Saturday 13 November, 2010

என்கௌண்டர்(18+)

“வாடா..கிளம்பு..இன்னைக்கு உனக்கு பரலோகம்தான்..”

பூட்ஸ் காலால் முகத்தில் உதை விழுந்தபோது எனக்கு வலிக்கவில்லை. எல்லாம் மறத்து போயிருந்தது..

“சாவுடா..நாயே..நீயெல்லாம் மனுசனடா..த்தூ…பச்சை குழந்தையைப் போயி கொன்னிருக்கேயேடா..மனசாட்சியே இல்லை..” முகத்தில் உமிழ்ந்தார்..துடைத்துக் கொண்டேன்.

“அங்கிள்..என்னை விட்டுருங்க..அங்கிள்…” இன்னும் அந்த குழந்தையின் சத்தம் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த சத்தம்..இதுவரை என்னை இரவுகளில் தூங்கவிடவில்லை. இப்போது பகலிலும்..

எனக்கு மன்னிப்பே இல்லை. மனதளவில் எப்போதோ இறந்துபோய்விட்டேன். எப்போதும் நான் வந்தால் ஓடிவந்து என்னை கட்டிகொள்ளும் மனைவி, கன்னத்தில் அறைந்தாள். “த்தூ.. சாவுயா..” என்று துப்பினாள்..”நீதான் என் உலகம்..” இந்த வார்த்தைகளைத் தவிர அவள் வாயில் இருந்து எந்த வார்த்தையும் கேட்டதில்லை. அனைத்து திட்டுகளையும் அன்றுதான் பேசினாள். முடிவாக சொல்லினாள்..”இவனை தூக்கில போடுங்க சார்..இவன் கட்டுன தாலி எனக்கு தேவையில்லை..” சிறைக்கு போகும்முன் நான் கடைசியாக கேட்ட வார்த்தைகள். அதன் பின்பு, எதுவும் எனக்கு கேட்கவில்லை.

தரதரவென்று இழுத்துகொண்டு போய் வண்டியில் ஏத்தினார்கள். எப்போதும் என்னோடு வரும் காவலர்களுக்கு பதிலாய், புதிதாக 4 காவலர்கள். அனைவரும் இடுப்பில் பிஸ்டல் சொருகியிருந்தார்கள். எனக்கு புரிந்துபோனது. என்கவுண்டர். முதல்முதலாக சந்தோசப்பட்டேன். இன்று எனக்கு விடுதலை. இந்த நரகவாழ்க்கையிலிருந்து. அந்த பிஞ்சுகளை கொலை செய்தபோது கூட என் கைநடுங்கியது. இப்போது நடுங்கவில்லை. சாவை எதிர்நோக்கியிருந்தேன். நிறைய நாட்களுக்கு பின்பு சிரித்தேன்.

“பாருங்க சார்..நாய்க்கு சிரிப்பை..இவனையெல்லாம் மரியாதையா சுடக்கூடாது சார்..ஓடவிட்டு சுடணும்..விடுங்க சார்..இங்கயே போட்டு தள்ளிரலாம்..”

“சும்மா இருக்கமாட்டீங்க….பிளானை சொதப்பிரக்கூடாது..” உயரதிகாரி அதட்டினார்..

வண்டி கிளம்பியது..

என் அருகில் அமர்ந்த காவலர் தள்ளி உக்கார்ந்துகொண்டார். என் கை உரசுவது கூட அவருக்கு பிடிக்கவில்லை அருவருப்பாக உணர்ந்தார். கண்களில் வெறுப்பு தெரிந்தது. அனைவர் முகத்திலும் ஒரு படபடப்பு இருந்தது. இன்னும் 20 நிமிடங்கள் தான். எல்லாம் முடிந்துவிடும்..பல்லை கடித்து கொண்டேன்.என் மனம் போலவே வண்டியும் தள்ளாடி சென்றது.ஒரு இடத்தில் நின்றது.

