சிம் : பின்ன….கம்பராமாயணம் எழுதறவரா..இப்படிதான் திருவள்ளுவர் திருவாசகத்துல..

நித்தி : என்ன..

நர்சிம் : அது வந்து..திருமூலர் திருக்குறள்ல..அய்யோ வாய் குழறுதே..

அதிஷா : இதுக்குத்தான் நைட் முழுதும் தூங்காம நித்தியானந்த சி.டி பார்க்க கூடாதுங்குறது..(நித்தியைப் பார்த்து)…ஏன் சார்..ரஞ்சிதா வரலை..

நித்தியானந்தம்(கண்ணை மூடியபடி)..ரஞ்சிதாயே நமஹ….குழந்தாய்..அதில் இருப்பது நானல்ல..கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது..

“அந்த டவுட்டு எனக்கும் இருந்துச்சுங்க..” குரல் கேட்டு திரும்பிப் பார்த்தால் துண்டால் முகத்தை மறைத்த படி பாரு வருகிறார்..

வானம்பாடிகள் : ஏண்ணே..அவ்வளவு துல்லியமாவா கிராபிக்ஸ் பண்ணிருக்காயிங்க..ஒருவேளை அவதார் படத்துல ஒர்க் பண்ணின கிராபிக்ஸ் டீமா இருக்குமோ..

ஜாக்கிசேகர் : ஆனாலும் லைட்டிங்க் சரி இல்லைப்பா..கேமிராவை அந்தப் பக்கம் வைச்சு எடுத்துருக்கணும்,.,மறைக்குதுல்ல..ஹி..ஹி..

பாரு : யோவ்..எதயாவது எடுக்கட்டும்யா..என்னை ஏன்யா கொல்லுறீங்க..ஒரு ஆளை நம்புனது தப்பாயா..அவரும் நானும் ஒன்னாயா..ஆனாலும் அவர் மகான்யா..எவ்வளவு நோயெல்லாம் குணமாக்கிருக்கார் தெரியுமா..

லக்கிலுக் : ஆமாம்..பாரு அப்பாவிப்பா..ரஞ்சிதா ஏதாவது நோயின்னு வந்து இருப்பாங்க..பாருவை நம்புங்கப்பா..(பாருவைப் பார்த்து) நீங்க சாமியார் பத்தி சொன்ன கருத்துகள் எதுலயும் எனக்கு உடன்பாடில்லை..ஆனாலும் உங்களை புடிக்குது..

வால்பையன் : பாரு டவுசர் கிழிஞ்சு போச்சு..டும்..டும்..டும்..

பாரு : மிஸ்டர்..நான் டவுசர் போடுறேன்னு யாரு சொன்னா..ஒன்லி ஆலன் ஜோலிதான்..அதுவும் போன வாரத்துல அதை வாங்குறதுக்கு சிட்டி சென்டர் வரைக்கும் போனேன்..திரும்பி வர கையில் காசில்லை..சோழா ஹோட்டலுக்கு பாருக்கு கூட போக முடியலை..எழுத்தாளனுக்கு இங்க அவ்வளவுதான் மரியாதை..இதே கேரளாவா இருந்தா..

நித்தி டென்சன் ஆகிறார்..

நித்தி : உங்க கதையெல்லாம் இருக்கட்டும்..நான் என்ன சொல்ல வர்றேன்னா..

பரிசல்காரன் : சுவாமி..சின்ன டவுட்..சன் டீ.வியில லைட் ஆப் ஆகிற வரைக்கும்தான் ஒளிபரப்புறாயிங்க….மீதி சி.டி உங்ககிட்ட இருக்கா..

உண்மைத்தமிழன் : ஹே..நித்தியானந்தம் தவிர நாமெல்லாம் யோக்கியமானவர்கள்தானா..காமம் என்பது மனிதர்களை கொல்லதான்..(என்று ஆரம்பிக்க..நித்தியானந்தம் அலறுகிறார்)

நித்தி : ஆஹா..இவர் பத்து பக்கம் எழுதுறவராச்சே..என்னை உசிரோட கொல்லுறாயிங்கப்பா..நான் ஜெயிலுக்கே போறம்பா..

(சொல்லியபடியே ஓட எத்தனிக்கிறார்)

கதவு பின்னால் இருந்தபடியே சன்.டிவி கேமிரா குரூப் வருகிறது..

