Sunday 19 June, 2011

ஆரண்ய நிரோத்(காண்டம்) – பட விமர்சனம்

யாருண்ணே தெரியலண்ணே..யாரோ ஒரு பயபுள்ள வாரத்துக்கு ஒரு மெயில் அனுப்புறாப்புல்ல..”ராசா..ஏதாவது, இலக்கியதரமா எழுது..ராசா..ஏதாவது இலக்கியத்தரமா எழுது..” ன்னு..அட பாசக்கார பயபுள்ளையே..நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறேன். இலக்கியத்துக்கும் எனக்கு என்னையா சம்பந்தம்..ஜட்டியில..சாரி..இது..சட்டியில இருந்தாதானே அகப்பைக்கு வரும்..சரி பயபுள்ளை ஆசைப்படுது, டிரை பண்ணித்தான் பார்ப்போமேன்னு “இந்த படம் பின்நவீனத்துவ குறியீடுகளால்..” ன்னு எழுத ஆரம்பிச்சா, எனக்கே சிரிப்பா வருது..அதுக்கு மேல எழுதமுடியாம, கை வேற கோணிக்குது. அதனால் என்னைப்படிக்கும் ஒன்னு ரெண்டு நண்பர்களுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள்..”வேணாம்யா..இதோட நிறுத்திக்குவோம்..அழுதுருவேன்.”

சரி, தலைப்பாவது வித்தியாசமா வைப்போம்னு, நினைச்சதுல எழுதுனதுதான் “ஆரண்ய நிரோத்..” ஆமாண்ணே..நம்ம ஊருல காண்டம்னாவே, நிரோத்துன்னு தான சொல்லுறாயிங்க..என்னது கேவலமா இருக்கா..சரி..அதை விடுங்க..நம்ம விமர்சனத்துக்கு வருவோம்..

நான் தமிழில் பார்த்த கேங்க்ஸ்டர் படங்கள், இரண்டே இரண்டு. ஒன்று எப்போதும் கூலிங்கிளாசோடு இருக்கும் செல்வராகவன், இயக்கிய புதுப்பேட்டை. இரண்டாவது, இந்த படம்..ஜாக்கிஷெராப் பலாத்காரத்துக்கு முயன்று தோற்று அவளை அடிக்கும்போது..”உங்களுக்கு முடியலைன்னா, என்னை ஏன் அடிக்கிறீங்க..” என்ற டயலாக்கோடு படம் தொடங்கும்போதே, தெரிந்துவிடுகிறது, இந்த படம், பத்தோடு, பதினொன்று இல்லை என்று. கதை என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை..ஆனால், இரண்டு கேங்க்ஸ்டர் குழுவுக்கு இடையில் நடக்கும், அனுபவங்கள், நடுவில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் கேரக்டர்கள், துரோகங்கள், வன்மங்கள் என்று திரைக்கதை மெல்ல, மெல்ல நம்மை இழுத்துச் செல்கிறது(எங்கேன்னு சப்பை மாதிரி கேக்ககூடாது).

இந்த படத்தை தூக்கி நிறுத்துவது, கேரக்டர்களும், அதில் பங்களித்தவர்களும்..ஒருவரும் சோடை போகவில்லை..”ஏமாத்திப்புட்டாயிங்கப்பா..” என்று முகத்தில் ஏமாளித்தனத்தையை அப்படியே வைத்திருக்கும், அந்த கிராமத்துப் பெரியவரும்..”யோவ்..நீ உண்மையிலேயே லூசா, இல்லாட்டி லூசு மாதிரி நடிக்கிறியா..” என்று பெரியமனுசத்தனம் காட்டும் அந்த சின்னப்பையனும், எப்போதும் “ஈ” என்று காட்டிக்கொண்டு, வில்லத்தனம் செய்யும் ஜாக்கிஷெராப்பும், “அமைதியா இருக்குறவன நம்பக்கூடாது” என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருக்கும் சப்பை, ரவிகிருஷ்ணாவும், குறைந்தபட்ச நேர்மையோடு இருக்கும் ரவுடியான சம்பத்தும், ஆண்டிகளை கரெக்டு பண்ணுவதாக பெருமை பேத்தும், ஒரு ரவுடியும், ஊமையாக இருந்துகொண்டே காரியம் சாதிக்கும் நாயகியும், பார்த்தாலே, பயப்பட வைக்கும் அளவுக்கு தோற்றமளிக்கும், அந்த கஜேந்திரன் க்ரூப் என் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

