Saturday 3 March, 2012

கோவாலு கலந்துகொண்ட நீங்களும் வெல்லலாம் கோடி





நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி அமெரிக்காவில் நடப்பதை அறிந்து, புரச்சித்தளபதி, தமிழர்குல தங்கம்(பயபுள்ள இப்படிச் சொன்னாத்தேன், நொம்ப சந்தோசப்படுறான்) ஓடிப்புடித்து கலந்துகொண்டதன் நிகழ்ச்சித் தொகுப்பே இந்த பதிவு….

சூர்யா : வாங்க வணக்கம்..உங்க பேரு

கோவாலு : தன்னிகரில்லா தலைவன்..மாசு கலக்காத தங்கம்

சூரியா : ஸ்டாப்….எங்கிட்ட வைச்சுக்காத..ஒழுங்கா பேரச் சொல்லு..

கோவாலு : ஹி..ஹி..கோவாலு சார்..

சூர்யா : ங்கொய்யால..கோவாலுன்னு மொக்கை பேர வைச்சிக்கிட்டு பண்ணுற அலும்ப பாரு

கோவாலு : சார், ஒரு டவுட்டு

சூர்யா : கேளுங்க

கோவாலு : எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்..அப்படிங்குற கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்பிங்களா சார்..

சூர்யா : அது ஒரு கோடிக்கான கேள்வி..அதெல்லாம் கடைசியில தான்..அதுவரைக்கும் மிகவும் எளிமையாத்தான் இருக்கும்

கோவாலு : தேங்க்யூ சார்

சூர்யா : சரி கோவாலு..உங்களைப் பத்தி சொல்லுங்க..என்ன பண்ணுறீங்க..

கோவாலு : அய்யோ சார்..இப்படியெல்லாம் கேட்பீங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கலை சார்..நீங்க நடிச்ச அவன் இவன் படம் ஒன்பது தடவை பார்த்திருக்கேன் சார்..அதுவும், பெண் வேஷத்துல நீங்க கலக்கியிருப்பீங்க..

சூரியா(டென்சனாகி) : (ஒருவேளை காதும், மூளையும் அட் டயத்துல டமாராமாகியிருக்குமோ)..பரவாயில்லை கோவாலு..உங்கள் பொது அறிவு என்னை வியக்கவைக்கிறது..என்னைப் பத்தி சொல்லுங்க..

கோவாலு : ஊருப்பக்கத்துல கஷ்டப்படுற பேமியில இருந்து வந்தவன் சார் நானு..காலையில தண்ணி கிடைக்கலைன்னு, சாராயத்துலதான் கு

சூர்யா : யோவ்..கொல்லப்போறேன் பாரு

கோவாலு : குளிப்போமுன்னு சொல்லவந்தேன் சார்

சூர்யா : அவ்வளவு எளிமையா

கோவாலு : ஆமா சார்..காலங்காத்தால, 10 பூரி, ரெண்டு பொங்கல், 4 மெதுவடை..

சூர்யா : டோட்டல் பேமிலிக்கா

கோவாலு : இல்ல சார்..எனக்கு மட்டும்தான்..சும்மா ஸ்நாக்ஸ்சுக்கு..

சூர்யா : அடீங்க..நீங்க இப்படி ஒல்லியா இருக்குறதுக்கு காரணம் புரியுதுநிக்ழ்ச்சிக்கு போகலாமா

கோவாலு : எங்க சார் போவுறது..சானல்காரங்க உக்கார்ந்துதான் நிகழ்ச்சின்னு சொன்னாங்க..

சூர்யா : யோவ் லொல்லு கோவாலு..விட்டேன்ஒழுங்கா பர்ஸ்ட் கேள்விய கேட்டுக்கஉங்களுக்கான முதல் கேள்வி..

தமிழகத்தின் பொற்கால ஆட்சியில் கரண்டு கட்டு ஆவது, எவ்வளவு நிமிடம்

5 நிமிடம் B) 10 நிமிடம் C) 1 நிமிடம் D) கரண்டு கட்டு ஆவதே இல்லை

யோசித்து  பதில் சொல்லுங்கள்..யுவர் டைம் ஸ்டார்ட் நௌ

கோவாலு : சார்..அமெரிக்காவுல இருக்குற எனக்கு இப்படி ஒரு கஷ்டமானா கேள்வியா இருந்தா எப்படி சார்..அதுவுமில்ல சானல்காரயங்க இந்த கொஸ்டின கேப்பீங்கன்னு சொல்லவே இல்லையே..

சூரியா : நீங்க வேணுன்ன லைப் லைன யூஸ் பண்ணுங்களேன்

கோவாலு : ஓகே சார்..மதுரையில இருக்குற என் உயிர் நண்பன் ராசாவுக்கு போன் பண்ணுறேன்

(தொலைபேசுகிறார்)

கோவாலு : ராசா..நாந்தான் கோவாலு பேசுறேன்..

ராசா : டே கோவாலு..என்னடா காலங்காத்தால..டே..உனக்கு தெரியுமா..டாஸ்மார்க்க 11 மணிவரைக்கும் ஓபன் பண்ணி வைச்சிருக்காய்ங்க..செம குஜாலு..நீ மிஸ் பண்ணிட்டட்டா..

கோவாலு : ராசா..எங்கூட சூரியா இருக்காருடா..ஒரு கேள்வி கேக்குறேன் பதிலு சொல்லு..

