Sunday 11 December, 2011

ஒஸ்தி – ஒலகத்திரைப்பட விமர்சனம்




நான் பொதுவா, ஒலகத்திரைப்படமெல்லாம் பார்க்குறதில்லைண்ணே..கழுதை, அத யாருண்ணே, பொறுமையாக  உக்கார்ந்து பார்க்குறது. அவிங்க ஒன்னுக்கு போறதையே , ஒன்றரை மணிநேரம் காமிப்பாய்ங்க..அதுக்கெல்லாம் பொறுமை பத்தாதுண்ணே..நேத்துதான் கோவாலு தமிழுல சிம்பு நடிச்சஒஸ்தின்னு ஒரு ஒலகத்திரைப்படம் வந்துருக்கதான்னு சொன்னான்..

நமக்கு சிம்பு படம் பார்க்குறதுன்னாலே, அவரு மாதிரியே விரலு நடுக்கமுண்ணே..ஏதோ, “விண்.தா.வருவாயா”, “வானம்மாதிரி நடிச்சதுதானலே, நம்பிக்கையா போனேன்ணே..அதுவுமில்லாம, “குருவிங்கிற மாபெரும் ஒலகத்திரைப்படத்தை இயக்கிட்டு, ஒன்னுமே தெரியாம, அமைதியாக இருக்கிற ஒலகப்படத்தை இயக்கிய தரணி இயக்குரான்னு தெரிஞ்சவுடனே, என்னோட நம்பிக்கை டபுள் மடங்காச்சுண்ணே..

பவர்ஸ்டார், சாம் ஆண்டர்சன் மேல சத்தியமா சொல்லுறேண்ணே..நம்பிக்கை வீண் போகல..பல ஒலகத்திரைப்படங்களின் இலக்கண விதிகளை அநாயசமா மீறியிருக்குண்ணே, இந்தப் படம். இந்த படம் அடையப்போற உயரத்தை நினைச்சா, அந்த எல்..சி டவருக்கே(அடச்சே, உலகத்தரமுல்ல)..அது..வந்து..ஆங்க்..அந்த ஈபிள் டவரே கூச்சப்படப்போகுதுண்ணே..

ங்கொய்யாலே, அப்படி என்னடா உலகத்தரத்தை மீறியிருக்குதுன்னு கேக்குறீங்களாபேனா, பேப்பரை எடுத்து நோட் பண்ணிக்கீங்க.

இதுவரைக்கு சிம்பு நடிச்ச ஒலகத்திரைபடம் எல்லாத்துலயும், விரலை ஆட்டி, ஆட்டிதான் நடிச்சுருக்காப்ல..ஆனா, இந்த படத்துல, மொத்த ஒடம்பையும், டோட்டலா ஆட்டு, ஆட்டுன்னு ஆட்டுறாருன்னே. இதுதாண்ணே, முத இலக்கண மீறல்

இரண்டாவது, ஹீரோ கேரக்டரைசன்ணே..25 வயசு பயபுள்ள, இன்ஸ்பெக்டராக முடியுமா….அப்படின்னெல்லாம் கேட்கக்கூடாதுங்குறதுல டைரக்டர் கவனமா, கவனம் செலுத்தி, சிம்புக்கு 6 பேக்ஸ் வரவைச்சு அதை நியாயப்படுத்துராருண்ணே..சூர்யா, விக்ரம் போன்ற ஒலகநடிகரெல்லாம் இனிமேல் போலீசா நடிச்சா, இதைத்தான் இனிமேல் ரெபரன்ஸ் பண்ணனும் என்கிறதே, இலக்கணமீறல் தானே.

