விஜய் டி.வி நடத்தும் நீயா நானா பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கருத்து பரிமாற்றத்துக்கான ஒரு களம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. விளம்பரத்துக்காக, அதில் நடைபெறும் கூத்துக்களை, அவ்வப்போது கிண்டல் அடிக்க தவறுவதில்லை.. அதே சமயத்தில், சமூகம் பற்றிய பலரது பார்வைகளை மறுபரிசீலனை செய்ய, இந்த நிகழ்ச்சி பெரும் பங்காற்றி இருக்கிறது என்பதே உண்மை…
என்ன சொல்லவருகிறார்கள் என்று கேட்பதற்காவது கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்த்துவிடுவேன். இந்த பொங்கல் அன்று எடுத்த ஒரு கருத்துமோதல், பல சிந்தனைகளை கிளறிவிட்டது.
நகரத்தில் உள்ள பெண்களை, திருமணம் செய்ய ஆண்கள் ஏன் தயங்குகிறார்கள்….இதுவே அன்றைய தலைப்பு
முதல் விவாதமே, படு அதிர்ச்சியாக இருந்தது. ஆண்கள் எவ்வளவு “வீக்காக” அல்லது “பிற்போக்குத்தனமாக” அல்லது “பொம்மைகளாக” இருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டியது, இந்தக் கேள்வி…”உங்களுக்கு வரப்போகும்
பெண் எப்படி இருக்கவேண்டும்…”. அதற்கு ஆண்கள் சொல்லிய பதில் இருக்கிறதே….ஒருத்தர் கூட, என் இன்ப துன்பத்தை பங்கிட்டு கொள்ள ஒரு துணைவி வேண்டும் என்று சொல்லவில்லை. வந்த பதில் என்ன தெரியுமா…
“வீட்டு வேலையெல்லாம் பார்த்துக்கணும்…”
“எங்க அம்மா, அப்பாவை நல்லா கவனிச்சுக்கணும்…”
“மாடர்ன் டிரன்ஸ் போடக்கூடாது..”
“தலை குனிஞ்சு தான் நடக்கணும்..”
“சேலை தான் கட்டிக்கணும்..ஆனா நான் விருப்பப்பட்டா ஜீன்ஸ் போட்டுக்கலாம்..அதுவும் நாலு சுவத்துக்குள்ள…”
யோவ்..என்னங்கையா..இது…கஷ்ட நஷ்டத்தில் பங்குபெற ஒரு துணைவி தேடுறீங்களா..அல்லது, வீட்டு வேலை செய்ய, ஒரு ரோபோர்ட் தேடுறீங்களா…எவ்வளவு பிற்போக்குத்தனம்..தன் தங்கை, தன் அம்மா எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..ஆனால் தனக்கு வரும் மனைவி தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது..எவ்வளவு ஆதிக்கத்தனம்…
அவர்களை குறை சொல்லி ஒரு பிரஜோயனம் இல்லை..நாம் அவ்வாறுதானே வளர்க்கப்பட்டிருக்கிறோம்…அப்பாவை பார்த்து தலைகுனிந்தே பேச பழக்கப்பட்ட அம்மாவை பார்த்துதானே வளர்ந்தோம். இந்த சமூகமே, அதைத்தானே சொல்லிக்கொடுத்திருக்கிறது…
அடப்பாவமே..பெண் என்ன அடிமையா..நான் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்வதற்கு..அதற்குதானா, அவர்கள் வீட்டில் அரும்பாடுபட்டு, திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். கோபிநாத் ஒரு தவறு செய்துவிட்டார். அந்த பெண்களிடமும் ஒரு கேள்வி கேட்டிருக்கவேண்டும்..உங்களுக்கு வரும் கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று……அப்போது தெரியும், மேலே உள்ள பதில்கள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று…
இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், ஒரு அன்பர் பேசியது தான்…முகத்தை ஒரு அலட்சியமாக வைத்துக்கொண்டு..
“இவுங்க எல்லாம், பைக்குல போவாங்க..தியேட்டருக்கு போவாங்க…அதெல்லாம் தப்பா தெரியாது..”
