Monday 11 April, 2011

ஓட்டுப்போடப் போவதற்கு முன்பு ஒரு நிமிடம்…

இந்த கோவாலுக்கு, அப்படியே ஜெராக்ஸ் எடுத்துவிட்டமாதிரி இருக்காண்ணே பயபுள்ள கிறுக்கு சுப்பையா..கோவாலு பேசியே கொல்லுவான், இந்த பயபுள்ள கிறுக்குத்தனமா கேள்வி கேட்டே கொல்லுவாண்ணே.. எந்த பேயாவது காலங்காத்தால 4 மணிக்கு வந்து கேள்வி கேட்பானா..இவன் கேக்குறான்..நம்மளே, கலைஞர் வருவாரா, ஜெயாம்மா வருவாரான்னு பயத்துல, எப்போதும் வர்ற நயன்தாரா கனவே வராம, கொல்லங்குடி கருப்பாயி வந்து ஸ்மைல் பண்ணுறப்பய லைட்டா டவுட் ஆனேன்.ஆஹா..இன்னிக்கு ஏதோ நடக்கப்போகுதுன்னு..பய, காலங்காத்தால 4 மணிக்கு வந்து கதவை தட்டுறான்..

“ராசா சார்..ராசா சார்..எந்திருங்க சார்..4 மணிக்கு என்ன தூக்கம்..”

“அடப்பாவி கிறுக்கு சுப்பையா..4 மணிக்கு ஏண்டா வந்து உசிர வாங்குற..”

“சார்….ஒரு ஹெல்ப்..ஓட்டு போடப் போறப்ப, என்னையும் கூட்டிட்டு போங்க சார்..”

“சுப்பையா..கிறுக்குத்தனமா கேக்காத..நம்ம எப்படிடா ஓட்டு போடமுடியும்..இங்கல்ல இருக்கோம்…”

“ஓ..அப்படில்ல..மறந்துருச்சு..சார்..எங்க ஓட்டு போடப்போறீங்க..”

“டே..கால்ங்காத்தால கொலைவெறிய கிளப்பாத..ஓடிப் போயிடு..”

“சார்..இன்னிக்கு சூடா இருக்கார்போல தெரியுது..தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ..”

“ஆஹா..சுப்பையா..இப்பவாது தெரிஞ்சுதே..ஆமா..உனக்கு ஒரு நட்புபேய் இருக்குமே..கோவாலு..எங்க அவன்..”

“அவன் கிடக்குறான் சார்..கிறுக்குப்பய..நீங்க சொல்லுங்க சார்..ஓட்டுபோடுற மாதிரி, ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுச்சுனா, எங்க ஓட்டு போடுவீங்க..”

“வேற யாரு கலைஞருக்குதான்…”

அதுவரைக்கும் அமைதியா இருந்தவன் டென்சனாயிட்டான்..

“போடா ராசா..தமிழின துரோகி..தமிழ்நாட்டை அழிக்குறதுல அப்படி என்னடா ஒரு சந்தோசம்..”

அப்படியே அதிர்ச்சியாகிட்டேண்ணே..அவனையே பார்க்குறேன்..பயபுள்ள அமைதியாகி, அவனே பேசுறான்..

“சாரி..ராசா சார்..கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்..என்ன சார், திமுகவுக்கா உங்கள் ஓட்டு..குடும்ப அரசியல் பண்ணுறாங்க..2ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழல், சட்ட ஒழுங்கு கெட்டுப்போச்சு..ஈழ்த்தமிழர் பிரச்சனையில் எதுவுமே பண்ணல.. இந்த முறை திமுகவுக்கு ஓட்டு போட்டீங்கன்னா மவனே கையில இருக்குற கத்திய வைச்சு எதையாவது சம்பவம் பண்ணிடுவேன்..”

ஆத்தி ஆடிப்போயிட்டேண்ணே..ஆஹா..கிறுக்கு பயபுள்ள, விளையாட்டுத்தனமா ஏதாவது பண்ணுனாலும் பண்ணுவாங்கிற பயத்துல எனக்கு குலையே நடுங்கிருச்சு..

“ஆஹா..சுப்பையா..அப்படி எதுவும் பண்ணிராதடா..நான் ஓட்டை அம்மாவுக்கே போட்டுறேன்..”

“சார்..என்னைய விட கிறுக்குப்பயலா இருப்பீங்க போல..அம்மாவுக்கு ஓட்டுப்போடுறதும், குடும்பத்தோடு தற்கொலை பண்ணிக்குறதும் ஒன்னு சார்..”

