Sunday 20 January, 2013

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்


குட்டிப்பையனுக்கு பிறந்த நாள் வருது, ஏதாவது பார்ட்டி அரேஞ்ச் பண்ணலாம்னு இங்கிட்டு உள்ள இண்டியன் ரெஸ்டாரண்டுக்கு போலாமுன்னு போனேண்ணே..நான் இங்கிட்டு சொல்லுறது, மதுரை பக்கமில்லைண்ணே..கொஞ்சதூரம்..அதாவது, ரெண்டு மூணு கடல் நீந்தி வந்தீங்கன்னா, “அமெரிக்கா..அமெரிக்கான்னு சொல்லுவாய்ங்கள்ள..அட அதுதாண்ணே..காலங்காத்தால, சூட்டும் கோட்டும் போட்டுக்கிட்டு, ஜெமினி ப்ளைஓவர் பக்கத்துல பல்லு விளக்காம, ஒரு பைலை கையில புடுச்சுக்கிட்டு நிப்பாய்ங்கல்ல..இங்கிட்டு வர்றதுக்குதாண்ணே..அப்படி நின்னபையதாண்ணே நானும்.அதனால நன்றி மறக்ககூடாதுல்ல..

சரி விசயத்துக்கு வருவோம்..அப்படி அமெரிக்காவுல, ஒரு மாகணத்துல(யாருண்ணே..அங்க..ம் கொட்டுறது..), ஒரு சிட்டில வாழுற ஜீவன் தான், நான்..அதுவும், விசா முடியுற வரைக்கும்தான்..அதுக்கப்புறம் பொடணிய புடிச்சு சாத்திப்புடுவாய்ங்கல்ல சாத்தி..நம்மளும் சிரிச்சிக்கிட்டே..” மைகாட்..வாட் கண்ட்ரி..ஒரே பொல்யூசன்..பாலிடிக்ஸ்…” அப்படின்னு சொல்லிக்கிட்டு ரெண்டு நாளைக்கு திரிவோம்..அப்புறம் ரெண்டு நாளைக்கு யாரும் கண்டுக்கலைன்னு சொன்னவுடனே..”மச்சி..ஒரு குவார்ட்டர் சொல்லேன்னு ஆரம்பிபோமுல்ல..சரி..திரும்பவும் விஷயத்துக்கு வருவோம்..

சரி..நம்ம குட்டிப்பையனுக்கு பொறந்த நாளுன்னு, இங்க உள்ளஇண்டியன்ரெஸ்டாரண்டுகளுக்கெல்லாம் போய் எவ்வளவுன்னு கேப்போமுன்னு போனேண்ணே.. நம்ம ஊருக்காரய்ங்க நடத்துற ஒரு ரெஸ்டாரண்ட், சோத்துக்கு ஊருகாய சாம்பாரு மாதிரி கலந்து அடிக்குற ஆந்திராகாரய்ங்க நடத்துற ஒரு ரெஸ்டாரண்டு அப்படின்னு சுத்திட்டு கடைசியா, பான்பராக் போட்டிக்கிட்டுபுளிச்சு”, “புளிச்சுன்னு எச்சிய துப்புற வடநாட்டுகாரய்ங்க ரெஸ்டாரண்டுக்கு போனெண்ணே..

உள்ள போனேவுடனே கோர்ட்டு சூட்டு போட்டுக்கிட்டுஆயியேஆயியே..”ங்கிற மாதிரி ஒருத்தர் வந்தாருண்ணே..என்னை மேலேயும் கீழேயும் பார்த்துக்கிட்டுஅங்கிட்டு ஓரமா நில்லுங்குறமாதிரி ஒரு பார்வை..எனக்குன்னா ஜிப்பு ஒழுங்காத்தான் போட்டுருக்கமான்னு ஒரு டவுட்..எதுக்கும் சரிபார்த்துக்கிட்டேன்அவர்கிட்ட போய்..

ஆக்சுவலி.. ஆம் கமிங்க் டு அரேஞ்ச் ஹால் பார் மை சன் பர்த்டே பார்ட்டி..”

சொன்னத முழுசா கூட கேட்டாருன்னு கூட தெரியல..

கேன் யூ வெயிட் பார் மினிட்..”ன்னுகிட்டு அங்கிட்டு திரும்பி பார்த்தார்..பார்த்தா, ரெண்டு வடநாட்டுக்கார பார்ட்டிங்க..இது..பாட்டிங்க..நைட் 8 மணிக்கு கூட புல்மேக்கப்ப போட்டுக்கிட்டு

ஹே..சர்மாங்க

நம்ம ஆளு..

கொஞ்சம் தள்ளுய்யா..” அப்படிங்குற மாதிரி என்னைதாண்டி, வழக்கம்போலஆயியே..ஆயியேசொல்ல எனக்குசரி..வருவாரு..கஸ்டமருதான முக்கியம்னு யோசிக்க ஆரம்பிச்சேன்..அப்புறம் 3 பேரு இந்த ஊருக்காரய்ங்க வந்தாய்ங்க.. அவிங்கள விழுந்து, விழுந்து கவனிக்க ஆரம்பிச்சாரு..அவிங்க உக்கார்ந்தவுடனே, பக்கத்திலயே நின்னு, “என்ன சார் வேணும்..” அப்படிங்குற மாதிரி கவனிக்க, “அடடா..என்ன ஒரு அக்கறை..என்ன ஒரு அக்கறைன்னு எனக்குன்னா பெருமை..ஒரு இந்தியாக்காரன் எப்படி கவனிக்குறான் பாருய்யான்னுஇந்தியன்னா சும்மாவா..” அப்படின்னு கண்னு கலங்கிடுச்சுண்ணே..

