Sunday 11 September, 2011

செய்திகள் வாசிப்பது…

சில செய்திகளை கேட்கும்போதும், கேள்விப்படும்போதும், இன்னும் 21 ஆம் நூற்றாண்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. சாதி பெயரை சொல்லி ஊர்வலங்கள், அதன் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு, 3 பேர் பலி…நிலவுக்கே ராக்கெட் அனுப்பினாலும், “அங்கயும், எங்க சாதிக்காரய்ங்கதான்யா முதல் காலடி எடுத்து வைக்கணும்” என்று சண்டை வரும்போல.. அதுபோல டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு..”ஆஹா..இந்தியா வல்லரசாகப்போகிறது” என்று கூவிக்கொண்டிருக்கும் கனவான்களே, இங்கே கவனியுங்கள்…”இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோம், சாதி, மத உணர்வுகளுக்கு அடிமையாய்…”

செப்டம்பர் 11..அமெரிக்கர்களுக்கு மறக்கமுடியாத நாள்..எல்லா நாட்களையும் போல அந்தநாளும் விடிந்து, ஆனால் மறக்கமுடியாத இழவு நாளாகிப்போனது. தீயிலிருந்து தப்பிப்பதற்காக ஏறக்குறைய 50வது மாடியில் இருந்து விழுந்த அந்த வீடியோவை, இன்று பார்த்தாலும் நெஞ்சு பதறுகிறது..”அமெரிக்கா மட்டும் யோக்கியமா” என்று வாதம் செய்தாலும், இறந்த 5000 பேரும் அப்பாவிகள். எவ்வளவு கனவுகள், அனைத்தும் ஒரு நிமிடத்தில் மண்ணாகிப்போனது.. இன்னும் அமெரிக்கர்களுக்கு மறக்க முடியாத நாள்..

மங்காத்தா பார்க்கவில்லையென்றால் ஊருக்குள் ஒருமாதிரி பேசுவாய்ங்க என்ற பயத்தாலேயே, உள்ளூர் தியேட்டரில் பார்க்க நேர்ந்தது. பொதுவாக ஹீரோ ஒர்ஷிப் எனக்கு பிடிக்காது. ரஜினிகாந்த், விஜய், அஜீத் நடிகர்களின் நடிப்பை பிடிக்குமே தவிர, அவர்களின் “சூப்பர் ஸ்டார், தல, தறுதல, டாக்குடரு, தலைவலி” பட்டங்களை அல்ல. மொக்கையாக நடித்தால் கேலி செய்யும் அதே வேளையில் நன்றாக நடித்தால் பாராட்டவும் செய்யவேண்டும். அப்படி பார்த்தால், இந்த படத்தில் வில்லத்தனத்தில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்..”50% வில்லன், கிளைமாக்ஸ் நல்லவன், சந்தர்ப்பவசத்தால் வில்லன்” என்று பாசாங்கு காட்டாமல் 100% வில்லன் என்று கதாபத்திரத்தை உருவாக்கியதற்கே விளையாட்டு பிள்ளை “வெங்கட் பிரபுவுக்கு” ஒரு சபாஷ். ஆனால் தினமும் ஒரு ஆங்கிலபடம் பார்க்கும் எனக்கு எல்லா சீன்களும் ஒவ்வொரு ஆங்கிலபடத்தில் பார்த்ததுபோல் இருந்தது..அதுவும் அந்த டிராபிக் சிக்னலை மடக்குவது, அப்படியே ஒரு ஆங்கிலபடத்தில் சுட்டது..என்ன செய்வது..காலையும் கையையும் கட்டிக்கொண்டு காப்பி குடிக்க வேண்டியதுதான்.

சற்று தாமதமாக “காஞ்சனா” பார்க்க நேர்ந்தது. பக்கத்தில் பிகர் எதுவும் இல்லாததால், பேய்காட்சிகள் எதுவும் பயமுறுத்தவில்லை. ஆனாலும் லாரன்சிடமிருந்து ஒரு இன்ப அதிர்ச்சி.. திரைக்கதையை கொண்டு சென்றவிதம் ரசிக்கவைத்தது. நந்தலாலா போன்ற படங்கள் மட்டுமில்லை, இதுபோன்ற மக்களை கவரும் கமர்சியல் படங்களும் நல்ல படங்கள் தான்..உடனே தோழர் ஷகீலா நடித்த “சாயக்கடை சரசு” நல்ல படம்தானே என்று கேட்காதீர்கள்

