Sunday 4 October, 2009

அணு அளவும் நாசமா போங்கடே

போன வாரம் நண்பரின் மகளுக்கு பிறந்தநாள். அப்போது செல்ல முடியாததால், நேற்று அவர் வீட்டிற்கு கிப்ட் எடுத்துக் கொண்டு சென்றேன்..நண்பரின் மகள் பெயர் “ரேணு”. 8ஆம் வகுப்பு படிக்கும் வயதில் உள்ளவர்..அன்போடு வரவேற்கப்பட்டு இருக்கையில் அமர்ந்தேன்..

“ரேணு எங்க..கிப்ட் கொடுக்கனுமே..”

“அவ..கொல்லைப்புறத்துல இருக்கா..”

“கொஞ்சம் கூப்பிடுங்களேன்..அவ கையிலே கிப்ட் கொடுத்துருவோம்..”

“அய்யோ..இப்ப கூப்பிட்டா அவ வரமாட்டாளே…நாமளே போயிருவோம்..”

எனக்கு வியப்பாக இருந்தது..சரி, புள்ள பரிட்சைக்கு படிக்குது..டிஸ்டர்ப் பண்ணாம போயி கொடுத்துருலாம்னு போனா, ஆத்தாடி..தூக்கி வாரிப் போட்டுருச்சுண்ணே..ஒரு பெரிய சுவர் மேல ஏறி நின்னுக்கிட்டு பேலன்ஸ் பண்ணி நடந்துக்கிட்டு இருக்குண்ணே..எனக்கு குலையே நடுங்கிப் போயிருச்சு..

“என்னண்ணே..புள்ளைய சர்க்கஸ்ல எதுவும் சேர்த்து விடப் போறீங்களா..”

“அத ஏம்பா கேக்குற..விஜய் டீ.வியில “அணு அளவும் பயமில்லை” ன்னு ஒரு ரியாலிட்டி ஷோ போடுறாயிங்கள்ள..அதைப் பார்த்த்தில இருந்தே இப்படித்தான்..ஏதாவது சுவர் இருந்தா ஏறி குதிக்கிறா..பல்லி, எலி, கரப்பான் பூச்சி இருந்தா, விரட்டி விரட்டி ஓடுறா..இவ இருக்குற பயத்துலயே ஒரு புழு பூச்சியும் வர மாட்டிங்குது..இப்ப பிஸ்கட் வாங்கித்தர சொல்ற மாதிரி பாம்பு வாங்கித்தரனும்னு அடம்புடிக்கிறா..ஏம்பா, உங்க வீட்டுல ஏதாவது பாம்பு இருந்தா சொல்லுப்பா..தண்ணிப்பாம்பா இருந்தாலும் அட்ஜட் பண்ணிக்கலாம்..ஏதாவது கேட்டா “அணு அளவும் பயமில்லைன்னு கட்டை விரலை உயர்த்திக் காட்டுறா..ஏம்பா, ஏதாவது டாக்டர்கிட்ட காட்டலாம்”

“அடப்பாவி..இந்த வியாதிக்கு பேரு “ரியாலிட்டி ஷோ”போபியா…இது டாக்டர்கிட்ட காட்டினா சுகமாகாது..வீட்டுல டீ.வியா..லேப்டாப்பா??..”

“டி.வி இருக்கு..”

“ரெண்டு மாசத்துக்கு ஆன் பண்ணாதே..முக்கியமா விஜய் டீ.வியை கட் பண்ணு..பாதி சுகமாகிடுவா..”

“ஹூம்..என்ன பண்றது..நல்லா படிக்கிற பொண்ணு..எல்லா நாலேஜ்ஜூம் இருக்கு..தினமும் எல்லா இ-பேப்பரும் படிக்கிறா..எல்லா அரசியல் நிகழ்ச்சிகளும் இவளுக்கு அத்துப்படி….ஐ.ஏ.எஸ் படிக்கனும்னு மூச்சுக்கு மூனு தடவை சொல்லுறா…ஆனால் இந்த விஜய் டீ.வி பார்த்துதான் கொஞ்ச நாளா இப்படி..நீ வேனுன்னா கொஞ்சம் கூப்பிட்டு அறிவுரை சொல்லேன்..”

