பொதுவாக எனக்கு அறிவுசெருக்கு உள்ளவர்களை பிடிப்பதில்லை. நீங்கள் திட்டினாலும் பரவாயில்லை, இந்த காரணத்திற்காகவே எழுத்தாளர் சுஜாதா, பாலகுமாரன், இளையராஜா போன்றவர்களை பிடிப்பதில்லை. ஆனால் அவருடைய படைப்புகளை அல்ல. “தயவு செய்து இனிமேல் புத்தகங்களை பரிசாக அனுப்பாதீர்கள் ” என்று சுஜாதா சொல்லியபோது, அவரை பார்க்கவேண்டுமென்று எனக்கிருந்த ஆர்வம் சடுதியில் மறைந்து போனது. ஆனால் கடைசியில் அவர் இறந்த பின்பு புகைப்படத்தைதான் பார்க்க முடிந்தது. அதுபோல்தான் இளையராஜா. நான் பண்ணுவதுதான் இசை என்று சொல்லியபோது, கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால், அதற்காக இரவு வேளைகளில் அவருடைய பழைய பாடல்களைக் கேட்பதை நிறுத்தவில்லை. இன்னமும் அவருடைய இசைதான் எனக்கு தாலாட்டு. அதுபோல்தான் மிஷ்கின். அஞ்சாதே படத்தைப் பார்த்தபோது, அவர் மீதிருந்த ஆர்வம், அவருடைய சில பேச்சுகளை படிக்கும்போது சுத்தமாக போயிருந்தது. அதனால், “அப்படி என்னதான்யா எடுத்திருக்கான்” என்று ஒரு கோபத்துடன்தான் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
பல விமர்சனங்களை எல்லோரும் படித்திருப்பதால், திரும்பவும் கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. டைட்டில் கார்டிலிருந்து இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் ஆரம்பித்து விடுகிறது. அந்த இசை மெல்ல மெல்ல உங்கள் மனதை ஆக்ரமித்து காட்சிகளாக விரியும்போது மிஸ்கினின் ஆளுமை தொடங்குகிறது. ரேடியோ பெட்டியை உடைக்கும்போது சட்டென்று தொடங்கிய ஆச்சர்யம், கிளைமாக்ஸ் வரை தொடர்ந்து, முடிக்கும்போது கண்ணீர் துளியாக வருகிறது.
இந்த படத்தில் மிஸ்கின்ன் உடைத்த தமிழ்சினிமாவின் கிளிஷேக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிபட்ட கேமிரா கோணங்கள் இந்திய திரையுலகத்திற்கே புதுசு எனலாம். அடிக்கடி கால்கள் நடப்பதை கொண்டே காட்சிகளை விவரிக்கும் ஸ்டைலாகட்டும், கேமிராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு பிம்பங்களை நடமாடவிடும் ஸ்டைலாகட்டும், கதாபாத்திரங்களோடு கூடவே ஓடும் கேமிரா கோணங்களாகட்டும், மகேஷ் முத்துசாமி என்பவர் தமிழ்திரை உலகின் தவிர்க்கமுடியாத ஒளிப்பதிவாளராக போகிறார் என்பதற்கு சான்று
இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதை ஏதோ செய்வார்கள். பைக்கில் வரும் அந்த ஜப்பானிய குண்டர்கள். இளநீர் விற்கும் அந்த தாத்தா, வழிகாட்டும் ஊனமுற்றவர், ஹனிமூன் ஜோடிகள், ரோமியோக்கள், ஆங்கிலத்தில் பேசினால் அமைதியாகும் போலிஸ்காரர்கள், பாலியல் தொழில் பேசும் ஸ்னிக்தா, 12 நொடிகள் வரும் நாசர், 1 நிமிடம் வரும் ரோகிணி..இப்படி பல..அனைத்தும் படம் முடிந்தபின்பும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன. இன்னும் பலவருடங்களுக்கு, இந்த படம் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு பாடமாக இருக்கும்.
சிறுவனாக நடித்த அந்த சிறுவன் அஸ்வத், மனதை கவர்கிறான். வயதுக்கு மீறி இல்லாமல், சராசரி சிறுவனாகவே காட்டியிருப்பது சிறப்பு. மிஸ்கின் இந்த படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகர் விருது வாங்காவிட்டால்தான் ஆச்சர்யம். மனிதர் அனாசயமாக நடித்து தள்ளிவிட்டார். நிமிடத்தில் வரும் அழுகை, கோபம், சிரிப்பு, கண்ணீர்..அப்பப்பா..அதுவும் அம்மாவை பார்த்தவுடன், அவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனேன். சிறுவன் கோபத்தில் “மெண்டல்” என்று சொன்னவுடன், ஆற்றாமையால் அழும் அந்த நடிப்பு, உண்மையிலேயே அனைவரையும் அழவைக்கும்.
13 comments:
பதிவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html
good
//ராஜா நான் பண்ணுவதுதான் இசை என்று சொல்லியபோது//
உண்மை தான் அண்ணே.... அவர் படைக்கிறது இசை... இது நம்ம எல்லாத்துக்கும் அவரு ஆக்கி கொடுத்து இருக்குற படையல்ண்ணே...
குட்...
ரொம்பவே அழகா சொல்லி இருக்கீங்க......
Thala, romba unarchivasappattu yaeludhi irukkinga... Padam paatha baathippa?
baskar mani eppidi baloon mani aanaaru.. Nandhalala-2 thodakkama?
:))
When you listen to Ilaiyaraja it is like going home.
/////////////////////
PALANI said...
பதிவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html
29 November 2010 11:15 PM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
good
29 November 2010 11:20 PM
///////////////////////
வருகைக்கு நன்றி..)
///////////////////////////
taaru said...
//ராஜா நான் பண்ணுவதுதான் இசை என்று சொல்லியபோது//
உண்மை தான் அண்ணே.... அவர் படைக்கிறது இசை... இது நம்ம எல்லாத்துக்கும் அவரு ஆக்கி கொடுத்து இருக்குற படையல்ண்ணே...
குட்...
ரொம்பவே அழகா சொல்லி இருக்கீங்க......
30 November 2010 12:06 AM
/////////////////////////////
நன்ரி தாரு..
////////////////////////
MaduraiMalli said...
Thala, romba unarchivasappattu yaeludhi irukkinga... Padam paatha baathippa?
30 November 2010 12:20 AM
MaduraiMalli said...
baskar mani eppidi baloon mani aanaaru.. Nandhalala-2 thodakkama?
30 November 2010 5:17 AM
//////////////////////////
குசும்பு ரொம்ப ஜாஸ்தியாகிப் போச்சு..)))
//////////////////
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
:))
30 November 2010 6:21 AM
///////////////////////
நன்றி ஷங்கர்..
/////////////////////////
prabhakar said...
When you listen to Ilaiyaraja it is like going home.
30 November 2010 11:06 AM
/////////////////////////
நன்றி..அதேதான் என் கருத்தும்
Rathacharitram - dharitthiram
Surya Rockz..
Post a Comment