                             

திருநெல்வேலிகாரய்ங்க கூட அம்புட்டுலேபோட்டுருக்க மாட்டாய்ங்கண்ணே..படம் புல்லாலேபோட்டு ஒரு சாதனை புரிஞ்சுருக்காய்ங்கண்ணே..நல்லா பானிபூரி விக்குறவன் மாதிரி இருக்குற வில்லன திருநெல்வேலி பாஷையிலலேபோடவைச்சு, இன்னொரு இலக்கணமீறல் நடத்தியிருக்காருண்ணே இயக்குநர். ஆனாலும் ஒரு குறைண்ணே..படப்பெயரைஒஸ்திலேஅப்படின்னு மாத்தியிருந்தா, இன்னொரு இலக்கண மீறலா இருந்துருக்கும்

அடுத்ததுதாண்ணே, பெரிய இலக்கண மீறல். எல்லா ஒலகப்படத்திலயும் யதார்த்தத்தை காண்பிக்கிறேன்னுக்கிட்டு, கதாநாயகியை எண்ணை வடிஞ்ச மாதிரி அசிங்கமா காண்பிச்சிருக்காயிங்கண்ணேகடுப்பு கடுப்பா வரும். இதை மீறுரமாதிரி, நம்ம இயக்குநர், மண்பானைத்தொழில் செய்யுற ஹீரோயின் ரிச்சாவை செமரிச்சாகாமிச்சிருக்காருண்ணே..எப்ப பார்த்தாலும் அழகா, வடநாட்டுக்கார பொண்ணு மாதிரி, அழகா, மேக்கப் போட்டு, மஸ்காரா போட்டு, கண் மை இட்டு, கிராமத்துல தொப்புளை காட்டிக்கிட்டு வர்ற மாதிரி பண்ணி, இலக்கண விதிகளை எல்லாம்டமார்”, “டமார்ன்னு தெருவுல போட்டு உடைச்சிருக்காருண்ணே..அதுவும் பாடல் காட்சியில வெளிக்கி வர்ற மாதிரி சிம்பு டான்ஸ் ஆடுற பார்த்துக்கிட்டு, கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டு , கைய கால ஆட்டாம, ஒரு மூவ்மெண்ட்ஸ் கொடுக்காம, அப்படியே ரசிக்குறாங்க பாருங்க..க்ளாஸ்ணே..ஒலகத்தரம்கிராமத்துல ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற பொண்ணு இடுப்புல சின்ன சைஸ் தங்க சங்கிலி போட்டுவிட்டதுதாண்ணே, பின்நவீனத்துவ இலக்கணமீறல்


இதுவரைக்கும்சுள்ளான்படம்தான் ஒலகத்திரைப்படத்துலயே டாப்புன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், இதெல்லாம் அதுக்குமேலண்ணே..டாம் க்ரூசு கூட இப்படியெல்லாம் பைட் பண்ண முடியாதுண்ணே..போலிஸ் ஜீப்பு மேல அப்படியே தாவி, அப்படியே ஏருலயே பறந்து, அதே நேரத்துல, இரண்டு கையில இருக்குற துப்பாக்கிய எடுத்து, இரண்டு வில்லனை அட் டையத்துல சுட்டு..யப்பாடி..கார்கில் போர் நடக்குறப்ப, சிம்புவை விட்டிருந்தா, இம்புட்டு சேதாரம் நடந்துருக்காதுண்ணே..ங்ங்கொன்னியா, பீரங்கிலாம், பீர்க்கங்காய் மாதிரி, தூக்கி எறிஞ்சுருப்பாருண்ணே. பெரும் இலக்கண மீறல் நடந்துருக்குண்ணே..