“அறிவுரைதானே..கண்டிப்பா..எத்தனை பேருக்கு சொல்லி இருக்கோம்….காசே கொடுக்காம கொடுக்குறது இது ஒன்னுதானய்யா..கூப்பிடு..”

“ரேணு..இங்க வா..இங்க வந்து யாரு வந்துருக்கான்னு பாரு..பக்கத்து வீட்டு அங்கிள் வந்து இருக்காரு..”

“பக்கத்து வீட்டு அங்கிளா..யாரு டாடி..அண்டங்காக்காவுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி ஒருத்தர் இருப்பாரே..அவரா…”

கிரகம் புடிச்சதுங்க..சின்னக் குழந்தைக்கு எப்படில்லாம் சொல்லிக் கொடுத்துருக்காயிங்க பாருங்கண்ணே..

“அங்கிள அப்படி எல்லாம் சொல்லக்கூடாதும்மா..ஓடியா..”

ரேணு துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்..என்னைப் பார்த்துமே..

“அங்கிள் அணு அளவும் பயமில்லை..”

“வாம்மா..ரேணு..பிலேட்டட் ஹேப்பி பர்த்டே..இந்தா கிப்ட்..அதென்ன அனு அளவும் பயமில்லை..”

“அது அங்கிள்..இந்த ஆம்பிளைங்க எல்லாம் எங்களை கொடுமைப்படுத்துறாயிங்களா..அவிங்களை எல்லாம் எப்படி சமாளிக்கனும்னு எங்க அனு ஆண்டி சொல்லிக் கொடுத்து இருக்காங்க..”

“ரேணும்மா..அப்படி எல்லாம் தப்பா சொல்லக் கூடாதும்மா….அனு ஆண்டி எல்லாத்தையும் ஏத்தி விடுறாங்களே..ஒரு நாளாவது அந்தம்மா எதுலயாவது கலந்துகிட்டாங்களா..அதெல்லாம் ரியாலிட்டி ஷோ வுக்குதாதாம்மா..நல்லா பார்த்தேன்னா..அதுல கலந்துக்கிட்டவுங்க யாராவது அழுதா, நல்லா கேமிராவை பக்கத்துல கொண்டு வந்து “நல்லா அழுவுங்க..இன்னும் நல்லா பீல் பண்ணி அழுவுங்க..” ன்னுதான் சொல்லுவாங்க..நல்லா அழுவ அழுவதான் டீ.ஆர்.பி ரேட்டிங்க் கூடும்..”

“நீங்க..சும்மா சொல்லுறீங்க அங்கிள்..எல்லாம் எங்க நல்லதுக்குதான்..அதில்லாம உங்களுக்கும் உபயோகமா இருக்கும்..”

“என்னது..எனக்கு என்ன உபயோகம்..”

“ஆமா..வீட்டுல ஆண்ட்டி அடிக்கிறப்ப..அப்படியே சுவர் ஏறி குதிச்சு ஓடிப் போயிடலாம்ல..”

எனக்கு தூக்கி வாரி போட்டதுண்ணே..எங்க வீட்டுல நடக்குறதெல்லாம் எப்படி லீக் ஆகுதுன்னு தெரியலண்ணே..ஆஹா..இப்படியே விட்டா நம்ம பொழைப்பே நாறிப் போயிருமுன்னு டாபிக்கை மாத்தினேன்..

“ஆமா..நீ டெய்லி நியூஸ் பேப்பர் படிப்பேன்னு அப்பா சொன்னாங்க..வெரிகுட்..எங்க சொல்லு பார்ப்போம்..ஈழத்துல என்ன நடக்குது…”

“அத விடுங்க அங்கிள்..எனக்கு தமிழக அரசுமேல கோவம்..”

எனக்கு பயமா போச்சுண்ணே..

“என்னமா சொல்லுற..”