ராசா : கண்டிப்பாடா..அதுக்கு முன்னாடி ரொம்ப இருட்டா இருக்கு..லைட்ட போடுறேன்..அய்யய்யோ..கரண்ட காணோமேடா….அய்யய்யோ..டே..மூக்கு கண்ணாடி வேற கீழே விழுந்துருச்சே..இந்த இருட்டுல கண்ணு தெரியலையே..அய்யய்யோ..ஒன்னும் தெரியலையே..

சூர்யா : டைம் அப்கோவாலு..உங்களுக்கான டைம் முடிந்தது..யோசித்து பதில் சொல்லுங்கள்

கோவாலு : என்ன சார்..இப்படி கேட்டுப்புட்டிங்க..(மிகவும் யோசிக்கிறார்..யோசித்து கடைசியாக,,) சரி சார்..ஆப்சன் D) கரண்டு கட்டு ஆவதே இல்லை

சூரியா : ஜீனியஸ்..லாக் பண்ணுங்க..வாவ் சரியான விடை..எப்படி கரெக்டா கண்டுபுடிச்சீங்க….

கோவாலு : ங்கொய்ய்யால தமிழ்நாட்டுல கரண்டுன்னு ஒன்னு இருந்தாதானே கட் ஆகும்..அதுதான் கண்ணுல பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொல்லுறாய்ங்களே..

சூர்யா : (பயத்துடன்..ஆஹா..வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிச்சுர்வான் போலிருக்கே) சரியான விடை..உங்களுக்கான ரெண்டாவது கேள்வி இதோ..

இந்தியாவின் பிரதமர் யார்
மன்மோகன் சிங்க் B) அன்னா ஹசாரே C) சோனியா காந்தி 4) இளைய தளபதி விஜய்

கோவாலு : யூ நோ..அய் ஆம் எ என்.ஆர்.ஐ..ஐ டோண்ட் நோ இண்டியா..ப்ளடி கண்ட்ரி…ஆல் பொல்யூசன்..கரெப்ஷன்…

சூர்யா : கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுடா வெண்ட்ரு..

கோவாலு : சார்..லைப் லைனு யூஸ் பண்ணிக்கலாம…

சூர்யா :  ஸ்யூர்..எந்த லைப் லைனு..

கோவாலு : 50 – 50.. ஆனா சார்..

சூர்யா : ஆனா..

கோவாலு : இந்த லைப் லைன 75-25 ஆ மாத்த முடியுமா..3 தவ்றான பதில தூக்கிட்டா நல்லா இருக்க..

சூரியா : பேசாம ஒன்னு பண்ணுவோம்..நீ இந்த சீட்டுக்கு வந்துரு..நீயே கேள்வி கேட்டுட்டு நீயே பதில் சொல்லிக்க..அப்படியே ஒரு கோடிய எடுத்துட்டு போயிரு..வெங்கம்பயலே…

கோவாலு : கோவிச்சுக்காதிங்க சார் : 50-50 யே யூஸ் பண்ணுங்க..

சூர்யா: ஓகே கோவாலு: இதோ உங்களுக்கான ஆப்சன்…

மன்மோகன் சிங்க் B) இளைய தளபதி விஜய்…

கோவாலு : ம்….A) மன்மோகன்சிங்க்

சூர்யா : வாவ்..கரெக்டான ஆன்சர்..பொது அறிவுல நீங்க எங்கயோ போயிட்டிங்க…எப்படி இதெல்லாம்..நிறைய புத்தகம் படிப்பீங்களா..

கோவாலு : ரொம்ப புக்ழாதிங்க சார்..கூச்சாம இருக்கு..சிம்பிள் மேட்டர் சார்..இளைய தளபதி விஜய் தமிழக முதல்வர்..அப்படி இருக்குறப்ப அவர் எப்படி பிரதமர் ஆக முடியும்..ஆக இருக்குறது..மன்மோகன்சிங்க்..அவராத்தான இருக்க முடியும்,.ஆமா ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்..யார் சார் மன்மோகன்சிங்க்..ஹர்பஜன்சிங்க் அண்ணனா….

சூர்யா : (டென்சனாகி) ங்கொய்யால..யோவ் விஜய் டிவி..அந்த கேமிராவை ஆப் பண்ணுய்யா..இன்னைக்கு செட்டுல ஒரு கொலை நடக்கப்போகுது..ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னு வெயிட்டுடா..என்று அங்கிருக்கும் கம்ப்யூட்டரை பிடிங்கி அடிக்கப் பாய

கோவாலு…தலைதெறிக்க ஓட..விளம்பர இடைவேளை இப்படித் தொடங்குகிறது..

(உலகத்துலேயே, லைவ்வாக ஒரு கொலை..உங்களுக்காக வழங்குவது….கொக்க கோலா..பெப்சி..மிரிண்டா..பேரண்லவ்லீ…ஸ்வீட் எடு கொண்டாடு..)

8 comments:

Jayadev Das said...

Nallaa irukku!!

மதுரை சரவணன் said...

vaalththukkal.. very interesting... vaai vittu siriththeen..

Unknown said...

உங்களுக்கு ஏன் சார் இந்த கொலைவெறி :-)))

முடியல.......

சரவணன் said...

கலக்கல் காமடி பாஸ்....கண்ட்னியூயூயூயூயூயூ..........!

Anonymous said...

super

அவிய்ங்க ராசா said...

நன்றி ஜெய், மதுரை சரவணன், சரவணன், கரிகாலன், அனானிமஸ் நண்பர்

rara said...

this is not a joke .

ILA (a) இளா said...

விவிசி

Post a Comment