Monday 27 July, 2009

பூச்சரம் கேள்வி பதில்களில் நான்

பூச்சரம்னு ஒரு திரட்டி இருக்குதுண்ணே..அங்க புதுசா ஒரு பகுதி ஆரம்பிச்சிருக்காயிங்கண்ணே..பிரபல பதிவர்களிடம் விரும்பும் கேள்வியைக் கேக்கலாம்….என்னைத் தான் முதல் பதிவராக கூப்பிட்டிருக்காயிங்கண்ணே….பிரபல பதிவர்களிடம் கேளுங்க சொல்லிட்டு என்னை எதுக்கு கூப்பிட்டுருக்காயிங்கன்னு தெரியலண்ணே(ஹீ..ஹீ..இப்படித்தான் தன்னடக்கமா சொல்லணும்னு ஒரு பிரபல பதிவர் சொல்லிக் கொடுத்து இருக்காரு..) சும்மாண்ணே..நானெல்லாம் சின்னப் பையன்னு உங்களுக்கே தெரியும்..ஆனாலும் வடிவேல் சொல்லுறமாதிரி “என்னையும் மனுசன்னு மதிச்சு அழைச்சதுக்கு சந்தோசம்யா..”

அதுக்கு ஏதாவது தயாரிக்கனும்னு ரெண்டு மூணு இலக்கியப் புத்தகம் எடுத்துப் படிச்சுக்கிட்டு இருந்தேண்ணே..முத முறையா படிக்கிறேன்ல..செம தூக்கம்னே..என் பொண்டாட்டிக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு..அதனால படிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்தேன்..என்ன மாதிரி கேள்வி வரும்..ஒரு வேளை இப்படிக் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லனும்னு நானே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். என் பொண்டாட்டி பண்ற டிஸ்டர்ப பாருங்க..

கேள்வி : நீங்கள் முட்டாள் என்பது உங்கப்பாவுக்கு தெரியுமா, தெரியாதா?

“அது ஊருக்கே தெரியுமே..”

“என்னடி சொல்லுற..”

“இல்லீங்க..நீங்க சோம்பேறீ..உருப்படியா படிக்கமாட்டீங்கனு ஊருக்குத் தெரியும்..அது இப்படி தூங்கிக்கிட்டே படிச்சுக்கிட்டு நீருபிருக்கிறீங்க பார்த்தீங்களா..”

அடிப்பாவி..என் மனசுக்குள்ள எதுவும் ஸ்பை கேமிரா வச்சுருக்காளோ?

ஊருக்குள்ள குசும்பு புடிச்சவிங்க நிறைய பேரு இருக்காயிங்க..என்ன கேள்வி கேப்பாயிங்க..ஒருவேளை இப்படி கேப்பாயிங்களோ?

கேள்வி : நயன் தாராவுக்கும் உங்களுக்க்கும் ஒரு இதுவாமே..

“அடியே..அந்த போன் அடிக்குது பாரு..எடு..”

“யாருங்க அது லஷ்மின்னு பெயர் வருது..யாருங்க அது லஷ்மி..”

“அது வந்து..என் ஆபிஸ்ல ஒருத்தர் இருக்காரு..பேரு லஷ்மி நாராயண்ன்..ஷார்ட்டா நாங்க லஷ்மின்னு கூப்பிடுவோம்..”

“கொண்டாங்க..நானே பேசுறேன்..மவனே, ஏதாவது பொண்ணு குரல் கேட்டுச்சு, உன் லைப்பே ஷார்ட் ஆகிடும்..”

ஆஹா..நயன்தாரா..மன்னிச்சுடு..உன காதலை என்னாலே ஏத்துக்க முடியல..

ஒருவேளை இப்படி கேள்வி கேட்டா..

கேள்வி : நீங்கள் சமீபத்தில் படித்த தமிழ் இலக்கியம் எது..?

“என்னங்க..அப்படியென்ன புத்தகம் வேண்டிக் கிடக்குது..நான் ஒருத்தி எல்லா வேலையும் செய்யுறேனே..கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல”

“என்னை நிம்மதியா படிக்க விடு..சாரு, உத்தம எழுத்தாளன்..சாரி, ஜெமோ, நாஞ்சில் நாடன், சு.ரா..”

“யாரு..ரெமோவா..இந்த அந்நியன் படத்துல..”

“ஐயோ இது ஜெமோ..ஜெயமோகன்..”

“யாருங்க அவரு…நம்ம ஊரில வீட்டு பக்கத்துல பொட்டிக்கடை வச்சிருந்தாரே..அவரா..புத்தகம் விலைக்குப் போட்டா எடுத்துக்குறுவாரு பொட்டலம் மடிக்கிறதுக்கு..புத்தகமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாரா..”

“ஐயோ..நான் ஆணியே புடுங்கலடீ..போதுமா..”

ஒருவேளை நடிகர்களை கேள்விக் கேக்குற மாதிரி கேட்டா..

கேள்வி : நீங்க எழுத வரலைன்னா என்ன பண்ணியுருப்பீங்க..

“என்னங்க..அமெரிக்காவுல பிச்சைக்காரயிங்களாம் இருக்காங்களா??”

“என்னடி..சரியா காதுல விழல..”

“பிச்சைக்காரர்ங்க”…

அடங் கொய்யாலே..நீங்களும் கேக்கலாம்னே..இந்த லிங்கை கிளிக் செய்து கேளுங்க. அல்லது கீழே உள்ள லிங்கை உங்கள் பிரௌசரில் காபி செய்யுங்க..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..)))

http://poosaram.blogspot.com/

6 comments:

கலையரசன் said...

அங்க வரேன்!

S.A. நவாஸுதீன் said...

ஏன் ராசா ரொம்பவும்ல எடக்கு மடக்கா இருக்கும் போல தெரியுது?

creativemani said...

அட்டகாசம்'ணே..

நாஞ்சில் நாதம் said...

:)))

Unknown said...

Raja
Unga eluthu nadai super.Romba naala oru varutham irunthathu.Enna than iyalpa irukanum endralum unga manaiviya ava eva nu sollama iruntha nala irukum.Dont mistake me.

Kumar S said...

I've Posted my questions there Raja.

Post a Comment