“பின்ன என்ன அங்கிள்..சினிமாவுல இருக்குர எல்லாத்துக்கும் ஒவ்வொரு அவார்ட் கொடுத்து இருக்காங்க..எனக்கு பிடிச்ச நடிகர் “போண்டா மணி..” வடிவேல்கிட்ட எப்படி அடிவாங்கிறாரு தெரியுமா..அவருக்கு இந்த வருசத்துக்கு சிறந்த நடிகர் கொடுக்கலாமில்ல..ஏன் அங்கிள் கொடுக்கல..அட்லீஸ்ட் ஒரு கலைமாமணி…”

“எனக்கு தெரியலையேம்மா.. ஒருவேளை அடுத்த வருசம் நடிகை புவனேஸ்வரிக்கு கலைமாமணி கொடுக்கறப்ப அவருக்கும் கிடைக்கலாம்..”

“நம்ம வேணா, போண்டா மணி சாருக்கு போன் பண்ணி, கலைஞர் தாத்தாவை புகழ்ந்து ஒரு கவிதை எழுத சொல்லாமா அங்கிள்..”

அடக்கொடுமையே..இது குழந்தை இல்லண்ணே..வீட்டுக்கு ஆட்டோ அனுப்புறதுக்கு இதுவே மீட்டர் மேல காசு கொடுக்கும் போலயே..இடத்தக் காலி பண்றதுதான் பெட்டர்ன்னு நினைச்சு எழும்ப முயற்சி பண்ணினேன்..அடுத்த குண்டைப் போட்டுச்சுண்ணே..

“அங்கிள்..கமல் ஒரு கடவுளா..”

“ஆத்தாடி..அப்படியெல்லாம் இல்லையேம்மா..”

“பின்ன ஏன் அங்கிள்..விஜய் டீ.வியில கோபி அங்கிள் கமல் ஒரு சரித்திரம்..வரலாறு, புவியியல், பூகோளம்..புத்தகம்..கடவுள்..உதாரண புருசன்” னு சொல்லுறாரு..அதுவும் கமல் அங்கிளுக்கு முன்னாடியே..கமல் அங்கிளுக்கு கூச்சமா இருக்காதா..”

“தெரியலையேம்மா..வீட்டுல ஏதோ குக்கர் சத்தம் கேட்குது..நான் வேணா அப்புறம் வரட்டா..”

“இருங்க அங்கிள்..என் கேள்விக்கு பதில் சொல்லுங்க..அப்புறம்..கமல் அங்கிளோட பேட்டி காணுறப்ப..ஒரு பொண்ணு..”கமலைப் பார்த்தது நான் செய்த பாக்கியம்” ன்னு கட்டிப்பிடிச்சு அழுகுது..அவரும் நல்லா அழுவுறாரு..இதுல கோபி அங்கிள் வேற..நல்லா அழுவுங்க..கேமிராமேன்..நல்லா போகஸ் பண்ணுங்க சொல்லாத குறைதான்..ஏன் அங்கிள் மூச்சுக்கு மூணு தடவை, கமல் அங்கிள்., “என் ரசிகர்கள் வித்தியாசமானவங்க” ன்னு சொல்லுறாரு..இதுதான் வித்தியாசமா..தனிமனித ஆராதனை இல்லையா..கமல் அங்கயே அந்தப் பொண்ண கண்டிச்சுருக்க வேணாம்மா..போங்க அங்கிள் என்ன பகுத்தறிவு..”

“தாயே..பகுத்தறிவு குழந்தையே….தெரியாம உங்கிட்ட வாயைக் கொடுத்துட்டேன் சாமி..நான் கிளம்புறேன்..”

“இருங்க அங்கிள்..நானும் பிளாக் எழுதப்போறேன்..என்ன பெயர் வைக்கலாம்..”

“ரேணும்மா..வேணாம்மா..அது ரத்த பூமி..காலை வைச்சுடாதேம்மா..உனக்கு பதிவுலகம் பத்தி என்ன தெரியும்..”

“போலி..”