இம்புட்டு இலக்கண மீறலை பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத சின்னப்புள்ள மாதிரி, கடைசி காட்சியில ஹீரோவுக்கு சிக்கன் ஊட்டுற இயக்குநரைப் பார்த்ததுமே, எம்புட்டு அழுகாச்சியா வந்துச்சு தெரியுமாண்ணே..ங்கொய்யாலே, அப்படியே தெருவுக்கு போயி நானுமொரு இலக்கண மீறல் பண்ணனும்னு அம்புட்டு ஆசைண்ணே

அது சரிபடத்துல இலக்கண மீறலே இல்லாத காட்சிகள் எதுவுமே இல்லையாண்ணு கேட்டா..இருக்கு..சந்தானம் நகைச்சுவை காட்சிகள், நாசரை சிம்பு ஆஸ்பத்திரியில் மீட் பண்ணும் காட்சிகள், தமனின் இசையில் சில பாடல்கள். அவ்வப்போது ரசிக்கவைக்கும், சிம்புவின் குறும்புகள், ஜித்தன் ரமேஷின் ஆச்சர்யபடவைக்கும் நடிப்பு அப்படின்னு சில..

ஆனாலும் இத்தனையும் மீறி, ஒரு ஒலகப்படத்தை கொடுத்துட்டு, சிம்பு அப்பா, எவ்வளவு தன்னடக்கமா, “டே நாங்கல்லாம் யாரு தெரியுமா..அந்த காலத்துல டம்ஜிக்கு..டம்ஜிக்கு…சடாங்க்..சடாங்க்க்..என்னையெல்லாம் ஆப்பிரிக்கா காட்டுல கொண்டு விட்டாகூட ம்யீசிக் பண்ணுவேன்னு…” டி.வியில பேசுறதுதாண்ணே…இவ்வளவு தன்னடக்கம்தாண்ணே, இலக்கண மீறலோ, இலக்கணமீறல்..

கடைசியா, இந்த படத்தை எதுலயாவது வகைப்படுத்தலைன்னா, என்னை ஒலகத்திரைப்பட விமர்சகர்ன்னு ஏத்துக்குற மாட்டீங்கறதுன்னாலே, இந்தப்படம்….

“ஒலகத்திரைப்படங்களுக்கெல்லாம் ஒலகத்திரைப்படம்..மெகா ஒலகத்திரைப்படம்..”
 

15 comments:

Anonymous said...

lol...

Anonymous said...

Oru padathium vidrathilla pola....--- S

sweet said...
This comment has been removed by the author.
sweet said...

logic illa cinema theriyaadha kabodhi edhukku parkka pona

potthikkittu irukka vendiyadhu thaane

sweet said...

i am not male... girl thaaan... i like simbu & surya

அவிய்ங்க ராசா said...

Thanks Anony for your comments

Thanks S for your comments

Thanks Sweet for your comments

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் அறிவுகண்ணை திறந்துட்டீங்க பாஸ்

குறை ஒன்றும் இல்லை !!! said...

25 வயசுல ஆகலாமே :) 21 வயசுல டிகிரி முடிப்பது சாதாரணம் பிறகு ஐபிஎஸ் அதிகாரியா கூட வர முடியுமே ?

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆனா இவன் படம் எதையும் விதவ கூட பார்த்ததில்லே நான் :)

CS. Mohan Kumar said...

செம ரைட்டிங் நன்கு சிரித்தேன்

kathalan said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
25 வயசுல ஆகலாமே :) 21 வயசுல டிகிரி முடிப்பது சாதாரணம் பிறகு ஐபிஎஸ் அதிகாரியா கூட வர முடியுமே? .........

ஐபிஎஸ் அதிகாரியா வரலாம். கலெக்டரா வரலாம். ஆனா Inspector-ஆ வரமுடியாது.

R said...

Chance illa.. Kalakal.. Sirichi vayiru valichi pochinne... Nalla eluthureegane.. Mudila... :) Antha pakki avlo arumayava nadichirukan.. ?? Hahaha...

sudarshan said...

nalla comment pannura rasa... un alamaplukku oru alave illama poituthu...analum simbu nallathan nadichirukkiraru?

Sudarshan

Anonymous said...

:)

chennaiboys said...

mudhall S.I APPURAM THAAN INSPECTOR AAGA MUDIYUM.ADHUVAM 10 YESRS SERVICE PANNANUM

Post a Comment