“அன்னா தான் இந்தியா, இந்தியாதான் அன்னா” என்ற கோஷத்தை கேட்டபோது “இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்று கேட்டது போல் இருந்தது. கிளம்பிட்டீங்களா, நாட்டுக்காக ஒருத்தர் உண்ணாவிரதம் இருக்காரு, ஆதரிக்காவது வேண்டாம், அட்லீஸ்ட் எதிர்க்காமல் இருக்கலாமே என்று கார்ப்பரேட்தனமாக கேட்டாலும், என்னுடைய ஒரே பதில் “முதலில் நாம் லஞ்சம் வாங்காமல் இருந்தாலே போதும், இந்த உண்ணாவிரதம், உண்ணும்விரதம் எதற்குமே வேலையில்லை.”

நம்ம சீமான் கலக்குறார் போலத் தெரிகிறது..சீமான் பேச்சை கேட்டு துடித்த ரத்தம் எல்லாம், “தமிழ்நாட்டில் ஒரு புரட்சி ஏற்படுத்திவிட்டு, அமைதியாக அமர்ந்திருக்கும் தம்பி விஜய்” என்று ஒரு மேடையில் சொன்னபோதே அடங்கிப்போனது. “இப்போது , அம்மாவுக்கு 40 சீட்டுகளையும்” பெற்றுத்தருவோம்” என்று சொன்னபோது, கெக்கெபிக்கே, கெக்கபிக்கே என்று சிரிக்க தான் தோன்றியது..”கடைசியில இப்படி காமெடி பீஸாக்கிட்டய்ங்களே தலைவா..”

என்னதான் இரண்டாம் கருத்து இருந்தாலும், நம் முதல்வரிடம் பிடித்தது அந்த தில்லு. அந்த தில்லுதான் பிரச்சனையும் கூட..ஆனாலும் பேரறிவாளன், சாந்தன் உட்பட மூன்று பேரை தூக்கிலிடுவதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நிறைவேற்றிய அந்த தில்லு எனக்கு பிடித்திருந்தது..ஹேட்ஸ் ஆப் அம்மா…

“நன்றியோடு விடைபெறுகிறேன்” என்று எழுதத்தான் கீபோர்டை எடுத்தேன். ஆனால் சொறி பிடிச்ச வாயும், வெறி பிடிச்ச நாயும் சும்மா இருக்காது என்பது போல், இந்த பதிவை எழுத நேர்ந்தது.வழக்கம்போல படித்துவிட்டு கமெண்ட் பகுதியில் இரண்டு திட்டு திட்டிவிட்டு போங்கள்..புண்ணியமாப் போகும்.. மற்றபடி பதிவுலத்தை விட்டுபோவதாய் இல்லை, கூகிள்காரன் செருப்பை கழட்டி அடித்து வெளியேற்றும் வரை..

9 comments:

HajasreeN said...

weguseekiram google kaaran adippaan

Vairavan said...

nallathaan irukku

துபாய் ராஜா said...

அப்படியே அடிச்சு ஆடுங்க....

அரபுத்தமிழன் said...

Oh No! But Why dear?

Babu said...

yov, un style-la charu-vaiyo illa lucky-yaiyo nakkal adiyya..athan engalukku venum !

Anonymous said...

i am with you on the comments about Anna hazare, all changes should come within ourselves.
i always liked your blog, keep writing.

கார்த்திகேயன் said...

//மற்றபடி பதிவுலத்தை விட்டுபோவதாய் இல்லை, கூகிள்காரன் செருப்பை கழட்டி அடித்து வெளியேற்றும் வரை//

ஏன் தலைவா.. போறேன்.. போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க.. நல்லாத்தானே உங்களுக்கு எழுத வருது.. அப்புறம் என்னா?

mm said...

கவலையே வேண்டாம் தல... கூகிள்காரன் செருப்பை கழட்டி அடிக்கவே மாட்டான்... அவன் "ஷூ"-தானே போட்டு இருப்பான்...

அவிய்ங்க ராசா said...

நன்றி ஹாஜா..ராஜேஸ்வரன்..துபாய் ராஜா,
நன்ன்றி அரபுத்தமிழன், அனானி நண்பர்..கார்த்திகேயன்
நன்றி அப்துல்..முடியல...))))

Post a Comment