“அட..உனக்கு அவ்வளவு தெரியுமா..”

“இல்ல அங்கிள்..அம்மா “போலி” செஞ்சு வைச்சிருக்காங்க..சாப்பிட்டுதான் போகனும்னு சொல்ல வந்தேன்..”

“தாயே..நீ சாப்பிடுற போளியை சொன்னயா..நான் கூட வேறு ஏதோன்னு நினைச்சுட்டேன்..நல்லா நாக்கை மடக்கி “போளி” ன்னு சொல்லனும்மா..நுனி நாக்கில “போலி” ன்னு சொல்லி டெர்ரராக்க கூடாது..”

“ஏன்..அங்கிள்..எதுவும் பிரச்சனையா..”

ஆஹா..இது வீட்டிக்கு ஆட்டோ இல்லை..ஹெலிகாப்டர் அனுப்புற மேட்டராச்சே..இதுக்கு மேல முடியாதுடா சாமின்னு வாசல் படியை நோக்கி ஓடுனேன்னே..

“அங்கிள் ..பொறுங்க..இதை வாங்கிட்டுப் போங்க..”

சரி..குழந்தை ஏதோ ஆசையா கூப்பிடிதுன்னு பக்கத்துல போனேன்னே.,..

“அணு அளவும் பயமில்லை” ன்னு சொல்லிக்கிட்டே..கைய நல்லா மடக்கி வயித்துல ஒரு குத்து குத்துச்சு பாருங்கண்ணே..காலையில சாப்பிட்ட புரோட்டா தொண்டை வரைக்கும் வந்திருச்சுண்ணே..அப்படியே கதவைப் புடிச்சுக்கிட்டு தாவி தாவி வீடு வரைக்கும் வந்து வீட்டு வாசலுக்கு வர்றேன்..டீ.வில ஒடுது..”

“டாடா..டோ.கோ,மோ..அணு அளவும் பயமில்லை..”

"ங்கொக்காமக்கா..அணு அளவும் நாசாம போங்கடே..

33 comments:

சின்னப் பையன் said...

:-))))

முதல்முறையா அந்த நிகழ்ச்சிய போன வெள்ளிதான் பாத்தேன்... எகொஇச!!!... ஒரு பாப்பா, தண்ணிக்குள்ள பூட்டை திறக்க கஷ்டப்படுது... வெளியேயிருந்து தவளை, பாம்பெல்லாம் போடுறாங்கண்ணே!!! உவ்வே!!!

Anonymous said...

ஆகமொத்தம் உங்க ஊர்ப்பக்கம் விஜய் டீ.வி. தெரியுது. எங்க ஊர்ப்பக்கம் தெரியமாட்டேங்குது. அதனால நாங்கெல்லாம் தப்பிச்சோம்.

vasu balaji said...

எங்க காணோமேன்னு பார்த்தேன். இப்புடியா கலக்குறது? அதெப்புடிதான் இப்புடி எழுதுவீங்களோ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

என்ன கொடுமை ராசா.. நம்மூட்டுக் கேபிள்ல விஜய் டிவியே வர்றதில்லை. ஆனா, இந்த ரியாலிட்டிக்காரனுக தொல்லை தாங்க முடியலப்பா..

இன்னும் கொஞ்ச நாள்ல செட்ல காளை அடக்குனாலும் அடக்குவானுக :)

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே அண்டக்காக்கா மேட்டருக்கு வி.வி.சிரிச்சேண்ணே :)

☀நான் ஆதவன்☀ said...

//இன்னும் கொஞ்ச நாள்ல செட்ல காளை அடக்குனாலும் அடக்குவானுக :)//

ஆமா மூக்கணாங்கயிறோட :) அதையும் பார்க்க நம்ம மக்கள் ரெடியா தான் இருக்காங்க :)

taaru said...