ஒருவர் தவிர அனைவரும் இறங்கினர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். அந்த ரோட்டில் யாருமே இல்லை. ஒரு ஈ காக்கா கூட..உயரதிகாரி அங்கு நின்றுகொண்டிருந்த நான்கு அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்டு கொண்டிருந்தார்..சரசரவென்று காரியம் நடந்தது. இரண்டு பேர் வண்டியின் முன்பக்கம் நின்று காவல் காத்து கொண்டனர். இரண்டுபேர் வண்டியின் பின்பக்கம் நின்று காவல்… அதிகாரி என்னிடம் வந்தார்..என் முகத்தை பார்க்ககூட அவர் விரும்பவில்லை.

“இறங்குடா..”.

இறங்கினேன்..என்னை பார்த்தார், ஒரு பூச்சி போல.. பிஸ்டல் பக்கம் கை சென்றது.

“ம்ம்..சரி..ஓடு..”

“ப்ச்..இல்லை சார்..இப்படியே போட்டிருங்க..பரவாயில்லை..”

அவர் கண்களில் சிறு குழப்பம் தெரிந்தது. ஓடி சென்று இன்னொரு அதிகாரியிடம் பேசினார்..தலையை ஆட்டினார்..எனக்கு பொறுமையில்லை. இதோ..இன்னும் 5 நிமிடம்தான்.. ஓடி என்னிடத்தில் வந்தார்..வந்த வேகத்தில் பிஸ்டலை எடுத்து என் தலையில் வைத்தார்..அப்போதுதான் அந்த எண்ணம் எனக்கு தோன்றியது..

“சார்..”

“என்ன..”

“ஒருநிமிசம் சார்,,கடைசியாய்..ஒரு தம் போட்டுக்குறனே..அடிச்சு ரொம்ப நாள் ஆச்சு சார்..ப்ளீஸ்..”

திரும்பவும் அவர் கண்களில் குழப்பம்..ஓடினார்..பேசினார்..தலையாட்டினார்..திரும்பி வந்தார்..கையில் ஒரு சிகரெட்..பத்த்வைத்து என்னிடம் தந்தார்..

ஆசையாய் வாங்கி அப்படியே இழுத்தேன். அந்த போதை அப்படியே என் நெஞ்சு கூட்டுக்குள் இறங்கியது..வாழ்க்கையின் கடைசி சிகரெட்..எப்படி இருக்கும்…அப்படியே சொர்க்கத்தில் இருப்பதாய் உணர்ந்தேன். அவசரம் அவசரமாய் இன்னும் இழுத்தேன். சிகரெட்டும் என்னை போலவே செத்துக் கொண்டிருந்தது.... அதற்கும் அன்று கடைசிதானே..அதுவும் என்னை வெறுப்பாய் சுட்டு தீர்ந்துபோனது.. ஆயத்தமானேன். திரும்பவும் பிஸ்டல் என் நெற்றிப்பொட்டில்.. அவருடைய கண்களை கவனித்தேன். பயம் தெரிந்தது. அவருக்கு ஏன்….எனக்கு புரியவில்லை. கைகளில் சின்ன நடுக்கம்..பாவம்..புதுசு போல..சிரித்து கொண்டேன்..

“சார்..”

இந்தமுறை கடுப்பாகி போனார்..

“இந்தவாட்டி என்னடா..”

“என் பொண்ணு சார்..நல்லா படிப்பா சார்..பர்ஸ்ட் ரேங்க்குதான் எடுப்பா..அவளைப் பார்த்தீங்கன்னா நல்லா படிக்க சொல்லுங்க சார்…”

இந்தமுறை அவர் விரல் டிரிக்கரை நோக்கி போக பல்லைக் கடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன்..

“ட்ட்ட்ரக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்……………..”

17 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதற்கு எப்படி கமெண்ட் போடுவதென்று எனக்கு தெரியவில்லை...

Prathap Kumar S. said...

கோவை என்கவுண்டருக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதிட்டீங்க போல...

மும்பைல 160 பேரை கொன்னவனை வச்சு சோறுபோட்டு தாலாட்டு பாடுனானுங்க,
இவனை என்கவுண்டர பண்றானுங்க... ஊருக்கு ஒரு சட்டம், ஆளுக்கொரு சட்டம் எதுவுமே புரியலே ராசாண்ணே...:((

சேலம் தேவா said...

கொஞ்சம் குழப்பமாதான் இருக்குண்ணே..!!

Thekkikattan|தெகா said...