சன் டீ.வி குரூப் : சாமி..அப்படியே கதவு பின்னாடி இருந்து கேமிராவுல எடுத்துக்கிட்டு இருந்தோம்..அப்படியே கடைசியா ஒரு சிரிப்பு சிரிச்சீங்கன்னா 08:30 மணி செய்தியில போட்டுருவோம்..

மீண்டும் கேமிராவா..என்று நித்தி அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்..

46 comments:

Ganesan said...

ஜாக்கி சேகர் : ஆமா..கதவைத்திற..சக்கீலா வரட்டும்..இப்ப்படித்தான் கதவை ரொம்ப ஓவரா தொறந்து வைச்சிட்டீங்களோ..கேமிரா வந்திருச்சு..

விழுந்து விழுந்து சிரித்த வரிகள்.

சங்கர் said...

நக்கல் இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்கலாம்

Anonymous said...

:)))))))))))))))))))))))))

Vijay Anand said...

Super appu...
Address sollunga sumo varum...

Anonymous said...

ராசாண்ணே, ரொம்ப நாளைக்கு பொறவு ட்ரே ட் மார்க் பதிவு.விழுந்து விழுந்து சிரிச்சதுல வயறு புண்ணா போச்சு...- பயபுள்ள.

ஜெய்லானி said...

நல்லா இருக்கு இன்னும் கொஞ்ஜம் கூட எழுதிருக்கலாம்.

Veliyoorkaran said...

@@@வால்பையன் : பாரு டவுசர் கிழிஞ்சு போச்சு..டும்..டும்..டும்..//////

நித்யானந்தா நித்யானந்தா நித்யானந்தா நித்யானந்தா.........(இவ்ளோ காசு போட்டு ஆசிரமம் கட்டுனவன் பத்து ரூவா குடுத்து ஜட்டி வாங்கி போட்ருந்தா இந்த அவமானம் வந்துருக்குமா..யோசிங்க மக்களே...பயன்படுத்துங்கள் சுடர்மணி ஜட்டிகள்..பயன்படுத்தாதீர் லங்கோடுகள்...)..

தமிழ் அமுதன் said...

;;)))))))

Anonymous said...

///வானம்பாடிகள் : ஏண்ணே..அவ்வளவு துல்லியமாவா கிராபிக்ஸ் பண்ணிருக்காயிங்க..ஒருவேளை அவதார் படத்துல ஒர்க் பண்ணின கிராபிக்ஸ் டீமா இருக்குமோ..

ஜாக்கிசேகர் : ஆனாலும் லைட்டிங்க் சரி இல்லைப்பா..கேமிராவை அந்தப் பக்கம் வைச்சு எடுத்துருக்கணும்,.,மறைக்குதுல்ல..ஹி..ஹி..//

hahahahha

superb

vasu balaji said...

:))). அட சாமி சிரிக்க முடியல:)))

Unknown said...

ஹஹஹஹ....

சூப்பரு ராசா.

<<<
நித்தியானந்த சுவாமிகள் காதில் சக்கீலா என்று விழ முகம் மலருகிறது
>>>
எப்படி இப்படி??? ஹஹ

<<<
ஏன் சார்..ரஞ்சிதா வரலை..
>>>
:D

<<<
பரிசல்காரன் : சுவாமி..சின்ன டவுட்..சன் டீ.வியில லைட் ஆப் ஆகிற வரைக்கும்தான் ஒளிபரப்புறாயிங்க….மீதி சி.டி உங்ககிட்ட இருக்கா..
>>>
உஸ்ஸ், அப்பாடி, எல்லார் மனசுலையும் இருந்த கேள்வியை கேட்டுடாருப்பா... :) ஆமா, மீதி சிடி எங்கே???

Jackiesekar said...

போட்டு தாக்கு வர வர போட்டு தாக்கு...சிரிச்சி வயிறு புண்ணாகி போச்சி....ராசா

இவன் சிவன் said...

semma lanthu thalaiva

பா.வேல்முருகன் said...

கலக்கல். சூப்பர். ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பிராண்ட் பதிவு.

வரதராஜலு .பூ said...

சூப்பரோ சூப்பர்

//கேபிள் சங்கர் : யோவ்..யாருய்யா பெரியோர்கள்..நாங்க எல்லாம் யூத்து தெரிஞ்சுக்கோ..

வானம்பாடிகள் : ஏண்ணே..அவ்வளவு துல்லியமாவா கிராபிக்ஸ் பண்ணிருக்காயிங்க..ஒருவேளை அவதார் படத்துல ஒர்க் பண்ணின கிராபிக்ஸ் டீமா இருக்குமோ..