ஏற்கனவே கல்யாணம் வரைக்கும் போயிட்டாய்ங்க...
கா[லைல]ளை அடக்குறதா?... இதோ கோபி அங்கிளுக்கு கால போட வேண்டி தான்.
பதிவுலகம் பக்கம் வந்தா பல மேட்டர் சிக்கும் போல.. விஜய் டிவி நோட் பண்ணுங்கப்பா?!!

taaru said...

//நீ வேனுன்னா கொஞ்சம் கூப்பிட்டு அறிவுரை சொல்லேன்..//
உஸ்ஸ்ஸ் யப்பா... இந்த வாத்தியார் வேல பாத்துட்டு வந்தாலே. இப்புடி தான்.. அறிவுரை சொல்லு.. முன்னுரை சொல்லு நன்றியுரை சொல்லுன்னு.. நான் என்ன court ஆ?? இல்ல வக்கீலா...??
சும்மா நொச்சு நொச்சுன்னு.. ஒரே குஷ்டமப்பா..

//அண்டங்காக்கா matter //
//சின்னக் குழந்தைக்கு எப்படில்லாம் சொல்லிக் கொடுத்துருக்காயிங்க பாருங்கண்ணே..//
குழந்தைங்க எப்பவும் உண்மை தாண்ணே பேசும்.. யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்ல..

taaru said...

//ஈழத்துல என்ன நடக்குது…”
“அத விடுங்க அங்கிள்..எனக்கு தமிழக அரசுமேல கோவம்.."//
இந்த கேள்விக்கு எங்க பதில் சொல்லிட போகுதோன்னு நினச்சேன்.. நல்ல தமிழ் பொண்ணுன்னு prove பண்ணிடுச்சு கொழந்தே..!!

தினேஷ் said...

இவங்க கொலவெறி தாங்க முடியல..

ஈரோடு கதிர் said...

நா வேணா ஒரு போளி அவிங்க ஆரம்பிக்கட்டுமா

ஏன்னா.. எனக்கு அணு அளவும் பயமில்லை..

அட... போலி அவிங்க இல்லீங்க போளி...போளி அவிங்க .... அவிங்க எப்படி போளி சுடறாங்கனுதான்

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்ல பகிர்வு

தமிழ் நாடன் said...

என்ன கண்றாவி ரியாலிட்டி ஷோக்களோ!

shabi said...

அவங்கதான் இதெல்லாம் வீட்டுல பண்ணக்கூடாதுண்ணு போடுறாங்கள்ல பின்ன ஏன் குய்யோ முய்யோன்னு பதிவு போடுறீங்க

இவன் சிவன் said...

அது ஏன் விஜய் டிவி ய வே டார்கெட் பண்றீங்க அண்ணாச்சி?? உங்க வீட்ல வேற எதுவும் TV தெரியாதா?? கமல் நிகழ்ச்சி நல்லா தான் இருந்ததுன்னு நான் நெனைக்குறேன் ,அப்டி ஒன்னும் 'stunt' மாதிரி தெரில தலைவா..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
ச்சின்னப் பையன் said...
:-))))

முதல்முறையா அந்த நிகழ்ச்சிய போன வெள்ளிதான் பாத்தேன்... எகொஇச!!!... ஒரு பாப்பா, தண்ணிக்குள்ள பூட்டை திறக்க கஷ்டப்படுது... வெளியேயிருந்து தவளை, பாம்பெல்லாம் போடுறாங்கண்ணே!!! உவ்வே!!!
4 October, 2009 7:09 PM
//////////////////////
ஆமாண்ணே..ரெண்டு நாளா சாப்பாடு இரங்கலை..))

அவிய்ங்க ராசா said...

///////////////////
er, 2009 7:09 PM
சின்ன அம்மிணி said...
ஆகமொத்தம் உங்க ஊர்ப்பக்கம் விஜய் டீ.வி. தெரியுது. எங்க ஊர்ப்பக்கம் தெரியமாட்டேங்குது. அதனால நாங்கெல்லாம் தப்பிச்சோம்
//////////////////
தப்பிச்சீங்க அம்மணி..))

அவிய்ங்க ராசா said...

