Tuesday 20 September, 2011

எங்கேயும், எப்போதும் திரைப்படம் – டைரக்டரு நின்னுட்டாண்ணே.


நெடுநாளைக்கு அப்புறம், ஒரு படம் பார்த்தபின்பு மனதை ஏதோ செய்தது. தூக்கம் வரவில்லை. எப்போதும் அதைப் பற்றிய நினைவுகள். யார் சொன்னது, திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனம் என்று. சரியான கருத்தை சொல்லும் திரைப்படம், ஒரு பாடம். அப்படி கடைசியாக நான் பார்த்த மன்னிக்க, படித்த பாடம் “எங்கேயும், எப்போதும்” திரைப்படம்.

கே.பி.என் பஸ் மோதி, 20, 30 பேர் இறந்தபோது நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். எல்லாரும் அதை ஒரு செய்தியாக படித்துவிட்டு ஒரு “உச்” கொட்டிவிட்டு அடுத்த வேளை பார்க்க சென்று விடுவோம். ஆனால் அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம், கனவுகள், ஆசைகள், பாசங்கள். இமைப்பொழுதில் அனைத்தும் அப்படியே மண்ணாய் போகிறது.

நீங்க, திட்டுனாலும் பரவாயில்லைண்ணே..நம்ம ஊர்க்காரயிங்களுக்கு பட்டாலும் புத்தி வராது. நைட்டு 9 மணிக்கு சென்னையில பஸ்ஸ எடுப்பாய்ங்க. 4.30 மணிக்கெல்லாம் மதுரை வந்துருவாயிங்க.. என்ன ஒரு வேகம்.. 100, 110 கி,மீ அசுரவேகம்..சத்தியமா சொல்லுறேண்ணே..ராத்திரி பயணம் செய்யும் எந்த ஒரு ஆம்னி பஸ்ஸிலயும் நான் தூங்குனதேயில்லை. யப்பா….நான் சொல்லுறதுக்கு விளையாட்டா இருக்குற மாதிரி நினைச்சீங்கன்னா, ஒரு 10 நிமிசம் டிரைவர் சீட்டு பக்கத்துல உக்கார்ந்து பாருங்க..அரை மணிநேரத்துக்கு மேலே உங்களால உக்காரவே முடியாது…அவ்வளவு அஜாக்கிரதையான வேகம். அதுல பாதி தூக்கம் வேற..என்னைக்கும் டிரைவர் பக்கத்துல உக்கார்றவர், டிரைவருக்கு பேச்சு கொடுத்துக்கிட்டே வரணும். ஆனா, ஒரு பஸ்ஸுல கூட அப்படி பார்த்ததேயில்லை.

ஆனாலும் நம்ம ஊருக்காரயிங்க திருந்தவே மாட்டாயிங்கண்ணே..போன வாரம் தான் ஆக்சிடெண்ட் நடந்திருக்கும், அதை பேப்பருல படிச்சுக்கிட்டு, திரும்பவும் அதே ஸ்பீடுல தான் போவாயிங்க..அப்படி அந்த ஸ்பீடுல போய் என்னதான் கழட்டபோறாயிங்களோ தெரியலை..வாயில நல்லா வருது…

மத்தபடி படத்தை பத்தி விமர்சனம் எழுதுற மூடுல இல்லைண்ணே..குறுகுறுப்பான அஞ்சலி காதலும், ஒரு நாளில் முளைத்த அனன்யா காதலும், பஸ் பயணத்தில் உருவான அந்த அழகான அவசரக் காதலும், ஒரு நொடியில் அந்த விபத்தில் தூள்தூளாகப் போகும்போது, மனசை ஏதோ செய்யுதுண்ணே..

அண்ணே..இந்த படத்தை பார்த்தவுடனாவது திருந்துவோம்ணே..ஸ்பீடா போயி, ஒன்னத்தையும் கிழிக்கப்போறதுல்ல..பாதுகாப்பான வேகத்துல, ஜாக்கிரதையா போவோம்ணே..ஒரு நிமிசம்ணே..இதுவரை சேர்த்துவைச்ச கனவு, ஆசை எல்லாம் தூள் தூளாகி போகிடும்ணே..

படத்தை பார்த்த அடுத்த நாளு, ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வர்றதுக்கு அவசரம் அவசரமா வண்டியை எடுத்து, ஆக்சிலேட்டரை அழுத்துறேண்ணே..80 மைல் வேகம் எடுக்கவே, ஒரு நிமிசம்ணே,..ஒரே நிமிஷம்..ஆசை, ஆசையாக நான் பெத்த மகன் கண்முன்னாடி நின்னாண்ணே…அப்படியே 50க்கு வந்துட்டேண்ணே…ஒரு பயபுள்ள கூட திட்டிட்டு போறாண்ணே…

வீட்டுக்கு வர்றேன்.வீட்டுக்காரம்மா குழந்தையோட வெளியே நிக்குறா..அப்படியே வந்து என் மகனை, அள்ளி, எடுக்குறேன்..கள்ளம் கபடம் இல்லாம ஒரு சிரிப்பு சிரிப்பு சிரிச்சான் பாருங்க…ப்ச்….கொஞ்ச நேரம் பயகூட விளையாண்டுட்டு, கடைக்கு போகலாம்னு வண்டியை எடுக்குறேன்…வீட்டுக்காரம்மா சொல்லுறா…

“ஏங்க..பத்திரமா போயிட்டு வாங்க..நாங்க வெயிட் பண்ணுறோம்…”

வண்டியை எடுக்கவே, திரும்பவும் பையன்தாண்ணே ஞாபகத்துக்கு வர்றான்..அங்க நிக்குறாண்ணே அந்த டைரக்டரு….

7 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதை என்னே இவ்ளோ ஸ்பீடா எழுதிருக்கீங்க? :)

Anonymous said...

Great Review!!

senthil,doha

அமுதா கிருஷ்ணா said...

ரமேஷ் சொன்ன மாதிரி ரொம்ப ஸ்பீடா படிக்க வேண்டி இருக்குது.

கோவில்பட்டி ராஜ் said...

படம் பார்த்த என் மனதும், பாதித்த அதே விசயம்னே நீங்க சொன்னது

அவிய்ங்க ராசா said...

யப்பே ரமேஷ் அண்ணே..நைட்டு 12 மணிக்கு எழுதுனா எப்படி இருக்கும்..

நன்றி செந்தில்

நன்றி அமுதா..)

நன்றி ராஜ்...

Anonymous said...

sir naan scooty ottum poathu yen husband no speed yendru advice panikittai varuvaru sir,indha film paartha piragu yen pakkathil irundha yen husband yen thalayai paarthu oru kottu vaithar sir, naan awarai paarkum poathu awar kanula kannneer sir, ippa yanaku vandi yadukaway payamaga iruku, very toucing film sir,

aotspr said...

நல்ல விமர்சனம்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Post a Comment