Sunday 26 June, 2011

பெண் பாவம்

“வக்கில் சார்..காப்பத்திருவீங்கள்ள…”

"டிரை பண்ணுறேன்..’

“என்னது.டிரை பண்ணுறீங்களா..சார்..என்னோட வாழ்க்கை பிரச்சனை சார்.வாழ்நாள் முழுவதும் ஜெயிலுல இருக்க என்னால முடியாது.உங்களை நம்பி வந்தா இப்படி சொல்லுறீங்க..”

குமுறினான் வினோத்..வக்கில் சண்முகம் அவனை ஏற இறங்கப் பார்த்தார்..

“தம்பி..ஏதோ தப்பு செய்யாதது மாதிரி பேசுறீங்க.பணம் வைச்சிருந்தா என்ன வேணாலும் செய்யலாமா., நெருங்கிய பிரண்டுன்னு சொல்லிப் பழகிட்டு, அந்த பொண்ணை ஏமாத்திக் கூட்டிட்டு போய் ஈ.சி.ஆர் பக்கத்துல ஆளில்லாத இடத்துல வைச்சு பலாத்காரத்துக்கு முயற்சி பண்ணியிருக்கீங்க..”

“சார்..அதெல்லாம் எங்கள மாதிரி பணக்கார வீட்டு பசங்ககிட்ட சகஜம் சார்..நீங்க முடியலைன்னா சொல்லுங்க வேற வக்கீல் பார்த்துக்குறோம்..”

கறார் குரலில் வினோத் சொன்னான். வக்கில் சண்முகம் யோசித்தார். சிறிது நேரம் யோசிக்கவே, அவருடைய எண்ணத்தை கலைத்தார் போல் செல்பேசி அழைக்க, “ஒரு நிமிஷம்..வீட்டுக்காரம்மா..” என்று சொல்லிவிட்டு நகன்றார்..

“சொல்லும்மா..நாந்தான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஆபிஸ்ல க்ளையண்டோட பேசிக்கிட்டு இருக்குறப்ப கால் பண்ணாதேன்னு..”

“என்னங்க புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க.இன்னும் 10 நாள்தாங்க இருக்கு..நம்ம பொண்ணை எஞ்சினியரிங்க் காலேஜ்ல சேர்க்க..டொனேஷனே 10 லட்சம் கேட்குறாங்க..மறந்துடாதீங்க..நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது..பணத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க..”

கடுப்போடு செல்பேசியை அணைத்தார்.

“கடைசியாக என்னதான் சார் சொல்லுறீங்க..என் நண்பனை காப்பத்த முடியுமா..முடியாதா”

“ஒன்னு சொல்லட்டா….தப்பு செய்றவங்களை விட அவர்களுக்கு சப்போர்ட் பண்றவங்க இன்னும் டேஞ்சர்.,சரி..பண்ணுறேன்…எனக்கு வீட்டுல ஆயிரம் பிரச்சனை..”

வேண்டா வெறுப்பால முன்பணம் வாங்கிகொண்டார்.ஆனால் சண்முகத்தின் மனதுக்குள் ஏதோ குறுகுறு.

மறுநாள் கோர்ட். அந்த பெண்ணை பார்க்கும்போதே சண்முகத்திற்கு பாவமாக இருந்தது. சாட்சி விசாரணை.. சண்முகம் எழுந்தார்..

“உன் பேரு என்னம்மா..”

“ஸ்வேதா.”

“இதோ நிற்கிராரே வினோத்..எவ்வளவு நாளா பழக்கம்.”

“2 வருடமா..”

“பழக்கம்னா எப்படி..”

“நாங்க நல்ல பிரண்ட்ஸ்சா இருந்தோம்.”

“நீ வினோத்தை எப்படி கூப்பிடுவ.”

“டே வினோத்.”

“அதாவது, வினோத்தை டே ன்னு கூப்பிடுற அளவுக்கு பழக்கம்..ரைட்.”

“ஆமா..”

“நீ என்ன மாதிரி டிரஸ் போடுவ.”

“ஜீன்ஸ்..டி.சர்ட்..”

“ஓ…ஏன்மா, உங்க வீட்டுல இப்படி டிசர்ட்டெல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லலியா..”

“ஏன் சார்.போடக்கூடாது..”

“இல்லை..உன்னைப் பார்க்கும்போது அல்ட்ரா மார்டனாக இருக்கே..அதான் கேட்டேன்..அப்புறம்..தண்ணி, தம் அடிப்பியா..”

அந்த பெண் தலை குனிந்தாள்..

“சரி.என் கட்சிக்காரர் உன்னை பலாத்காரத்து முயற்சி பண்ணினார்னு சொன்னியே..அதுக்கு முன்னாடி உன்கிட்ட அதுமாதிரி தப்பா எதுவும் நடந்துருக்காரா...”

“அது..அது..வந்து..நடந்ததில்லை..ஆனா அடிக்கடி ஒரு மாதிரி அசிங்கமா பேசுயிருக்கிறார்..”

“எப்ப பேசுனார்..”

“ஒரு ரெண்டு மூணு தடவை..”

“நீ என்ன சொன்ன..”

“இனிமேல் அதுமாதிரி பேசுனா, உங்க கூட பேசமாட்டேன்னு சொன்னேன்..”

“ஏம்மா..நீயெல்லாம நல்ல குடும்பத்துப் பொண்ணா…யாராவது உங்கிட்ட தப்பா பேசுனா, உடனே கட் பண்ணமாட்டியா..இப்படித்தான் உங்க வீட்டுல வளர்த்திருக்காங்களா..இல்லாட்டி..உங்க பரம்பரையே.”