//////////////////
r, 2009 7:16 PM
வானம்பாடிகள் said...
எங்க காணோமேன்னு பார்த்தேன். இப்புடியா கலக்குறது? அதெப்புடிதான் இப்புடி எழுதுவீங்களோ?
4 October, 2009 8:51 PM
//////////////////
நன்றி அண்ணே..உங்க அன்மைய பதிவு சூப்பர்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
r, 2009 8:51 PM
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
என்ன கொடுமை ராசா.. நம்மூட்டுக் கேபிள்ல விஜய் டிவியே வர்றதில்லை. ஆனா, இந்த ரியாலிட்டிக்காரனுக தொல்லை தாங்க முடியலப்பா..

இன்னும் கொஞ்ச நாள்ல செட்ல காளை அடக்குனாலும் அடக்குவானுக :)
4 October, 2009 9:13 PM
///////////////////
ஹா..ஹா..ஜல்லிக்கட்டைத் தடை பண்ணினாலும், இவிங்க அலும்பு பண்ணுவாயிங்கண்ணே..))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
☀நான் ஆதவன்☀ said...
//இன்னும் கொஞ்ச நாள்ல செட்ல காளை அடக்குனாலும் அடக்குவானுக :)//

ஆமா மூக்கணாங்கயிறோட :) அதையும் பார்க்க நம்ம மக்கள் ரெடியா தான் இருக்காங்க :)
4 October, 2009 9:19 PM
////////////////////
ஆமாண்ணே..சினிமாவைப் பார்த்து நம்பி ஏமாந்து ஓட்டு போடுறவங்கதானே நம்மெல்லாம்..(((

அவிய்ங்க ராசா said...

////////////////////////
r, 2009 9:19 PM
taaru said...
ஏற்கனவே கல்யாணம் வரைக்கும் போயிட்டாய்ங்க...
கா[லைல]ளை அடக்குறதா?... இதோ கோபி அங்கிளுக்கு கால போட வேண்டி தான்.
பதிவுலகம் பக்கம் வந்தா பல மேட்டர் சிக்கும் போல.. விஜய் டிவி நோட் பண்ணுங்கப்பா?!!
4 October, 2009 9:34 PM
/////////////////////
வாங்க அய்யனாரே..)

அவிய்ங்க ராசா said...

///////////////////////
taaru said...
//நீ வேனுன்னா கொஞ்சம் கூப்பிட்டு அறிவுரை சொல்லேன்..//
உஸ்ஸ்ஸ் யப்பா... இந்த வாத்தியார் வேல பாத்துட்டு வந்தாலே. இப்புடி தான்.. அறிவுரை சொல்லு.. முன்னுரை சொல்லு நன்றியுரை சொல்லுன்னு.. நான் என்ன court ஆ?? இல்ல வக்கீலா...??
சும்மா நொச்சு நொச்சுன்னு.. ஒரே குஷ்டமப்பா..

//அண்டங்காக்கா matter //
//சின்னக் குழந்தைக்கு எப்படில்லாம் சொல்லிக் கொடுத்துருக்காயிங்க பாருங்கண்ணே..//
குழந்தைங்க எப்பவும் உண்மை தாண்ணே பேசும்.. யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்ல..
/////////////////////
ஹி..ஹி..உண்மையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது..ஆமா..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
, 2009 9:54 PM
taaru said...
//ஈழத்துல என்ன நடக்குது…”
“அத விடுங்க அங்கிள்..எனக்கு தமிழக அரசுமேல கோவம்.."//
இந்த கேள்விக்கு எங்க பதில் சொல்லிட போகுதோன்னு நினச்சேன்.. நல்ல தமிழ் பொண்ணுன்னு prove பண்ணிடுச்சு கொழந்தே..!!
4 October, 2009 9:55 PM
///////////////////
நிறைய குழந்தைங்க ஈழம்னா என்னன்னு கேக்குதுண்ணே..((

அவிய்ங்க ராசா said...