ஜாக்கிசேகர் : ஆனாலும் லைட்டிங்க் சரி இல்லைப்பா..கேமிராவை அந்தப் பக்கம் வைச்சு எடுத்துருக்கணும்,.,மறைக்குதுல்ல..ஹி..ஹி..//

செம கலக்கல். :)

அப்பாவி முரு said...

பயபுள்ள., இனி ஸ்டில் கேமராவைப் பார்த்தால் கூட அலறிடுவான்...

CS. Mohan Kumar said...

ம்.. நடக்கட்டும் நடக்கட்டும் ..

எல் கே said...

analum neenga sankara kilavarnu solli iruka koodathu

kalil said...

superu appu.

sema comedy sir neenga

பிச்சைப்பாத்திரம் said...

ரசித்தேன். :-)

டக்கால்டி said...

செம காமெடியா இருக்கு சார்.

Athisha said...

ஜெய் அவிங்க ஸ்ரீ ராஜானந்தாய நமக!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராஜா!
இதை நான் அலுவலகத்தில் படித்துச் குலுங்கிச் சிரிக்க என் சக ஊழியன் என்ன? என்ன? எனக் கேட்கிறான்; அவனோ பிரஞ்சுக்காரன் என்னத்தை சொல்ல!
அருமை!

Cable சங்கர் said...

பத்தலையே ராசா

Anonymous said...

கீழே உள்ள இரண்டு வலைபக்கங்களும் அமெரிக்காவில் இருந்து எழுதப்படுகின்றன. இதை எழுதுபவர்களும் comment எழுதுபவர்களும் நித்யனந்தவைப்பற்றி முன்பே அறிந்து வெளியில் வந்த சீடர்கள். நித்தியானந்தா மடத்தைப்பற்றி ஏராளமான ரகசிய தகவல்கள் உள்ளன.
1) http://nithyananda-cult.blogspot.com/
2) http://guruphiliac.blogspot.com/

Anonymous said...

அப்படியே அந்த "காம பாதிரியார்" பற்றியும் எழுதலாமே ...

Anu said...

Aahahahahaha....rompa supera eruku..
kalakuringa pa

Thuvarakan said...

Super

Anonymous said...

நல்ல நகைச்சுவை.

இன்னும் எழுதியிருந்தால் சிறந்திருக்கும்.

உணமைத்தமிழனை மற்ந்துவிட்டீர்களோ என்று பார்த்தால், நல்ல வேளை கடைசியில் போட்டுவிட்டீர்கள். அவர்தான் பதிவுலகத்தில் நித்தியாக்கு பயங்கர சப்ப்போட்டு.

ஆமாம் டோண்டுவைக் காணேமா? நித்தியாவும் பெரியாரும் என்று எழுதியிருக்கிறார் படிக்கவில்லையா>

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
காவேரி கணேஷ் said...
ஜாக்கி சேகர் : ஆமா..கதவைத்திற..சக்கீலா வரட்டும்..இப்ப்படித்தான் கதவை ரொம்ப ஓவரா தொறந்து வைச்சிட்டீங்களோ..கேமிரா வந்திருச்சு..

விழுந்து விழுந்து சிரித்த வரிகள்.
4 March 2010 7:15 PM
////////////////////////////////
நன்றி காவேரி கணேஷ்..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
சங்கர் said...
நக்கல் இன்னும் கொஞ்சம் அதிகமா இருக்கலாம்
4 March 2010 7:30 PM
///////////////////////
ஏண்ணே..அடுத்த பதிவர் சந்திப்புல அடி வாங்கவா..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
2010 7:30 PM
மயில் said...
:)))))))))))))))))))))))))
4 March 2010 7:38 PM
/////////////////////////////
நன்றி மயில்..

அவிய்ங்க ராசா said...

/////////////////
Vijay Anand said...
Super appu...
Address sollunga sumo varum...
4 March 2010 7:43 PM
//////////////////
சுமோவா..எஸ்கேப்..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////
Anonymous said...
ராசாண்ணே, ரொம்ப நாளைக்கு பொறவு ட்ரே ட் மார்க் பதிவு.விழுந்து விழுந்து சிரிச்சதுல வயறு புண்ணா போச்சு...- பயபுள்ள.
4 March 2010 8:25 PM
////////////////
நன்றி பயபுள்ள..