இயக்குநர் “தியாகராஜன் குமாரராஜா..” தமிழ்சினிமாவுக்கு புதிய நம்பிக்கையை விதைக்கிறார். ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக கோர்த்து, விவரித்து, கடைசியில் அனைத்துக்கும் கிளைமாக்ஸ் மூலமாக விடையளிக்கிறார். படத்தில் யாருமே நடித்ததாக தெரியவில்லை. முடிந்தவரை வாழ்ந்தே இருக்கிறார்கள். அங்கெங்கு தெளிக்கப்படும் கெட்டவார்த்தைகளை மன்னித்துவிடலாம். அவை ஒன்றும் பாதிப்பு ஏற்படுத்தப்போவதில்லை, எஸ்.ஏ சந்திரசேகர் படத்தில் வலிந்து அமைக்கப்படும் கற்பழிப்புக் காட்சிகள் போல. அடுத்து தயாரிப்பாளர் சரண், இந்த படத்திற்காக, நிறைய சிரமப்பட்டதாக கேள்விப்பட்டேன்..அவர் தலைநிமிர்ந்து சொல்லலாம், “தமிழில் இப்படி ஒரு படத்தை காண்பிங்கடா” என்று.

மற்றப்படி, யுவன் பிண்ணனி இசையை சொல்லாமல் விட்டால், பாவம் என்னை ஸ்லோமோசனில் துரத்தும் என்பதால்..இதோ உலகத்தரமான இசை..தேவையான இடங்களில் பார்த்து, பார்த்து, நுட்பமாக இசையமைத்திருக்கிறார், குறிப்பாக, அந்த சிறுவனும், பெரியவரும் வரும் காட்சிகளில், இசை பேசுகிறது..

அந்த சண்டை அமைப்புகள், கொஞ்சம் ஓவராக இருந்தாலும் பார்க்க பார்க்க அழகாக இருக்கிறது..கடைசியாக, “300” படத்தில் இது போல சண்டைக்காட்சிகளைப் பார்த்தது..அடிக்கடி இருட்டு காண்பிக்கும் கேமிராமேன்(கடைசி வரைக்கும் படம்பார்த்தேன், அந்த கேமிரா தெரியலைப்பான்னு கேக்க கூடாது) சிலநேரம் எரிச்சல் கிளப்பினாலும், பலநேரம், காட்சியமைப்புகளில் வித்தியாசம் கொடுக்கிறார், குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சிகளில்..

முடிவாக, ஆரண்யகாண்டம் – ஒரேவரியில்..”செம…”

9 comments:

jagadeesh said...

ponga! ilakanamaway illa. better luck next time! (we will not leave you until you do)

balaji said...

Good Review. But i am eagerly expecting Avan Ivan Review from you :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

கடைசி வரியை முதல்லயே சொல்லியிருக்கலாம்ல... இம்புட்டு படிக்கணும்னு அவசியமில்லாம போயிருக்கும்.

அவிய்ங்க ராசா said...

//////////////////////////////
jagadeesh said...
ponga! ilakanamaway illa. better luck next time! (we will not leave you until you do)
19 June 2011 7:44 PM
//////////////////////////////////
ஆஹா..ஆரம்பிச்சிட்டீங்களா...)))

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
balaji said...
Good Review. But i am eagerly expecting Avan Ivan Review from you :-)
19 June 2011 8:23 PM
/////////////////////////
கண்டிப்பா பாலாஜி...

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
தமிழ்வாசி - Prakash said...
கடைசி வரியை முதல்லயே சொல்லியிருக்கலாம்ல... இம்புட்டு படிக்கணும்னு அவசியமில்லாம போயிருக்கும்.
20 June 2011 4:02 AM
//////////////////////////
அப்புறம் எப்படி முழுசா படிப்பீங்கல்லாம்..))

Anonymous said...

neenga mattum dhaan sir padam nalla irukkunu solli erukeenga.thanks. padam paarkanum

Anonymous said...

சூப்பர் சார்

Anonymous said...

give labels to your posts...give a short introduction below header

Post a Comment