/////////////////
சூரியன் said...
இவங்க கொலவெறி தாங்க முடியல..
4 October, 2009 10:09 PM
///////////////////
ஆமாண்ணே..டெய்லி நித்திய கண்டம் பூரண ஆயுசா இருக்குண்ணே..)))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
r, 2009 10:09 PM
கதிர் - ஈரோடு said...
நா வேணா ஒரு போளி அவிங்க ஆரம்பிக்கட்டுமா

ஏன்னா.. எனக்கு அணு அளவும் பயமில்லை..

அட... போலி அவிங்க இல்லீங்க போளி...போளி அவிங்க .... அவிங்க எப்படி போளி சுடறாங்கனுதான்
4 October, 2009 11:40 PM
///////////////////////
இன்னொரு போளி..சீ..போலியா..நாடு தாங்காதுண்ணே..))

அவிய்ங்க ராசா said...

///////////////////
ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நல்ல பகிர்வு
4 October, 2009 11:51 PM
//////////////////
நன்றிண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////
தமிழ் நாடன் said...
என்ன கண்றாவி ரியாலிட்டி ஷோக்களோ!
4 October, 2009 11:55 PM
/////////////////////
ஹூம்..வருத்தமாத்தாண்ணே..இருக்கு..

அவிய்ங்க ராசா said...

/////////////////
shabi said...
அவங்கதான் இதெல்லாம் வீட்டுல பண்ணக்கூடாதுண்ணு போடுறாங்கள்ல பின்ன ஏன் குய்யோ முய்யோன்னு பதிவு போடுறீங்க
5 October, 2009 12:12 AM
///////////////
எது..”குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” ன்னு வாசிக்கவே முடியாத மாதிரி பாட்டில் மேலே எழுதியிருப்பாங்களே..அதுமாதிரியா..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
, 2009 12:12 AM
இவன் சிவன் said...
அது ஏன் விஜய் டிவி ய வே டார்கெட் பண்றீங்க அண்ணாச்சி?? உங்க வீட்ல வேற எதுவும் TV தெரியாதா?? கமல் நிகழ்ச்சி நல்லா தான் இருந்ததுன்னு நான் நெனைக்குறேன் ,அப்டி ஒன்னும் 'stunt' மாதிரி தெரில தலைவா..
5 October, 2009 4:35 PM
/////////////////////////
விஜய் டீ.விதான் இது மாதிரி நிறைய பண்றாயிங்கண்ணே..அதான்..

அப்புறம் கமல் ஷோவுக்கு யாரையாவது உண்மையான விமர்சகர்களை கூப்பிட்டாயிங்களா..எல்லாம் ரசிகர் மன்ற தலைவர்கள் மாதிரி ஷோ இல்லையாண்ணே.. ஷோவில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள்..

1) எப்படி சார் நீங்க மட்டும் இப்படி திங்க் பண்றீங்க..
2) எப்படி சார் இன்னும் இளமையா இருக்கீங்க..

போரடிக்கலை..????

துபாய் ராஜா said...

நல்லவேளைண்ணே நாங்கெல்லாம் தமிழ்சேனல்லாம் தெரியாத இடத்துல சேஃபா இருக்கோம்.....

kanavugalkalam said...

SUPER UNCLE...

payapulla said...

அட்டகாசமான flow ராசா. அதுவும் அந்த குக்கர் மேட்டரில் நான் வி.வி.சிரிச்சேன். -பயபுள்ள.

அவிய்ங்க ராசா said...

//////////////////////
er, 2009 6:50 PM
துபாய் ராஜா said...
நல்லவேளைண்ணே நாங்கெல்லாம் தமிழ்சேனல்லாம் தெரியாத இடத்துல சேஃபா இருக்கோம்.....
7 October, 2009 12:09 AM
kanavugalkalam said...
SUPER UNCLE...
7 October, 2009 1:25 AM
paya said...
அட்டகாசமான flow ராசா. அதுவும் அந்த குக்கர் மேட்டரில் நான் வி.வி.சிரிச்சேன். -பயபுள்ள.
//////////////////
நன்றி ராஜா..கனவுலகம்..பயபுள்ள..

Post a Comment