“எப்படி சொல்லுற..”

“சார்..அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டா, அவ்வளவுதான், தமிழகத்தை கேக்கு வெட்டுற மாதிரி..கூறுபோட்டு வித்துருவாயிங்க..2ஜீ என்ன, 4ஜீ, 5ஜீக்கு மேல போகும்..இதுக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் மறந்துட்டீங்களா..”

"ஐயோ..ஆமாண்டா..நான் வேணா, பாஜ வுக்கு போடட்டா..”

“பாஜ வா..அப்படின்னா..”

“கிழிஞ்சது போ..ம்..இப்ப பாரு..எங்க ஊருல இருக்குற ஒரு சுயேச்சைக்கு ஓட்டுப்போடப்போறேன்,,”

“சார்..ஓட்டை ஏன் சார் இப்படி வேஸ்ட் பண்ணுறீங்க..இப்படி யாருக்காவது ஓட்டு போட்ட ஓட்டு பிரிஞ்சுரும் சார்..”

“ஓ..அப்படி ஒன்னு இருக்குல்ல..ம்..ஆஹா..இருக்கவே இருக்கு

49ஓ..அதுல போட்டுருவோம்..”

“சார்..49ஓ வுக்கு நீங்க பார்ம் எல்லாம் பில்லப் பண்ணி..ரொம்ப டைம் வேஸ்ட் சார்..அதுவும் யாருக்காவது ஓட்டுப்போட்டோம்னு ஒரு மனநிம்மதி இருக்காது பாருங்க..”

“டே..கிறுக்கு சுப்பையா..குழப்பாதே..இப்ப எங்கதான் ஓட்டுப் போடணும்..”

“யோசிங்க சார்..இது நாட்டோட எதிர்காலம்..நம்ம இளைய தலைமுறையினருக்கு நாம் கொடுக்கப்போகும் சந்தர்ப்பம்..தமிழக அரசியலையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு அனுபவம்..எடுத்தோம் கவிழ்த்தோம்னு தீர்மானிக்க முடியாது..யோசிங்க..உங்களுக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் தர்றேன்..”

“அட சுப்பையா..என்னடா கேம்ஷோவில சொல்லுற மாதிரி சொல்லுற..வெயிட் பண்ணுடா..யோசிக்குறேன்..”

நானும் பத்து நிமிஷம் யோசிக்கிறேன்…ஒன்னும் என் அறிவுக்கு எட்டலை..இலையதலைவலி சாரி..இளையதளபதி டாக்குடரு விசய் வேற நிக்கலையா..எனக்கு குழப்பம் இன்னும் ஜாஸ்தி ஆகிடுச்சு..ம்..எங்க ஓட்டு போடலாம்…ம்..ஹீம்..டென்சனாகி கிறுக்கு சுப்பையாகிட்டேயே கேட்டேன்..

“சுப்பையா..ஒன்னும் புரியலைடா..நீயே சொல்லு..”

“சார்..நல்லா யோசிங்க சார்..இன்னும் வேணா டைம் எடுத்துக்குங்க..”

“இல்ல சுப்பையா..இதுக்கு மேல யோசிச்சா, டாப்பு கழண்டுரும்..நியே சொல்லு..எங்க ஓட்டுப்போடுறது..”

“இன்னொருவாட்டி கேளுங்க..”

“அடேய்..எங்க ஓட்டுபோடுறது..எங்க ஓட்டுபோடுறது..”

பயபுள்ள கூலா சொல்லுறான்..

“என்ன சார்..ஆளு இம்புட்டு வளர்ந்துருக்கீங்க..இது கூடவா தெரியாது..ஓட்டு எங்க போடணும்..ஓட்டுப்பெட்டிலதான்….”

காலங்காத்தால 4 மணிக்கு ஒரு கொலை விழுந்து பார்த்துருக்கீங்க…????

1 comment:

ttpian said...

துக்ளக் சோ தி.மு.க.வில் இணைந்தார்!
பெரியார் பஜனை மேடம் நிர்வாகி வீரமணி சாமிகளின் கோரிக்கையை ஏற்று கலைஜர் பூணூல் போடும் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்ததை அடுத்து ,சோ தி.மு.க.வில்
இணைந்தார்!
..இதை அடுத்து, தினமலம் ரமேசும்,மண்டு ராமும் பார்த்தசாரதி கோவிலில் பஜனை செய்வதோடு, கொளைஜனுக்கு திவ்ய பிரபந்த திருடன் என்ற பட்டம் வழங்க
ஏற்பாடு செய்துள்ளார்கள்!

Post a Comment