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Veliyoorkaran said...
@@@வால்பையன் : பாரு டவுசர் கிழிஞ்சு போச்சு..டும்..டும்..டும்..//////

நித்யானந்தா நித்யானந்தா நித்யானந்தா நித்யானந்தா.........(இவ்ளோ காசு போட்டு ஆசிரமம் கட்டுனவன் பத்து ரூவா குடுத்து ஜட்டி வாங்கி போட்ருந்தா இந்த அவமானம் வந்துருக்குமா..யோசிங்க மக்களே...பயன்படுத்துங்கள் சுடர்மணி ஜட்டிகள்..பயன்படுத்தாதீர் லங்கோடுகள்...)..
//////////////////////////////
சுடர்மணி ஜட்டிகள்..எவ்வளவு கலர்ல இருக்குண்ணே?? வானவில் கலர் கிடைக்குமா..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////
ஜெய்லானி said...
நல்லா இருக்கு இன்னும் கொஞ்ஜம் கூட எழுதிருக்கலாம்.
4 March 2010 8:35 PM
//////////////////////
அடுத்த முறை கண்டிப்பாண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
;;)))))))
4 March 2010 8:47 PM
//////////////////////
நன்றி ஜீவன்..)

அவிய்ங்க ராசா said...

/////////////////////
Sachanaa said...
///வானம்பாடிகள் : ஏண்ணே..அவ்வளவு துல்லியமாவா கிராபிக்ஸ் பண்ணிருக்காயிங்க..ஒருவேளை அவதார் படத்துல ஒர்க் பண்ணின கிராபிக்ஸ் டீமா இருக்குமோ..

ஜாக்கிசேகர் : ஆனாலும் லைட்டிங்க் சரி இல்லைப்பா..கேமிராவை அந்தப் பக்கம் வைச்சு எடுத்துருக்கணும்,.,மறைக்குதுல்ல..ஹி..ஹி..//

hahahahha

superb
4 March 2010 8:59 PM
////////////////////////
நன்றி சச்சனா..))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
வானம்பாடிகள் said...
:))). அட சாமி சிரிக்க முடியல:)))
4 March 2010 9:03 PM
//////////////////////////
நன்றி வானம்பாடிகள்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////////////
..:: Mãstän ::.. said...
ஹஹஹஹ....

சூப்பரு ராசா.

<<<
நித்தியானந்த சுவாமிகள் காதில் சக்கீலா என்று விழ முகம் மலருகிறது
>>>
எப்படி இப்படி??? ஹஹ

<<<
ஏன் சார்..ரஞ்சிதா வரலை..
>>>
:D

<<<
பரிசல்காரன் : சுவாமி..சின்ன டவுட்..சன் டீ.வியில லைட் ஆப் ஆகிற வரைக்கும்தான் ஒளிபரப்புறாயிங்க….மீதி சி.டி உங்ககிட்ட இருக்கா..
>>>
உஸ்ஸ், அப்பாடி, எல்லார் மனசுலையும் இருந்த கேள்வியை கேட்டுடாருப்பா... :) ஆமா, மீதி சிடி எங்கே???
4 March 2010 9:06 PM
//////////////////
நன்றி மஸ்தான்..)

அவிய்ங்க ராசா said...

//////////////////////
2010 9:06 PM
ஜாக்கி சேகர் said...
போட்டு தாக்கு வர வர போட்டு தாக்கு...சிரிச்சி வயிறு புண்ணாகி போச்சி....ராசா
4 March 2010 9:07 PM
///////////////////////
நன்றி ஜாக்கி,,.

அவிய்ங்க ராசா said...

//////////////////
இவன் சிவன் said...
semma lanthu thalaiva
4 March 2010 9:19 PM
/////////////////

நன்றி இவன்சிவன்..)

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
Vels said...
கலக்கல். சூப்பர். ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பிராண்ட் பதிவு.
4 March 2010 9:34 PM
////////////////////////
நன்றி வரதராஜூலு..)

அவிய்ங்க ராசா said...

நன்றி முருகன், மோகன்,எல்.கே,கலீல்,சுரேஷ், அதிஷா..யோகன்,கேபிள்,அனாய்,அனு..துவாரகன்..அனானி..

Balamurali A said...

arumai

Kiruthigan said...

சன் டிவிய விட உங்க டர்சர் ஜாஸ்தி போலிருக்கே..

Post a Comment