Saturday 7 February, 2015

என்னை அறிந்தால் – ஏமாற்றம்






தொடர்ச்சியாக இரண்டு வியாபார ரீதியிலான தோல்வி படங்கள் கொடுத்த இயக்குநரின் அடுத்த படைப்பு..கூடவே “தல” தல” என்று ரசிகர்களால் கொண்ட்டாடப்படும் அஜீத், இயக்குநரின் ஆஸ்தான இசையமைப்பாளர்..இப்படி ஒரு காம்பினேஷனில் கவுதம் மேனன் எப்படி எடுத்திருக்கவேண்டும்..”கவுதம் இஸ் பேக்” டா என்று சொல்லும் அளவுக்கு..ம்..ஹூம்..

படத்தின் கதையைப் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை..ஏனென்றால் இரண்டு நாட்கள் கழித்து உண்மைத்தமிழன் விமர்சனம் எழுதுவார்..அதில் அஜீத் நாலாவது சீனில் என்ன கலர் சட்டை போட்டிருந்தார் ரேஞ்சு அளவுக்கு இருக்கும்..படித்து கொள்ளுங்கள்..
இனி படத்தைப் பற்றி என்னுடைய விமர்சனங்கள்..

·         கவுதம் மேனன்..அதே இங்கிலீஷ் டயலாக்குகள்..வழவழவென்று ரசிக்க முடியாதபடி வசனங்கள்..ஏறக்குறைய முதல் பாதி முழுவதும் பயங்கர வசனங்கள்..பக்கத்து சீட்டில் இருந்தவர்..”இன்னாப்பா..ஒன்னும் பிரியலையே..” என்றபோது, ஏறக்குறைய நான் ஒரு ஜென்நிலையில் இருந்தேன்..புரிந்து கொண்டு அவரே தூங்கிவிட்டார்..
·        
          கெட்டவார்த்தைகள் சராமரி...அதுவும் அஜீத் பேசும்போது சென்சாரில் ம்யூட் பண்ணினால் கூட காதுக்குள்ள் “கொய்ங்க்” ன்னு கேட்கும்போது, நம்மளும் நாலு பேரை இப்படி திட்டவேண்டும் என்று வெறி ஏற்படுகிறது..
·       
          அனுஷ்கா வந்து போகிறார்.அவர் டயலாக் பேசும்போது, அப்படியே லேடி கவுதம்மேனன் பேசுவது போல் இருக்கிறது..முடியலைப்பா..
·      
         அஜீத் பற்றி சொல்வதறகு அவ்வளவு பெரிதாக ஒன்றுமில்லை..வழக்கம்போல பஞ்ச் டயலாக்குகள், ஹீரோயிசம் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார்..ஆனால் போலிஸ் ஆபிசருக்குண்டான அந்த மிடுக்கு மிஸ்ஸிங்க் சாரே...
·    
          இந்த கதையில் எதற்கு அனுஷ்கா, அந்த குட்டிப்பாப்பா என்று தெரியவில்லை..குட்டிப்பாப்பாவுக்கும், அஜீத்துக்கும் உள்ள பாசம் ஒரு இம்பாக்டையும் ஏற்படுத்தவில்லை..
·       
          படத்தின் மிகப்பெரிய் ஆறுதல் அருண்விஜய்..மனிதர்..அவ்வளவு வெறியையும் தேக்கிவைத்திருப்பார் போல..பின்னி பெடலெடுக்கிறார்..அதுவும் கடைசி இருபது நிமிடங்களில் அவருக்கும், அஜீத்துக்கும் உள்ள சேசிங்க்..கிளைமாக்ஸ் காட்சி என்று அதகளம் பண்ணியிருக்கிறார்..முதல் காட்சி முடிந்து அவர் அழுததின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது..வெல்கம் பேக் அருண் விஜய்..
·        
         விவேக் என்று ஒரு காமெடி நடிகர் இருந்தார் என்று கூடிய சீக்கிரம் எழுதவைத்துவிடுவார்களோ என்று கஷ்டமாக இருக்கிறது..அப்படி வேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள்
·      
         அதற்காக படம் வேஸ்ட், மொக்கை என்று சொல்லும் அளவுக்கெல்லாம் நான் கல்நெஞ்சக்காரன் இல்லீங்க..கடைசி அந்த 20 நிமிடங்கள் செம பரபர...சீட்டின் நுனியில் உக்கார வைத்துவிடுகிறார் இயக்குநர்..அதுவும் அருண்விஜய், அஜீத் இடையேயான டயலாக்குகள், மைண்ட் கேம்..அனைத்தும் கிளாஸ் அண்ட் மாஸ்.
·    
         ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் பிண்ணனி இசை, பாடல்கள் நன்றாக உள்ளது..அதுவும் அதாரு உதாரு, மழை வரப்போகுதே..என்று பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்திருக்க, எடுத்தவிதம் அழகு...
·         
        தேவையில்லாமல் அனுஷ்கா, குட்டிப்பாப்பா, திரிஷா, டயலாக்குகள் என்று எடுக்காமல், அருண்விஜய்-அஜீத், துரோகம், போட்டி சேசிங்க் என்று முதல்பாதியிலேயே ஆரம்பித்திருந்தால், படம் எப்படி இருந்திருக்கும்..இன்னொரு காக்க காக்க போல்..அதுவும் ஸ்டைலிஷான இயக்குநரின் கைவண்ணத்தில்..ம்..மிஸ் பண்ணிட்டீங்களே கவுதம்..

இறுதியாக ஒரு மெல்லிய கோட்டின் அந்தப்பக்கமும் போகாமல், இந்தபக்கமும் போகாமல், கோட்டின் மேலேயே பயணித்திருக்கும் கவுதம் மேனன் இஸ் பேக் என்று சொல்ல முடியாதது வருத்தமே..

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று..
தாங்கள் சொல்வது போல.. கொஞ்சம் வெறுப்புத்தான் படம்... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

தங்கள் பார்வையில் விமர்சனம் நன்று...

தனிமரம் said...

தங்களின் கருத்து இது.பகிர்வுக்கு நன்றி.

செங்கதிரோன் said...

Why nobody openly comment against this movie.. It's utter waste movie ..

thamizh said...

Raja Annae unga blog 3 days munnadi than parthen. Unga first pathivu varai padichu madicha chu . Really superb. Adhigam ezhuthungal please.

Post a Comment