அடங்கொன்னியா..நாம் என்ன கற்காலத்திலயா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..ஏன் பெண்கள், ஆண்களோடு, பைக்கில் செல்லக்கூடாதா..திரைப்படத்துக்கு செல்லக்கூடாதா..உடனே கலாச்சாரம் கெட்டுப்போய்விடுமா..அங்கு இருந்த பெண், நாக்கை பிடுங்கி கொள்வது போன்று, இரண்டு கேள்விகள் கேட்க, அவரால் ஒரு வார்த்தை கூட அதற்கு மேல் பேசமுடியவில்லை. இதில் இன்னொரு நபர், திரைப்பட உதவி கேமிராமேனாம்..”கரும்பை ருசிக்கலாம்..ஆனால் சுமப்பது கடினம்” என்று
சொன்னபோது, ஆத்திரத்தின் உச்சிக்கே செல்ல நேர்ந்தது..என்ன ஒரு உவமை பாருங்கள்..அவர் எடுக்கும் படங்களும், இதுபோன்று பிற்போக்குத்தனமாகத்தானே இருக்கும்…
ஆனால், அங்குள்ள ஆண்கள் மட்டுமில்லை, இங்குள்ள பல ஆண்களும் அதே மனப்பான்மையில்தான் இருக்கிறோம். நல்லா,..மாடர்ன் டிரஸ் போட்ட பெண் பிரண்ட்ஸ் நிறைய வேண்டும்..எந்த எல்லை வரை சென்று சோசியலாக பழகும் பெண் நண்பிகள் நிறைய வேண்டும்..,திரைப்படங்களில் தொப்புள் காட்டும் நடிகைகள் வேண்டும்..ஆனால் தனக்கு வரும் மனைவி., அடக்கமாக, சேலை கட்டி, பராம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும்..குனிந்த தலை நிமிரக்கூடாது..எதிர்த்து பேசக்கூடாது..நாலு பேரு பார்க்குற
மாதிரி நடக்ககூடாது..எந்த ஊரு நியாய்ம்யா இது..
தயவுசெய்து,
பெண்களையும், சதையும், ஆன்மாகவும் உள்ள ஒரு உயிராக மதிப்போம். வெறும் சேலை கட்டிய அடிமைகளாகவும்,
பொம்மைகளாகவும், ரோபோக்களாகவும் அல்ல..ஏனென்றால், நம்மைப் பெற்றவளு, கூடப்பிறந்தவளும்,
ஒரு பெண்தான்….
அதைத்தான், அங்கு
சிறப்பு அழைப்பார்களாக பேச அழைக்கப்பட்ட, ஓவியாவும், ஷாலினியும், சாருவும் சொன்னர்கள்..ஆனாலும்,
இந்த கலவரத்துக்கு நடுவிலும், ஔவை கள் குடித்ததை பற்றி "நித்தியானந்தாவிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று சொன்னவரும், அவருடைய தொண்டர்களால், "வாழும் பெரியார்" என்று அழைக்கப்படுவரும், போன முறை கலந்து கொண்டபோது, பீஸ் கிடைக்காததால் "நீயா நானாவை தடை செய்ய வேண்டும்" என்று சொன்னவருமான சாரு சொன்ன டயலாக்குதான் இந்த
நூற்றாண்டின் செம காமெடி..
“குடிப்பழக்கத்தை
நான் என்றுமே ஆதரித்ததில்லை….”
அவருடைய தொண்டர்கள்,
இனிமேல் இவ்வாறு சொல்லக்கூடும்…
“தானே உக்கார்ந்தா தானைத்தலைவன் வாழ்க, வாழ்க…”
ஏனென்றால் எழுத்தாளர்
என்ன சொன்னாலும், கொண்டாட வேண்டுமல்லவா..இல்லையென்றால், தமிழ் எலக்கியத்திற்கு செய்த
துரோகமாகிவிடாதா..இந்நேரம் கேரளா, இல்லாட்டி பிரான்ஸ்சா இருந்தா….
“அடப்போங்கையா…”
தவறு செய்துவிட்டது
என்று தெரிந்தவுடனே, “யானோ அரசன்..யானே கள்வன்” என்று உயிர்நீத்த தமிழ்பரம்பரையில்
இருக்கிறோம் என்பதையே சிலநேரங்களில் நம்பமுடியவில்லை.