ரொம்ப அழகா உணர்வுகளை உள்ளும், புறமுமாக போட்டிருக்கீங்க. ஓட்டும் போட்டுடுறேன், நிறைய பேரு வாசிக்கணும்.

Thekkikattan|தெகா said...

மக்களே இதையும் படிங்க... பதிவர்-வழக்கறிஞர் பிரபு ராஜதுரை புள்ளிவிபரங்களுடன் எழுதிய ஒரு கட்டுரை.

http://marchoflaw.blogspot.com/2010/11/blog-post_12.html

CrazyBugger said...

“என் பொண்ணு சார்..நல்லா படிப்பா சார்..பர்ஸ்ட் ரேங்க்குதான் எடுப்பா..அவளைப் பார்த்தீங்கன்னா நல்லா படிக்க சொல்லுங்க சார்…”

//Raasa annae, ithu thaan unga twist ah?

Enna kodumai sir...

அவிய்ங்க ராசா said...

///////////////////////
வெறும்பய said...
இதற்கு எப்படி கமெண்ட் போடுவதென்று எனக்கு தெரியவில்லை...
12 November 2010 10:24 PM
///////////////////////////
:(((( அல்லது :))))))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
கோவை என்கவுண்டருக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதிட்டீங்க போல...

மும்பைல 160 பேரை கொன்னவனை வச்சு சோறுபோட்டு தாலாட்டு பாடுனானுங்க,
இவனை என்கவுண்டர பண்றானுங்க... ஊருக்கு ஒரு சட்டம், ஆளுக்கொரு சட்டம் எதுவுமே புரியலே ராசாண்ணே...:((
12 November 2010 11:38 PM
/////////////////////////
எனக்கும் புரியலண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
சேலம் தேவா said...
கொஞ்சம் குழப்பமாதான் இருக்குண்ணே..!!
13 November 2010 2:50 AM
///////////////////////////
ஆமாண்ணே..

அவிய்ங்க ராசா said...

////////////////////////
Thekkikattan|தெகா said...
ரொம்ப அழகா உணர்வுகளை உள்ளும், புறமுமாக போட்டிருக்கீங்க. ஓட்டும் போட்டுடுறேன், நிறைய பேரு வாசிக்கணும்.
13 November 2010 6:55 AM
Thekkikattan|தெகா said...
மக்களே இதையும் படிங்க... பதிவர்-வழக்கறிஞர் பிரபு ராஜதுரை புள்ளிவிபரங்களுடன் எழுதிய ஒரு கட்டுரை.

http://marchoflaw.blogspot.com/2010/11/blog-post_12.html
13 November 2010 7:13 AM
/////////////////////////////
நன்றிண்ணே..

அவிய்ங்க ராசா said...

//////////////////////////
Maduraimalli said...
“என் பொண்ணு சார்..நல்லா படிப்பா சார்..பர்ஸ்ட் ரேங்க்குதான் எடுப்பா..அவளைப் பார்த்தீங்கன்னா நல்லா படிக்க சொல்லுங்க சார்…”

//Raasa annae, ithu thaan unga twist ah?

Enna kodumai sir...
13 November 2010 11:13 AM
///////////////////////
புரியலையே..???!!!!

Anonymous said...

Periya vithyasa virumbinnu nenappu.. Vettaikaranlla vijay ketta madiri.. sapidarathu... Nalla vayila varuthi

CrazyBugger said...

Periya vithyasa virumbinnu nenappu.. Vettaikaranlla vijay ketta madiri.. sapidarathu... Nalla vayila varuthi

// IPPO puriyutha?

'பரிவை' சே.குமார் said...

enna solrathu...?

அழகி said...

நீங்க என்ன ​சொல்ல வரீங்க?

அவிய்ங்க ராசா said...

//////////////////////
சே.குமார் said...
enna solrathu...?
14 November 2010 2:28 AM
அழகி said...
நீங்க என்ன ​சொல்ல வரீங்க?
14 November 2010 11:12 AM
//////////////////////
நன்றி குமார்..
அழகி,
சாகப்போகும் ஒருவனின் மனநிலையை பதிவு செய்ய நினைத்தேன்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Very good post Rasaanne.

Post a Comment