Wednesday 24 April, 2013

ஐ ஆம் பேக்...





ஆமா..பெரிய அஜீத்துன்னு நினைப்பு அப்படின்னு யாருண்ணே அங்கிட்டு முணுமுணுக்கிறது..பிச்சுப்புடுவேன்... எல்லாரும் கொஞ்சம் காதை மூடிக்கிங்க..


ஐ ஆம் பேக்....


நோ..நோ..நோ...அதாவது நான் பேக்கு இல்லை..அதாவது..ஐ ஆம் பேக்..


அதாவதுண்ணே..நான் திரும்ப வந்துட்டேன்..பதிவுலகத்துக்கு....


ஆமா..இவரு பெரிய கப்பல் வியாபாரி..இரண்டு மாசம் பிசினஸ் டிரிப்பு போய், நாலு கப்பலை வித்துட்டு, திரும்ப பதிவுலகத்துக்கு வந்துருக்காரு அப்படின்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லலாம்..அதெல்லாம் துடைச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்ல...


கடைசியா பதிவு எழுதி இரண்டு மாசம் ஆகுது..அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருந்த அப்படின்னு கேக்கலாம்..நல்லா கேட்டுக்குங்க..


1) தூங்கினேன்..

2) சாப்பிட்டேன்..
3) ஆபிஸ் போனேன்..
4) தூங்கினேன்..
5) சாப்பிட்டேன்..

ங்கொய்யால, இரணடு மாசததுல இதைத் தவிர எதையும் பண்ணல..உண்மைய சொல்லப்போனா , எழுதி என்னத்த பண்ணப்போறோமுன்னு ஒரு அலுப்புதான்..அவிய்ங்க பிளாக்க தொறந்து கூட  நொம்ப நாளாகுதுன்னா பாருங்களேன்..நேத்தைக்கு இண்டர்நெட்ட ஓபன் பண்ணுறேன்..சடாருன்னு நம்ம பிளாக்கு வந்து நிக்குது....அப்பத்தான் "ஆஹா..நம்மளும் பெரிய எழுத்தாளாரா இருந்துருக்கோமுன்னு நினைப்பே வந்தது..ஆஹா..நம்ம இல்லாம பதிவுலகம் தவிச்சு தண்னி குடிச்சுருக்குமேன்னு அவசரம் அவசரமா தமிழ்மணம் ஓபன் பண்ணி பார்க்குறேன்.."விஜய்காந்து வீட்டு முன்னாடி சரிதா உண்ணாவிரத போராட்டம்" அப்படின்னு இருக்கு...


ஆஹா..என்னய்யா இது..விஜய்காந்து வீட்டு முன்னாடி எதுக்குய்யா சரிதா உண்ணாவிரதம் இருக்கணும்னு..ஒருவேளை விசயகாந்து பையன் நடிக்குற மாதிரி இருந்தாப்புல..அவருக்கு ஜோடியா நடிக்கணும்னு சரிதா உண்ணாவிரதம் இருக்குறாங்களான்னு ஒரு டவுட்டு..ங்கொய்யால ஓபன் பண்ணி பார்க்குறேன்..விஜய்காந்து ன்னு பெயர்கொண்ட 20 வயது இளைஞர் வீட்டுமுன்னாடி, சரிதா அப்படிங்குற ஒரு பொண்ணு உண்ணாவிரத போராட்டம் நடத்துறாங்களாம்..


அப்ப முடிவு பண்ணினேன்..திரும்பவும் நம்ம பிளாக்கு எழுதுறோம்டா..இல்லைண்ணா, இந்த பதிவுலகத்தை யாரும் காப்பாத்த முடியாது.. 


நோ..நோ..நீங்களெல்லாம் என்னதான் "திரும்ப வந்திராதீங்க"ன்னு மெயில் போட்டாலும், நான் வர்றத யாராலும் தடுக்கமுடியாது..


ஏன்னா..நான் ஒருதடவ முடிவு பண்ணிட்டா...என் பேச்சை நானே கேட்க மாட்டேன்..ஏன்னா பேசிக்கலா நான் ஒரு சோம்பேறி...



14 comments:

Anonymous said...

welcome back

kumar

Anonymous said...

anne

enga poiteenga..

neenga illama inga neraya blogger's ku kuliru vittu pochu..

vandhuteenga illa..

ini vettai arambam than..... :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாங்க... நல்லதா நாலு விஷயம் சொல்லுங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

Welcome...

Unknown said...

நான் ரொம்ப நாளா கோபால பார்க்கமா சோகமாயிட்டேன் அவர திரும்பி வர சொல்லி பதிவு கூட போட்டேன்ன்னே

அமுதா கிருஷ்ணா said...

welcom back(u)

அவிய்ங்க ராசா said...

நன்றிங்கோ...உங்கள் அன்பிற்காவது, வாரத்திற்கு ஒரு பதிவு எழுதுவேன்..நன்றி..

வரதராஜலு .பூ said...

U returned with a bang.

Welcome Back Sir.

கார்த்திக் சரவணன் said...

வாங்க ராசா... வாங்க....

Unknown said...

welcome back rasaa sir.. i am ur big fan;)

Dhatchana said...

rasa vandiya vidudengale....

bandhu said...

welcome back, Raja.. You were probably busy filing taxes..

CrazyBugger said...

Adangokka makka ingaeyuma

அவிய்ங்க ராசா said...

நன்றி வரதராஜுலு, ஸ்கூல் பையன், மதுமதி, தட்சணா, பந்து...

Post a Comment