ஸ்வேதா பயந்தே போனாள்..கண்கள் நிறைய தண்ணீர்

“சார்..அவனோட பிரண்ட்ஷிப் எனக்கு பிடிச்சிருந்தது.அதனால் தான் அவன் எங்கிட்ட அசிங்கமா பேசினப்ப கூட, அவனை டிஸ்கனெக்ட் பண்ண விரும்பல.. ஆனா அவன் தப்பா நடந்துக்கிற அளவுக்கு போவான்னு நினைக்கலை..”

“ஆ...இதோ பாருங்கள் யுவர் ஆனர்..நம் கலாச்சாரத்திற்கு கேடான இப்படி ஒரு பெண்தான் என் கட்சிக்காரர் மேல் குற்றம் சாட்டுவது…அடிப்படையே இங்கு சரியில்லையே…சரி சொல்லுங்கம்மா…என் கட்சிக்காரர் உங்களை பலாத்காரத்துகு முயற்சி பண்ணினார் என்று சொன்னீர்களா..அவர் உங்களை எங்கெங்கெல்லாம்..******”

ஸ்வேதாவுக்கு இதற்குமேல் அடக்கமுடியவில்லை.,,அனைவரும் அவளை வேடிக்கை பார்க்கவே கூனி குறுகிபோனாள்..கண்களில் இருந்து தாரை தாரையாக தண்ணீர்..

“சார்.நான் கேசை வாபஸ் வாங்கிக்கிறேன்..என்னை விட்டுருங்க சார்..” கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாள்.

சண்முகம் வெற்றிச்சிரிப்பு சிரித்தார். நீதிபதி வழக்கை ரத்து செய்ய வினோத் துள்ளிக்குதித்தான்... கோர்ட் வாசலில் சண்முகத்திற்கு பெரிய மாலை ஒன்றை அணிவித்தான்..

“சார்..எப்படி..எப்படி சாதிச்சீங்க..”

“ப்ச்..ஒன்னும் இல்லை தம்பி..இந்த பொண்ணுங்க இருக்கே.ரொம்ப சென்சிட்டிவ்..யாராவது ஒரு பொண்ணு நம்ம தப்பா பேசறோம்னு கம்ப்ளெயின் பண்ணுனா., உடனே, அந்த பொண்ணைப் பத்தி தப்பா பேசணும்..அந்த பொண்ணு குடும்பத்தையும் இழுக்கணும்.வீக்னெஸ்சே அங்கதான் இருக்கு..அந்த பொண்ணு கேரக்டர்டரை அசாசினேட் பண்ணினாவே பாதி வெற்றிதான்..”

வினோத்தின் நண்பன் ஆமோதித்தான்..

“ஆமா சார்….வீட்டுல ஒழுங்கா புள்ளைய வளர்க்கத் தெரியலை..எங்க மேல கம்ப்ளெயின் குடுக்குதுங்க..”

சண்முகம் சிரித்தார்..

“தம்பி வினோத்..உன்னைய விட, நீ சொல்லுறதுக்கெல்லாம் ஜால்ரா போட்டு, “நண்பன் அப்படித்தான்”னு சொல்லுறவங்களைத்தான்யா இன்னும் டேஞ்சர்..”

“சரி..விடுங்க..இந்தாங்க உங்களுக்கு சேரவேண்டிய பணம்..நேரம் கிடைக்குறப்ப நம்ம ஈ.சி.ஆர் பங்களாவுக்கு வாங்க..”

“ம்..உங்களை மாதிரி பணக்கார பசங்கள்ளெல்லாம் ஈ.சி.ஆர் ரோடே கதின்னு கிடக்குதுக…ம்..காலம் கெட்டு போச்சுப்பா..

கையில் வாங்கி கொண்டார்..முதலில் இதைக்கொண்டுபோய் மனைவியிடம் கொடுக்கவெண்டும். மகள் ஆனந்தியை எஞ்சினியரிங்க் சேர்க்கவேண்டும்..அதை நினைப்போடு அவசரம், அவசரமாக வீடு சென்றார்…

“அடியே..அடியே..இங்க வா..இந்த பணத்தை உள்ள வை..”

“வந்துட்டீங்களா..இன்னும் 10 நாள்தான் இருக்கு நம்ம மக ஆனந்தி இஞ்சினியரிங்க் ஸ்கூல் அட்மிசனுக்கு.”

“ம்..அதுக்குதானே பணம் சேர்க்குறேன்…ஆமா ஆனந்தி எங்க..” அவள் அறை சென்று தேடினார்..

“அவள் இல்லிங்க..”

“எங்க போயிருக்கா..”

“ஏதோ பிரண்டுகிட்ட இருந்து கால் வந்தது..ஈ.சி.ஆர் ரோடு வரைக்கும் போயிட்டு வர்றேன்னு போனா..இன்னும் ஆளைக்காணலை.”

தொலைக்காட்சியில் எஸ்.ஜே சூர்யா நடித்த “நீயூட்டனின் மூன்றாம் விதி” படம் ஓடிக்கொண்டிருந்தது

5 comments:

rajamelaiyur said...

Super story

Faizal said...

யதோயோ சுட்டி காட்டுவது போல் இருக்கே ... ... ... .. .. .. சாரு கதையோ ......

Anonymous said...

அரத பழசான லாஜிக் பாஸ்!

-
வெங்கடேஷ்

அவிய்ங்க ராசா said...

நன்றி ராஜா..
நன்றி பாய்சல்
நன்றி வெங்கடேஷ்.கரெக்ட்.ஆனால் விடை பாய்சல் கூறிய கமெண்டில் இருக்கிறது..)))

Jackiesekar said...

Oththa mavane.. Ennai pathi eluthalaina... Unakku thookkme varadhe...

Post a Comment