Sunday 7 June, 2009

ஆணவம்=திமிரு=கர்வம்

எழுத வந்து 70 நாட்கள் ஆகியிருக்கும்ணே..நேற்றோடு 50 பாலோயோர் இணைந்துள்ளனர்..சந்தோசமா இருக்கிற வேளையில கொஞ்சம் பயமாகவும் இருக்குண்ணே……என்னால தினமும் ஒவ்வொரு பதிவு போட முடியலண்ணே..உண்மை என்னன்னா, யாரும் அதை எதிர்பார்த்தும் இல்ல..எல்லாரும் உண்மையிலே ஏதோ ஒரு விதத்துல சிறப்பா எழுதுறாங்கண்ணே..என்னைப் பொறுத்த வரை எல்லாரும் சிறந்த பதிவர்கள்தான்…

எனக்கு வர்ற கமெண்ட்ஸ் பார்க்குறப்ப, பிச்சை எடுக்குறவனுக்கு சரவண பவன்ஸ் மீல்ஸ் போட்டா எப்படி இருக்கும்..அப்பிடி இருக்கும்ணே….சில நேரம், என்னால அவுங்களுக்கு பதில் எழுத முடியலயேன்னு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும்னே..பதிவு எழுதற தவிர்த்து பார்த்தா, சில பதிவுகளைப் படிப்பேன்..அப்படி படிக்கும்போது சிலரோட எழுத்துக்களில் உள்ள ஒரு ஆணவம் எனக்கு பிடிக்கிறதில்லைண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, எனக்கோ அவுங்களுக்கோ கொடுக்கல் வாங்கல் தகராறு ஒன்னும் இல்லண்ணே..அவுங்களை பத்தி எழுதுண்ணாம, நிறைய ஹிட்ஸ் கிடைக்கும்ன்ற அவசியமும் இல்லண்ணே..ஏன்னா பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு ஹிட்ஸ் பத்தி கலாய்ச்சிருக்கேன்….

என்னைப் பொறுத்த வரை ஆணவம்,கர்வம்,திமிரு எல்லாமே ஒன்னுதான்னே..எழுத்துதான் வேற வேற..நல்ல படைப்பாளிகளுக்கு ஒரு கர்வம் இருக்கணும்னு சொல்லுறீங்களா..இல்லண்ணே..கர்வம் இருந்தா, அவன் நல்ல படைப்பாளியே இல்லண்ணே..யாரோட கர்வமும் எனக்கு பிடிக்கிறது இல்லண்ணே..அவன் உலகத்துலேயே பெரிய படைப்பாளியா இருக்கட்டும், ஒரு நிமிசத்துல அவனுக்கும் மேல ஒருத்தன் வருவாண்ணே..எவனும் சொல்லிக்க முடியாது..’டே..நாந்தாண்டா..எனக்கு மேல ஒருத்தன் வரமுடியாதுடா” ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஒருத்தன் அவன் மேல ஏறி நிப்பான்….இளையராஜா பாடல்களை வேணுன்னா சொல்லலாம்…சூப்பர்னு..ஆனா அவரோட ஆணவத்தை..கர்வத்தை…ம்..ஹிம்..இதனாலேயே அவரோட பாடல்கள் என்னை கவர்ந்த அளவுக்கு அவர் என்னைக் கவரவில்லை..

சாரு எழுத்துக்களை படிக்கும்போது அது அப்பட்டமாக தெரியும்…”சார் எப்படி இருக்கீங்க..”ன்னு ஒரு கேள்வி கேட்டு பாருங்க..உலக இலக்கியத்துல இருந்து ஆரம்பிப்பாரு..ஏன் இப்பிடி..இப்படியெல்லாம் எழுதுனாத்தான், உலக இலக்கியம் தெரியும்னு நினைக்கனுமா என்ன..

இப்பிடித்தான் ஒரு பதிவர் அவரை பதிவர் கூட்டத்துக்கு கூப்பிட்டுருக்கார்..அதுக்கு விட்ட சரியா டோஸ், இன்னும் கூட எங்களுக்கு ஞாபகம் இருக்குண்ணே..

இதுக்கு பின்னால் ஒளிந்து கிடப்பது “கர்வம்” என்று நீங்கள் சொன்னா, நான் ஆணவம் என்று சொல்லுவேன்..எப்பிடித்தான்யா, பதிவர் சந்திப்புக்கு கூப்பிறது..கொஞ்சம் வெத்தலை பாக்கு எடுத்துக்கிட்டு, மஞ்சப்பையில கொஞ்சம் ஆப்பிளைக் குடுத்துக்கிட்டு..”ஆமாங்க மேனேஜர்..சரிங்க மேனேஜர்..பதிவர் சந்திப்புக்கு வாங்க மேனேஜர்..” இப்படின்னா..சரி..கூப்பிட்டுருக்காரு, நாசூக்காக மறுத்து விட்டிருக்கலாம்..இப்படியா பதிவில் போட்டு தாக்குறது..இந்த அவமானத்தை அழைத்தவர் வேண்டுமானால் வசதியா மறந்து இருக்கலாம்..எங்களால தொடச்சிட்டு போக முடியல..

என்னடா, எப்ப பார்த்தாலும் சாருவை தாக்கி எழுதுறான்னு நினைக்காதிங்கண்ணே...நான் எந்த சைட் படிக்கும்போது அது தோணிச்சுன்னா, அதையும் எழுதுவேன்..

3 comments:

Suresh said...

உண்மை தான் ராசா. உங்க கருத்தை உங்க பாணியிலே சொல்லிடிங்க

Satheesh said...

டேய் பொத்துகிட்டு போடா வெண்ணெய்.. ரொம்ப தான் பேசுறே மவனே கானமோ போடுவே.. தல பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன யோகிதை இருக்கு .. நீ எல்லாம் ஒரு ஆளா தூ தேறி!! சல்லி பயலே.. தைரியம் இருந்த அண்ணனோட ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா

SUMAZLA/சுமஜ்லா said...

ரொம்ப சென்சிட்டிவ்வான ஆளா இருக்கீங்களே?
டேக் எவ்ரிதிங் ஈஸி சார்.

Post a Comment