அப்புறம் என்ன கடுப்புன்னு கேக்குறீங்களா..வேற ஒன்னுமில்ல..அடுத்த ரெண்டு நிமிஷத்துல, நம்ம ஊருக்கார பயபுள்ளைக குடும்பம் சகிதமா வந்தாய்ங்க்..நம்ம பானிபூரிகார சர்மா நேர்மையா இருந்தா என்ன பண்ணியிருக்கணும்..அவிங்களையும், இந்த ஊருக்கார்ய்ங்க மாதிரியே வரவேற்றுக்கணுமில்ல..அதுதான் இல்ல..கண்டுக்ககூட இல்லைண்ணே..அங்கிட்டு போயி உக்காருங்குற மாதிரி நின்னுக்கிட்டு இருக்காரு..

எனக்குன்னா ஷாக்..சர்மா, இப்ப அவசரம், அவசர்மா உள்ள ஓட..ஆஹா..”ரொம்ப நேரமா நிக்குறீகளே..செத்த உக்காருங்கஅப்படின்னு சேர் எடுத்துவர போயிருக்காருன்னு நினைச்ச..அதில்ல..அங்கிட்டு கார்பெட்டுல துசி இருக்காம்துடைக்கிராராம்..அட பட்டரு(அதாவது வெண்ணை..), மனச புல்லா தூசிய வைச்சிக்கிட்டு கார்பெட்ட ஏண்யா துடைக்கிற….குத்துகல்லு மாதிரி..உங்க நாட்டு ஆளுங்க, சோத்துக்கு லைனுல நிக்கிறோம்..அதவிட்டுட்டு அவிங்கள விழுந்து, விழுந்து கவனிக்கிறாருண்ணே..

ஏன்யா..நீ என்ன பிரைம் மினிஸ்டரா..உன்ன கவனிக்கலைனா, உடனே அம்புட்டு பேரும் கெட்டவய்ங்களா..”ன்னு கேட்டா..அதில்லன்னே பிரச்சனை..இதுல இருக்குற அரசியல புரிஞ்சுக்கிட்டா போதும்..அந்த அரசியலுதான் மேட்டரே..இங்க மட்டுமில்ல..எங்கயுமே, நம்மளக்கு தரவேண்டிய மரியாதையயும், கவுரவத்தையும் தர்றதில்லேண்ணே,..அதாவது, நம்ம காசுக்காக ரெஸ்டாரண்ட் வைச்சிருக்குற ஆளு..நம்ம காசுவேணும்..ஆனால், “இவிங்களுக்கெல்லாம் மரியாதை தரணுமாங்கிற அலட்சியம்..ஏன்னா நம்ம தோலும், நம்ம அமைப்பும் அவிங்க கண்ணை உறுத்துது..

அமெரிக்காவுல, இந்த ஊருக்காரய்ங்க நடத்துற ரெஸ்டாரண்டுல சொல்லுறேண்ணே..எல்லாத்துக்கும் சமஉரிமை..ஒரு அமெரிக்கன எப்படி நடத்துறானோ, அதுமாதிரியே, ஒரு மெக்சினையும் நடத்துறான்..ஒரு இந்தியனையும் நடத்துறான்..ஒரு சைனாக்காரனையும் நடத்துறான்..ஆனா நம்ம நாட்டுக்காரய்ங்க நடத்துற ரெஸ்டாரண்டுல, மனுசனா மனுசனா கூட மதிக்கமாட்டுறாய்ங்க..அதுவும், கொஞ்சம் திராவிட கலருலயோ, தென்னிந்தியர் வகையில் வந்தா..அவ்வளவுதான்..அப்படி ஒரு பார்வை

அப்படி ஒரு ஹோட்டலில் என் பையனுக்கு பங்க்சனே வேணாங்குற முடிவுல வெளியே வந்துட்டேன்..அப்படி என்னண்ணே நம்மெல்லாம் கீழே போயிட்டோம்..தக்காளி..எங்க வீட்டுக்கெல்லாம் அவிங்கல்லாம் வந்தா எப்படி கவனிப்போம்..ஆனா..ஏண்ணே..அவிங்களுக்கெல்லாம் அப்படி தோண மாட்டிங்குது..அவிங்க, கண்ணை உறுத்துறது எது..கோர்ட்டும் சூட்டும் போடலைன்னா..அல்லது, இந்த திராவிட கலரா….அட பட்டருங்களா..நீங்க, மூச்சுக்கு மூணு தடவைதி ஐகான் ஆப் நேசன்அப்படின்னு சொல்லுற அப்துல் கலாம், எங்க ராமேஸ்வரம்யா….நீங்க ஐபாடுல கேட்குற, இந்திப்பாட்டுல பாதி எங்க ஊருக்காரரு, .ஆர் ரகுமான் போட்டதுய்யா..கதற கதற ஒரு பெண்ணை கற்பழிச்சு கொன்ன கொடூரம் நடந்தது, டில்லி லய்யா..சென்னையில இல்ல..மசூதியையும், கோயிலையும், சர்ச்சையும் இடிக்குறது, உங்க ஏரியா பக்கம்தான்யா….உங்களவிட நாங்கதான்யா எல்லாத்துலயும் டீசண்டு

தக்காளி..இதுமாதிரி நம்மளை நடத்துறதலாண்ணே, “நான் இந்தியன்னு சொல்லவே தோணமாட்டிங்குது….தக்காளி..அடுத்த முறை அந்த ஆளை பார்த்து ஒன்னு சொல்லலாம்ன்னு இருக்கேன்

இப் யூ டை டுடே, டுமாரோ யூ வில் கெட் மில்க்..”

அதாவது..

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்..”

2 comments:

Anonymous said...

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்.

ithaneey panchu :)

RajaRathinam said...

தக்காளி இடககரடககல் நன்றாக இருக்கிறது

Post a Comment